இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2023
08:00

சிறு உதவி, பெரிய மாற்றம்!
வீட்டு பணிக்கு, ஒரு பெண்மணியை வேலைக்கு வைத்திருந்தேன். சில நாட்களாக, அவர் செய்யும் பணியில் ஒரு தொய்வு ஏற்பட்டது. நம்மால் முடிந்தால், உதவி செய்யலாமே என, என்னவென்று விசாரித்தேன்.
ஆரம்பத்தில் சொல்ல தயங்கிய அப்பெண், நான் கொஞ்சம் வற்புறுத்தியதால், 'மொத்தம் ஐந்து வீட்டில் வேலை பார்த்து வரும் சம்பளத்தில் தான், வீட்டு வாடகை, மின் கட்டணம் மற்றும் மளிகை பொருள் எல்லாம் வாங்குவேன்.

'சம்பள பணத்தை வீட்டில் எங்கு ஒளித்து வைத்தாலும், கணவர் மற்றும் பையன் மது வாங்க எடுத்துச் சென்று விடுகின்றனர். அதற்கு பயந்து, பக்கத்து வீட்டில் கொடுத்து வைத்தேன்.
'அவர்கள் செலவு செய்து விட்டு, தருவதாக சொல்லி, ஏமாற்றுகின்றனர். சில நேரம் வாடகை தர முடியாததால், வாசலில் வந்து நின்று திட்டுகிறார், வீட்டு உரிமையாளர். நான் எவ்வளவு உழைத்தும், கடைசியில் அவமானமே மிஞ்சுகிறது...' என கூறி, கண்ணீர் விட்டு அழுதார்.
'இது ஒரு சின்ன பிரச்னை. வேலை பார்க்கும் ஒவ்வொரு வீட்டிலும், சம்பளத்துக்கு பதிலாக அவர்களையே நேரடியாக ஒவ்வொன்றுக்கும் கட்டணத்தை செலுத்த சொல்லி விடுங்கள்.
'உதாரணமாக, மளிகை கடைக்காரர் தெரிந்தவர் தான். அவரின், 'ஜி பே' அல்லது 'போன் பே' நம்பர் வாங்கி வந்தால், உன் சம்பளத்தை, அவருக்கு, நான் நேரடியாக பண பரிமாற்றம் செய்கிறேன். ஏதாவது கூட குறைச்சல் இருந்தால், அடுத்த மாதம் கழித்து கொள்ளலாம். முடிந்தவரை நேரடி பண பரிவர்த்தனையை தவிர்க்கவும்...' என, யோசனை கூறினேன்.
அப்பெண் வேலை செய்யும் எல்லார் வீட்டினரும், 'நேரடி பண பரிவர்த்தனையை விட, இது மிகவும் எளிது...' என்றனராம். இது நடந்த சில நாட்களில், 'நார்மல்' ஆனார்; அவர் செய்யும் வேலையும் மிக நேர்த்தியாக இருந்தது. சிறிய யோசனை, ஒரு குடும்பத்தின் நிலையை மாற்றியது, மனதுக்கு இதமாக இருந்தது.
— ரம்யா மணிகண்டன், கோவை.

மலிவு விலையில் மதிய உணவு!
பனியன் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். அவினாசி அருகே, தனியார் பெட்ரோல் பங்கில், 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதிய உணவை, 20 ரூபாய் வீதம், 1,000 பேருக்கு கொடுக்கின்றனர்.
தொழிலாளர்கள், நடை பாதை வியாபாரிகள், வண்டி இழுப்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கல்லுாரி மாணவர்கள் என, அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக, மலிவு விலையில், உணவு கிடைப்பதால், மகிழ்ச்சியாக உணவருந்திச் செல்கின்றனர்.
இலவசங்களை தவிர்த்து, மலிவு விலையில் கிடைப்பதை, மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு, இது ஒரு எடுத்துக்காட்டு. இலவசமாக கொடுப்பதை அவமானமாகவும், சுய மரியாதைக்கு இழுக்காகவும் நினைக்கும் மனிதர்களுக்கு, மலிவு விலையில் கொடுப்பது, ஒரு வரம் தான்.
இது, அனைத்து ஊர்களிலும் பரவ வேண்டும். எந்த ஒரு லாப நோக்கத்தையும் எதிர்பார்க்காமல் உணவு கொடுக்கும், இதுபோன்ற நிறுவனம் மற்றும் அறக்கட்டளைகளை, நாம் வரவேற்க வேண்டும்.
— பி. சதீஸ்குமார், திருப்பூர்.

