அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2023
08:00

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 38 வயது பெண். இல்லத்தரசி. கணவர் வயது: 42, மத்திய அரசு பணியில் உள்ளார். எனக்கு இரு குழந்தைகள் உள்ளனர். என் பெற்றோரை விட, என் மீது மிகவும் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பார், கணவர். மாமனார் - மாமியார் இல்லை.

சந்தோஷமாக சென்று கொண்டிருந்த வாழ்வில், தோழி என்ற பெயரில், விதி விளையாட ஆரம்பித்துள்ளது.

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டிற்கு புதிதாய் குடி வந்தாள், 35 வயது பெண் ஒருவள். வயதான தாய் - தந்தையர் உள்ளனர். திருமணமாகாத ஏக்கம், அவளது பேச்சில் எதிரொலிக்கும். அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டி, அவளுக்காக நானே வரன் பார்க்க ஆரம்பித்தேன்.

இதற்கிடையில், என் குடும்பத்தினருடன் நெருங்கி பழக ஆரம்பித்தாள். அவளது சுறுசுறுப்பும், நகைச்சுவையாக பேசும் குணமும், யாரிடமும் பேசாத என் கணவரையும் அவளிடம் பேச வைத்தது. இதை அவளிடமும் கூறி வியந்தேன்.

வெறும் நட்பு மட்டுமல்லாமல், குடும்ப விஷயம் அனைத்தையும் அவளிடம் பகிரும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவளாக மாறினாள்.

அவள் அலுவலகம் கிளம்பினால், 'வழியில் இவளை இறக்கி விடுங்களேன்...' என்று கூறி, என் கணவரின் பைக்கில் அனுப்பி வைப்பேன்.

இது எவ்வளவு தவறு என்று இப்போது தான் புரிகிறது.

இப்போதெல்லாம், என்னிடம் பேசுவதை விட, அவளிடம் தான் அதிக நேரம் பேசுகிறார், கணவர். அவர் வீட்டில் இருக்கும் நேரமாக பார்த்து வந்து, நான் இருக்கும்போதே, என்னையும் மீறி, அவருக்கு சாப்பாடு பரிமாறுவது, என் குழந்தைக்கு, 'கிப்ட்' வாங்கி கொடுப்பது, பள்ளியில் நடந்த விஷயங்களை விசாரிப்பது என்று அத்துமீறுகிறாள்.

இதை முளையிலேயே கிள்ளி எறிய மனம் விரும்புகிறது. இது சம்பந்தமாக, கணவரிடம் மனம் விட்டு பேச நினைக்கிறேன். ஆனால், நான் நினைப்பதற்கு மாறாக, என் சந்தேகத்தால், எங்களுக்குள் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்றும் பயப்படுகிறேன்.

நாங்கள் இருப்பது சொந்த வீடு என்பதால், வேறு வீட்டுக்கு செல்ல முடியாது. என் தோழியிடமும் வெளிப்படையாக பேச தயங்குகிறேன். ஒருவேளை, அவள் விகல்பமில்லாமல் பழகுகிறாளோ என்ற குழப்பம் வேறு.

விஷயம் கைமீறவில்லை என்றாலும், அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, தத்தளிக்கவும் மனம் விரும்பவில்லை.

நான் என்ன செய்யட்டும் அம்மா.

இப்படிக்கு,
பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.


அன்பு மகளுக்கு —

உன் தோழி, நகைச்சுவையாக பேசுவதும், குடும்பத்தினருடன் நெருங்கி பழகுவதும், உன் கணவனை கைப்பற்றத்தான்.

தோழியிடம் வெளிப்படையாக பேச தயங்கினால், கரடிக்குட்டி உன் கையிலுள்ள தேன் அடையை பறித்து, ஓடி விடும்.

