நங்கையர் திலகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2023
08:00

வன்முறை என்றாலே ரத்தம் தெறிக்க வேண்டும் என்பதல்ல; சக உயிரை பொருளாதார ரீதியில் முடக்குவதும், உடல் மற்றும் உளவியல் ரீதியாக காயப்படுத்துவதும் வன்முறைதான்! இப்படியான குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் பால் புதுமையினருக்கு, தன் பி.சி.வி.சி., அமைப்பின் மூலம் உதவிக் கரம் நீட்டுகிறார் சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த பிரசன்னா கெட்டு.

குடும்ப வன்முறைக்கு காரணமே ஆண்கள்தானா?

'குடும்ப தலைவன்'ங்கிற பொறுப்பு திறன் சம்பந்தப்பட்டது; ஆனா, அது இங்கே அதிகாரமாத்தான் ஆண்களுக்கு சொல்லித் தரப்படுது! இந்த அதிகார மனநிலைதான் குடும்ப வன்முறைக்கு அடிப்படை காரணம். இதுக்கு காரணமாகுற ஆணுக்கும் மனஅழுத்தம் தவிர்க்க முடியாதது!

'தன்னை ஏவுற நபரையும் வன்முறை பாதிக்கும்'ங்கிற புரிதலோட இப்பிரச்னைகளை நான் அணுகுறதால ஆண்களை நான் வில்லன்களா சித்தரிக்கிறது இல்லை!

குற்ற செயல்களால் பாதிப்புற்றவர்கள் குறித்த தொழில்முறை கல்வியான, 'விக்டிமாலஜி' படிப்பை 20 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் சென்று பயின்றவர் பிரசன்னா கெட்டு!

குடும்ப வன்முறையின் வீரியம் எதுவரை?

எதிலும் குறை சொல்றது, தன் கருத்தை ஏற்கணும்னு அழுத்தம் தர்றது, பழிச்சொல் பேசி பலவீனமாக்குறது, கள்ள மவுனத்தால குற்றவுணர்வு ஏற்படுத்துறது, அச்சுறுத்தி காரியம் சாதிக்கிறது... இப்படியான உளவியல் வன்முறையால பெண்கள் பாதிக்கப்பட்டாலும், இதோட தாக்கம் குழந்தைகளையும் பாதிக்கும்! இந்த குடும்ப வன்முறைகள் பார்த்து வளர்ற மகன் மனம், 'இதெல்லாம் தவறே கிடையாது'ன்னு நினைக்கும்; மகளோட மனசு, 'இதை சகித்துக் கொள்'னு தப்பான பாடம் போதிக்கும்!

அழுத்தம் திருத்தமாய் சொல்லும் பிரசன்னா கெட்டு, இவ்வன்முறை சங்கிலியை உடைக்கும் பொருட்டு, கல்லுாரி, பணியிடங்களில் ஆரோக்கிய உறவுமுறை பேணுவது சார்ந்து விழிப்புணர்வு தருகிறார்.

'விக்டிமாலஜிஸ்ட்' என்பதன் கூடுதல் நன்மை?

கடுமையான வன்முறைக்கு உள்ளான ஒரு பெண்ணை, அவரோட கணவர் வீட்ல இல்லாத நேரத்துல மீட்க போயிருந்தேன். அந்த வலியில கூட கணவரோட துணிகளை அடுக்கி வைச்சுட்டுதான் வந்தாங்க! பாதிக்கப்பட்டவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம். இவங்க எல்லாரையும் அவங்கவங்க சூழல்ல இருந்தே அணுகுற அறிவை என் கல்வி எனக்கு தந்திருக்கு!

குடும்ப வன்முறைக்கு அழிவு கிடையாதா?

தனக்கு நடந்ததை சொல்லி உதவி கேட்குறதுலேயே பெண்களுக்கு பல தடைகள் இருக்கு! 'இந்த சின்ன விஷயத்தையா பெருசு பண்றே'ன்னு குடும்ப உறுப்பினர்கள் சொன்னதும் பெண்கள் முடங்கிடுறாங்க. 'சக உயிருடன் எப்படி பழகணும்'னு ஒவ்வொரு உயிரும் உணரணும்; இது சாத்தியமானா மட்டும்தான் குடும்ப வன்முறை ஒழியும்.

போன் 1800 102 7282

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X