முயன்றால் முடியும்!
அண்மையில், 'ஷாப்பிங் மாலில்' வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி, வெளியே வந்தேன். மாலின் முகப்பில், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது, ஒரு தேனீர் கடை. களைப்பு தீர, ஒரு காபி அருந்த சென்றேன்.
அந்தக் கடையில், மூன்று திருநங்கையரில் ஒருவர், மாஸ்டர் மற்றும் கேஷியராகவும்; இன்னொருவர், சப்ளையர்; அடுத்தவர் கிளீனராகவும், முழு ஈடுபாட்டோடு பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
அதுமட்டுமின்றி, திருநங்கையரின் கடை என்று, யாரும் முகம் சுளிக்காமல், ஆர்வத்துடன் காபி மற்றும் தேனீரை வாங்கி, அருந்தி ஆதரவளித்தது, மகிழ்ச்சியாக இருந்தது. வாடிக்கையாளர்களை கனிவோடு கவனித்து, நாகரிகமாக நடந்துகொண்ட விதம், அவர்கள் மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்தது.
முயன்றால் முடியும் என்பதற்கேற்ப, தங்கள் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்றி, வாழ்க்கையில் முன்னேற, சுயதொழிலில் உழைத்திடும் திருநங்கையரை, மனதார வாழ்த்தி வந்தேன்!
-சி.அருள்மொழி, கோவை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
R Ravikumar - chennai ,இந்தியா
14-மார்ச்-202313:59:38 IST Report Abuse
R Ravikumar , படிப்பின் பலம் இதன் மூலம் தான் புரிந்து கொள்ள முடியும் . எழுத படிக்க தெரிந்தாலே இதில் வெற்றி . நமது வங்கி ATM தமிழில் பிரிவு உண்டு , அதனை பயன்படுத்தி நாம் பணம் எடுக்கலாம் . பெரும்பாலான கிராமத்து முதிய , மத்திம வயது பெண்கள் தாராளமாக இதனை கற்று கொண்டு செயல்படுத்தலாம் . படித்த வயதான பெண்கள் கூட வங்கிகளில் ATM பணம் எடுக்க பயப்படுகிறார்கள் . பழகிக்கொண்டால் அதுவே வெற்றி . என் அம்மாவிற்கு இதனை சொல்லி கொடுத்தேன் .. அவர்களுக்கு ரொம்பவும் சந்தோசம் . எனக்கு ஒரு அரை மணிநேரம் அது ,, ஆனால் அவர்களுக்கு வாழ்நாள் சாதனை போல ஒரு மகிழ்ச்சி . கற்றலினால் வரும் வளர்ச்சியை விட ஒரு முன்னேற்றம் இருக்கமுடியாது . கற்றுக்கொண்டால் குற்றமில்லை . வயது தடையில்லை .
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
14-மார்ச்-202313:50:02 IST Report Abuse
R Ravikumar பத்து வருடம் முன்பு, ( product Inspection ) வந்த பொழுது , கொல்கத்தா பேருந்து நிலையத்தில், காத்திருந்தபொழுது எனக்கு இரண்டு மணிநேரம் மிச்சம் இருந்தது . காசு வசூலித்த திருநங்கை ஒருவர் என் தோள் தொட்டு காசு கேட்க.. நான் காசு கொடுக்க மாட்டேன் .. என்னுடன் வந்து வேண்டுமானால் சாப்பிடுங்கள் என்றேன் . அவரும் ஒத்து கொண்டார் .நண்பர்களை போன்று நெருக்கமாகி , இரவு உணவு அருந்திய உடன் கை கழுவி விட்டு , என் அருகே வந்து திருஷ்டி கழித்து விட்டு , நெற்றியில் முத்தமிட்டார் . அருகில் இருந்தவர்கள் சிறிது நகைத்தாலும் எனக்கு தவறாக படவில்லை . காசு கொடுத்தும் வாங்கவில்லை.. பெங்காலி மொழியில் மனப்பூர்வமாக எதோ சொன்னார் . எனக்கு புரியவில்லை . பிறகு சென்று விட்டார் . பேருந்தில் அமர்ந்து வெகு நேரம் யோசித்து கொண்டு இருந்தேன் . அர்த்தநாரீஸ்வரர் என்று சொல்வார்கள் .. ஆண்களின் பலத்தோடு பெண்ணின் குணத்தோடு அன்புக்கு ஏங்கும் ஜென்மங்கள் . நான் வியாபாரியாக இருந்து இருந்தால் அவருக்கு ஏதும் வேலை வழங்கி இருப்பேன் . மறக்கமுடியாத நிகழ்வு . ஏனோ பகிர தோன்றியது .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-மார்ச்-202316:50:00 IST Report Abuse
D.Ambujavalli குடிகார கணவர், மகன்களால் அவதிப்படும் பெண்மணிகளுக்கு இவ்விதம் ஊதியம் தருவது நல்ல யோசனை மூன்றாம் பாலினருக்கும் வாழ உரிமையுண்டு. அவர்களை பிச்சைக்காரர்களாகவும், ஈன தொழில் செய்பவராகவும் கருதும் நிலை மாற வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X