இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2023
08:00

கமலின், ரூ.100 கோடி படத்தில், சிம்பு!
கடந்த, 1978-ல், கமல் நடிப்பில் வெளியான படம், சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், சிம்பு நடிக்க, பாரதிராஜாவின் மகன், மனோஜ் இயக்க இருந்தார். ஆனால், அது கைவிடப்பட்டது.
தற்போது, சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை, தன், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் போகிறார், கமலஹாசன். இந்த படத்தில், இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார், சிம்பு.

அந்த வகையில், தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற இளவட்ட நடிகர்களை வைத்தும், தன் பேனரில் படங்கள் தயாரிக்க துவங்கி இருக்கிறார், கமலஹாசன்.
— சினிமா பொன்னையா

மீண்டும் தமிழ் படத்தில், பூஜா ஹெக்டே!
விஜயின், பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த, மும்பை நடிகை, பூஜா ஹெக்டே, அந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் நம்பர்- ஒன் நாயகி ஆகி விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் தோல்வி காரணமாக, அதன் பின், யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிக்கும், சங்கமித்ரா படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார், பூஜா ஹெக்டே. சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம், மெகா பட்ஜெட்டில் உருவாகிறது.
பூஜாவை, இப்படத்தில் நடிக்க வைத்தால், தெலுங்கு, ஹிந்தியில் அவரது மார்க்கெட்டை வைத்து பெரிய அளவில் வியாபாரம் செய்து விடலாம் என்ற நோக்கத்தில் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அதோடு, இந்த படத்தில், சங்கமித்ரா என்ற கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார், பூஜா ஹெக்டே.
— எலீசா

'ரூட்'டை மாற்றிய, நயன்தாரா!
முன்பெல்லாம், திருமணத்திற்கு பிறகு, நடிகையரை, சினிமா துறையினர் ஓரங்கட்டி விடுவர். ஆனால், தற்போது அந்த நிலை மாறி வருகிறது.
குறிப்பாக, நயன்தாராவுக்கு திருமணமான பிறகு, முன் வரிசை, 'ஹீரோ'கள், அவரை கண்டு கொள்ளவில்லை. என்றாலும், ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் போன்ற இரண்டாம் தட்டு, 'ஹீரோ'கள், அவருக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். அதோடு, தமிழ் சினிமாவில், அவருக்கென பெரிய, 'இமேஜ்' இருப்பதால், தன் கதாபாத்திரத்தை, 'டம்மி' பண்ணாமல் ஓரளவு வலுவான வேடமாக கொடுக்குமாறு இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார், நயன்தாரா.
அதுமட்டுமல்லாமல், 'திருமணம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி, 'கிளாமருக்கு' தடை போடவில்லை. தேவையான, 'கிளாமரை' வெளிப்படுத்தி நடிப்பதற்கு, இப்போதும் தயாராக இருக்கிறேன்...' என்று, உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
மாநாடு வில்லனின் மார்க்கெட் தற்போது எகிறி விட்டதை அடுத்து, படத்துக்கு படம், 'ஹீரோ'கள் ரேஞ்சுக்கு சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், மார்க்கெட் மந்தமாக இருந்தபோது, குறைவான சம்பளம் பேசி, அவரை ஒரு படத்தில் நடிக்க வைக்க, 'அட்வான்ஸ்' கொடுத்திருந்த தயாரிப்பாளர், இப்போது, முன்பு பேசிய, அதே சம்பளத்தில் நடித்து தருமாறு, மாநாடு வில்லனிடம் கூறியுள்ளார்.
ஆனால், அவரோ, 'நீங்கள், 'அட்வான்ஸ்' கொடுக்கும் போது, என் மார்க்கெட் வீழ்ச்சியில் இருந்தது. இப்போது எகிறி நிற்கிறது. அதனால், மீண்டும், உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்றால், தற்போது நான் வாங்கும் சம்பளத்தை கொடுத்தே ஆக வேண்டும்...' என்று, உறுதியாக கூறி விட்டாராம்.
இதையடுத்து, மாநாடு வில்லனுக்கு, தான் முன்பு போட்ட, 'அக்ரிமென்ட்'டை கையில் வைத்துக் கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்தில், 'செக்' வைக்கப் போவதாக சொல்லி, மிரட்டல் விடுத்துள்ளார், தயாரிப்பாளர்.
இதன் காரணமாக, 'பிரமாண்ட இயக்குனரின் படத்தில் ஒப்பந்தமாகி, பின்னர் வெளியேறிய, புயல் காமெடியனுக்கு, 'செக்' வைத்தது போன்று, நமக்கும், 'செக்' வைத்து விடுவரோ...' என்று, பீதியில் இருக்கிறார், மாநாடு வில்லன்.

சினி துளிகள்!
* வில்லன் மார்க்கெட் சூடு பிடித்தபோதும், அவ்வப்போது ஒரு படத்தில், 'ஹீரோ'வாக நடிப்பதிலும், ஆர்வம் காட்டி வருகிறார், எஸ்.ஜே.சூர்யா.
* சாணிக் காயிதம், பீஸ்ட், நானே வருவேன், பகாசுரன் போன்ற படங்களில் நடித்துள்ள, இயக்குனர் செல்வராகவன், தற்போது, மார்க் ஆன்டனி படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
* ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த, ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர், ஜூனியர் என்.டி.ஆரின், 30-வது படத்தின் மூலம், தெலுங்கில் அறிமுகமாகிறார்.

அவ்ளோதான்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X