அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2023
08:00

வி. பரமேஸ்வரன், நெல்லை: பெரியோர், சிறியோர் என்று சொல்கின்றனரே... அவர் எவர்?

செய்ய இயலாத அரிய செயல்களை செய்பவர்களை, பெரியோர் என்றும், அத்தகைய செயல்களை செய்ய இயலாதவர்களை, சிறியோர் என்றும் கூறுவர்.

பி. மோகன்ராஜு, சென்னை: லென்ஸ் மாமா, உ.பா., அருந்தியபின், பேசும் ஆங்கிலத்தில், இலக்கண பிழை இருந்ததுண்டா?

அவர், உ.பா., இல்லாமல் பேசும்போதே, அமெரிக்கன் இங்கிலீஷில் தான் பேசுவார். உ.பா.,வுக்கு பின், ரொம்ப இனிமையாக, அமெரிக்கன் இங்கிலீஷில் பேசுவார். இலக்கண பிழை ஏதும் கிடையாது!

* தே. மாதவராஜ், கோவை: நாட்டில் நடக்கும் அன்றாட பிரச்னைகள் பற்றி அறிக்கை வெளியிடுகிறாரே, விஜயகாந்த்... பின் ஏன் வெளியே வர மறுக்கிறார்?

வழக்கம்போல் அவருக்கு பேச்சு, அறிக்கைகளை எழுதிக் கொடுப்பவர்களின் செயலிலேயே பின்பற்றுகிறார். அவருக்கு, உடம்புக்கு முடியவில்லை. அதனால் தான், வெளியே வரவில்லை!

ஆர். அமிர்தபாலன், குஞ்சன்விளை, குமரி: தேசிய அளவில், எதிர்க்கட்சிகளை, ஓரணியில் திரட்டும், தி.மு.க.,வின் நோக்கம் பலிக்குமா?

நிச்சயம் பலிக்கப் போவதில்லை. ஏற்கனவே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தான் தனியாக நிற்க போவதாக சொல்லி விட்டாரே... அத்துடன், எதிர்க்கட்சிகளாக உள்ள சில மாநில முதல்வர்களும், பிரதமர் கனவில் உள்ளனரே!

* ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்: தாம் அரசியலுக்கு வராமல் போனதற்கு, 'கொரோனா'வையும், உடல் நலத்தையும் காரணம் சொல்கிறாரே, ரஜினிகாந்த்...

ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை சமீபத்தில் சென்று பார்த்து, ஸ்டாலினை புகழ்ந்து பேட்டி அளித்தார். இப்போது, தமது அடுத்த படத்திலும் நடித்துக் கொண்டுள்ளார். உடல் நலம் சரியாகி விட்டது தானே... இப்போது, கட்சி ஆரம்பித்தால் என்ன? அவருக்கு, எங்கிருந்தோ ஒரு, 'பிரஷர்...' கட்சி ஆரம்பிக்கக் கூடாது என...

சி. கண்ணன். வத்தலக்குண்டு: இலங்கை கடற்படையினர், அடிக்கடி நம் மீனவர்களை, கைது செய்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என, இம்சை கொடுத்து வருகின்றனரே... இதற்கு விடிவு காலமே கிடையாதா?

ஒரே தீர்வு தான் உண்டு. நம் மீனவர்கள், எல்லை தாண்டக் கூடாது. ஏன், நம் நாட்டிலேயே, தமிழக மீனவர்கள், குஜராத் மாநிலத்தில் பிடித்த மீன்களையே பறிமுதல் செய்துள்ளனரே!

எ. முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த, ஈ.வெ.ரா.,வின் பேரன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராகு காலம் முடிந்த பிறகு தானே, பதவி ஏற்றுள்ளார்?

தன் தாத்தாவின் கடவுள் எதிர்ப்பை புரிந்து கொண்டார் போலும். அதனால், இவ்வாறு நடந்து கொள்கிறார். இதே போல தானே, ஹிந்து கோவில்களாக சென்று வழிபடுகிறார், ஸ்டாலினின் மனைவி துர்கா!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-மார்ச்-202317:03:59 IST Report Abuse
D.Ambujavalli 'முன்னால் செல்பவர் இடறி விழுந்தால் பின்னால் வருபவருக்கு விளக்குப் பிடித்தது போல' என்பார்கள் சமீபத்திலே நண்பர் கட்சி தொடங்கி இன்றைய நிலையைப் பார்த்தவர், தானும் கிணற்றில் விழுவாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X