விவசாய நிலத்தை அபகரிக்க நினைச்சவங்களை எதிர்த்ததோட விளைவு... என் மாமனாரோட மரணம். உங்க காவல் துறை நினைச்சிருந்தா இதை தவிர்த்திருக்கலாம்!
ஆமாங்க... அம்மையநாயக்கனுார் காவல் நிலையத்துல 15.4.2022ல் புகார் தந்தப்போ (மனு எண்: 124/2022) நியாயம் கிடைக்கலை! நீதிமன்ற தீர்ப்பு தந்த நம்பிக்கையும், தென் மண்டல ஐ.ஜி., ஆஸ்ரா கர்க் தந்த பரிந்துரையும் காவல் நிலையத்துல எடுபடலை!
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்துல பிப்ரவரி 6, 2023 'மனுநீதி நாள்'ல புகார் தந்ததும் (மனு எண்: 4986215) மறுநாள் காவல் நிலையத்துல இருந்து அழைப்பு! காவல் நிலையத்துக்கு போன என் மாமனார், அங்கே நடந்த சம்பவங்களால விஷம் குடிச்சுட்டு காவல் நிலைய கண்காணிப்பு கேமரா முன்னாடி சரிஞ்சுட்டார்!
காவல் நிலைய வாசல்ல அவர் மயங்கி சரியுறது, அங்கிருந்து அவரை ஆம்புலன்சுல ஏத்திட்டுப் போறது எல்லாத்துக்கும் வீடியோ பதிவு இருக்கு! ஆனா, சாயங்காலம் 6:20 மணிக்கு பேருந்து நிறுத்தத்துல அவர் மருந்து குடிச்சதா வழக்கு பதிவாகியிருக்கு; இது எப்படிங்க?
உங்க ஆட்சியில எங்களுக்கு நீதி கிடைக்காதா?
- காவல் துறை அலட்சியத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட விவசாயி பாண்டியின் மரணத்திற்கு நீதி கேட்கும் மருமகள் கவுசல்யா - மகன் ராஜாராம், குல்லலக்குண்டு, நிலக்கோட்டை, திண்டுக்கல்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இவங்களோட முந்தைய ஆட்சியின் கொடூரத்தை ஒரு கணம் நினைத்து இருந்தால் இப்படி ஆகி இருக்காதே. காசுக்கும் சாராயத்துக்கும் ஒட்டை விற்றால் ஆட்சி எப்படி இருக்கும். இன்னும் 3 வருடங்களில் இது போல் எத்தனையோ நடக்க போகிறது.
தீ வினையை விதைத்து விட்டு நல் வினை edhirpaarppadhe தவறு.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.