தோழி விகல்பம் இல்லாமல் பழகுகிறாளோ என, தப்புக்கணக்கு போடாதே. விகல்பம் டன் கணக்கில் இருப்பது, உன் கடிதம் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இந்த விஷயத்தில், கணவன் மீது துளி தவறில்லை. தினம் இட்லி அல்லது உப்புமா சாப்பிடும் அவன் கண்களில், சோளாப்பூரி காட்டி விளையாடினால், பாவம் என்ன செய்வான்? தோழியிடம் நேரடியாக பேச சங்கோஜமாக இருந்தால், மொபைலில் அவளுடன் பேசு.

'அம்மா தாயே, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது, உன் பெற்றோர்; -நானல்ல. உன்னை தொடர்ந்து வீட்டுக்குள் அனுமதிப்பது உனக்கும் நல்லதல்ல, எங்களுக்கும் நல்லதல்ல.

'நீ, நான், என் கணவன் நேர்மையாக இருக்கலாம். ஆனால், அவதுாறு பேசும் சமுதாயத்தின் வாயை யார் அடைப்பது? நான், உன்னை சந்தேகப்படுகிறேனோ என கேட்காதே. வரும் முன் காப்பது நல்லது.

'தடுப்பூசியாய் சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன். இனி, என் வீட்டுக்கு வராதே. என் கணவனை வெளியில் கண்டால், முன் பின் தெரியாத அந்நியனை பார்ப்பது போல, விலகி விடு.

'நாளை உனக்கு திருமணமானால் அந்நிய பெண்களை உன் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டாய். நீயும், நானும் பேசிக் கொண்டதை யாரிடமும் குறிப்பாக என் கணவனிடம் கூறி விடாதே.

'உனக்கு சிறப்பான திருமண வாழ்க்கை அமைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பாதுகாப்பான துாரத்தில் நின்று, இருவரும் மானசீகமாக கைகுலுக்கி கொள்வோம். பெஸ்ட் ஆப் லக் மை டியர் தோழி!'

இப்படிக் கூறி, பிரியாவிடை பெறு.

குழப்ப மேகங்கள் விலகி, உன் நீலவானம் பிரகாசிக்கும் மகளே!

— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
Kundalakesi - Coimbatore,இந்தியா
27-மே-202310:17:19 IST Report Abuse
Kundalakesi Sister brother aaki vitrunga.. unga pillaya koopitu avangala athai nu (sister of their father) Sola vainga..
Rate this:
Cancel
Sumathi Sankaran - Houston,யூ.எஸ்.ஏ
24-மே-202319:01:16 IST Report Abuse
Sumathi Sankaran உங்கள் அம்மா அப்பாவை அல்லது அத்தையை அல்லது உங்கள் கணவர் வீட்டு நெருங்கிய உறவை (யார் மற்றவர்களைப் பற்றி தைரியமாக குற்றம் கூறத் தயங்க மாட்டார்களோ) வரச் சொல்லி அவர்கள் மூலம் சத்தமாக "என்ன இந்தப் பொண்ணு இப்படி வெக்கம் மானமில்லாம நடந்துக்குது, உங்க வீட்டுக்காரருக்குமா அறிவில்லை" என்று பேச வை. அந்தப் பெண்ணின் அம்மா அப்பாவிடம் அவர்கள் போய் சண்டை போடட்டும். உன் கணவர் இருக்கும் போது அவர் காதில் விழும் படி அக்கம் பக்கம் வேடிக்கை பார்ப்பது போல அவர்கள் யாரிடமாவது இதைப் பற்றி சத்தமாகப் பேசட்டும். நீங்கள் அமைதியாக இருங்கள். உங்கள் கணவர் உங்களிடம் பேசினால் "நானே எல்லாரும் புரளியாகப் பேசுகிறார்கள் வேண்டாம் என்று சொல்ல நினைத்ததை அவர்கள் மூலம் உங்களுக்குப் புரிந்து விட்டது" என்று கூறி இனி அவளை வீட்டில் சேர்ப்பது பெரிய தவறு, நம் குழந்தைகள் வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறுங்கள்.
Rate this:
Cancel
23-மே-202316:08:20 IST Report Abuse
Mari Muthu Muthu 0
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X