பகத்சிங்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2023
08:00

மார்ச் 23, பகத்சிங் நினைவு நாள்

இன்றைய பாகிஸ்தான் பகுதியில் உள்ளது லாகூர். இங்குள்ள மத்திய சிறை வளாகம், மார்ச் 23, 1931 அன்று பரபரப்பாக இருந்தது. அன்று மாலை 4:00 மணிக்கே கைதிகள் அறைக்குள் அடைக்கப்பட்டனர். இது, சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சிறை அதிகாரிகள், 'மேலிடத்து உத்தரவு...' என்பதை தவிர, எதையும் கூறவில்லை. தேச விடுதலைக்காக போராடிய பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் அந்த சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே துாக்கில் இடப்போவதாக கூறினர் முடி திருத்தும் பணியாளர்கள். கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது. கைதிகள் முன் கூட்டியே அறைக்குள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

துாக்குமேடை தயாராக இருந்தது.

விடுதலை வீரர்கள், பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர். சுதந்திர தாகம் உடைய பாடல்களை அவர்கள் பாடிக்கொண்டிருந்தனர்.

'அந்த நாள் கண்டிப்பாக வரும்...

இந்த மண்ணும், வானமும், நம்முடையதாக இருக்கும்...'

இந்த பொருளில் பாடினர்.

மூவரின் உடல் எடையும் பரிசோதனை செய்யப்பட்டது.

துாக்கு தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்த தினத்தில் இருந்ததை விட, கூடுதல் எடையுடன் இருந்தனர். முதலில் துாக்கு மேடைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார் சுக்தேவ்.

கடவுளை போற்றி துதிக்கும் சீக்கியர்களின் புனித வார்த்தையை நினைவில் கொள்ள, பகத்சிங்கிடம் வலியுறுத்தினார், சிறை வார்டர் சரத்சிங்.

அதை மறுத்து, 'வாழ்க்கையில் நான் ஒரு போதும் கடவுளை போற்றவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரம் கண்டு, கடவுளை விமர்சித்துள்ளேன். அதற்காக, இப்போது மன்னிப்பு கேட்டால், என்னை விட கோழை யாரும் இருக்க முடியாது. இறுதிகாலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என மக்கள் துாற்றுவர்...' என உறுதியுடன் கூறினார் பகத்சிங்.

சிறை கூடத்தில் காலணிகளின் கனமான ஓசை கேட்டது.

தொடர்ந்து, 'தியாகத்தின் ஆசையே, எங்கள் இதயத்தில் உள்ளது...' என்ற பொருள் உடைய பாடலை பாடினர்.

'இன்குலாப் ஜிந்தாபாத்...'

'ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ..'

இந்த முழக்கங்கள் எழுந்தன.

இவற்றுக்கு, புரட்சி ஓங்குக, இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்பதே பொருள்.

உலக வரலாற்றில், துாக்கு மேடையில் வீரர்கள் பலர் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். ஆனால், துாக்கு கயிரை கழுத்தில் மாட்டிய போது, 'கருப்பு துணியை அவிழ்த்துவிடுங்கள்; என் கண்கள், தாய் மண்ணை பார்த்தவாறே உயிர் பிரியட்டும்...' என்றார் மாவீரர் பகத்சிங்.

இந்திய வரலாற்றில், புதிய சிந்தனையின் துவக்கமாக உள்ள அவரது நினைவை போற்றுவோம்!

- எம்.அசோக் ராஜா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X