பாப்கார்ன், மண் வாசனை தெரியாமல் ஒரு வாழ்க்கையா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2023
08:00

கொரோனா வைரஸ் பாதித்த சமயத்தில், 'அனோஸ்மியா' என்ற வார்த்தை, மருத்துவத் துறையில் அதிகம் பேசப்பட்டது. எந்த வாசனையும் தெரியாத நிலை இது.

கடந்த நான்கு ஆண்டுகளாக 2 ஆயிரத்து 690 பேரை ஆய்வு செய்ததில், இவர்களில், 20 சதவீதம் பேருக்கு வாசனையை நுகரும் திறன் இல்லாமல் இருந்தது. இவர்கள் யாருக்கும் சிகரெட் பழக்கம் கிடையாது. புகைப் பிடித்தால், நாளடைவில் வாசனை நுகரும் திறன் குறையும் என்பது தெரிந்த விஷயம்.

வேறு என்ன காரணம் இருக்கலாம் என்று ஆராய்ந்ததில், இவர்கள் வசிக்கும் இடத்தின் சுற்றுச்சூழலில் நுண்ணிய துகள்கள், காற்றில் அதிகமாக இருந்தது தெரிய வந்தது.

இதே போன்று வட இத்தாலி நாட்டில் செய்யப்பட்ட ஆய்விலும், வளர் இளம் பருவத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் வாசனை உணர்வை இழந்திருப்பதும், அங்கு சுற்றுச் சூழலில் கார், பைக் போன்ற வாகனங்களில் இருந்து வெளிப்படும் நைட்ரஜன் டை ஆக்சைடு வாயு அதிகம் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இது தவிர, பிரேசில் நாட்டில் செய்யப்பட்ட ஆய்வில், அதிக துாசு, மாசு நிறைந்த பகுதியில் வசிப்பவர்கள் நாளடைவில், வாசனையை நுகரும் திறனை இழப்பதும் உறுதி ஆகியுள்ளது.

எப்படி இது நடக்கிறது?

இரண்டு விதங்களில் இது சாத்தியம். ஒன்று, மூக்கின் உள்ளே செல்லும் மாசுக்கள், நுகர் உணர்வைத் தரும் நரம்பு செல்களின் வழியே நேரடியாக மூளைக்கு சென்று அங்கு அழற்சியை ஏற்படுத்தலாம். இன்னொருபுறம் மாசு, துாசுக்கள் தான் போக வேண்டும் என்பதில்லை. தினமும் மாசு நிறைந்த வாசனையை சுவாசித்தாலே, மூளையில் அவை அழற்சியை உண்டுபண்ணி, மூளை நரம்புகளை சிதைக்கலாம்.

இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும், வாசனையை நுகரும் தன்மையை இழப்பது என்பது மன அழுத்தம், மனப்பதற்றம், உடல் பருமன், எடை குறைவது, ஊட்டச்சத்து குறைபாடு, இவற்றுடன் நேரடி தொடர்பு உடையது.

வாசனையை நுகரும் தன்மையை இழந்தால், வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்களையும் இழக்க வேண்டியிருக்கும். நினைத்துப் பாருங்கள், சினிமா தியேட்டரில் பாப்கார்ன் வாசனை, மழை பெய்யும் போது மண்வாசனை, 'கேக், பிரட் பேக்கிங்' செய்யும் வாசனை இவையெல்லாம் தெரியாவிட்டால் எப்படி இருக்கும்?

டாக்டர் முருகப்பன் ராமநாதன்,
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் மெடிசின்,
அமெரிக்கா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
15-மார்ச்-202300:42:34 IST Report Abuse
Anantharaman Srinivasan சென்னை தெருக்களில் தினமும் அரைமணி நேரம் நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்தால் வாசனையை உணரும் சக்தியை இழப்பது உறுதி.. பலர் நாள்முழுவதும் தெருக்களில் பேசிக்கொண்டுதான் செல்கின்றனர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X