ஸ்மார்ட் வாட்ச்சில் ரத்த அழுத்தத்தை பார்க்கலாமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2023
08:00

உயர் ரத்த அழுத்த பாதிப்பு இரண்டு வகைகளாக உள்ளன. முதல் வகையில், முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம், உடல் பருமன் போன்ற தவிர்க்க முடிகிற வாழ்க்கை முறை மாற்றத்தினால் வருவது. இரண்டாவது, சிறுநீரக கோளாறுகள், ஹார்மோன் செயல்பாடுகள் உட்பட உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் வருவது. ஆரோக்கியமாக இருப்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, லேசான மாறுபாடு தெரிந்தால், தினசரி நடைமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதயத்திற்கு அதிக அழுத்தம் தந்து, பக்கவாதம், ஹார்ட்-அட்டாக், ரத்த நாளங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். காய்கறிகள், பழங்கள், கொழுப்பு நீக்கிய பால் பொருட்கள், முழு தானியங்கள், பருப்புகள், மிக குறைவாக சோடியம், வாரத்தில் 150 நிமிடங்கள் சீரான உடற்பயிற்சி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். அதிகப்படியான உடல் எடையில், 500 கிராம் குறைந்தாலும், நேர்மறையான விளைவுகளைத் தரும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம், மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல பலன் தரும். இதற்கு மேலும் மருந்துகள் தேவைப்பட்டால் டாக்டர்களின் ஆலோசனையுடன் சாப்பிடலாம். அக்குபஞ்சர், யோகா போன்ற முறைகளும் சிலருக்கு பலன் தரலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியில், ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்யப்படும் சில 'ஆப'கள், ஸ்மார்ட் கை கடிகாரங்கள் வாயிலாக உடலின் உள் இயக்கங்களை கண்காணிக்க முடிகிறது. நாமாகவே பார்த்து முடிவுக்கு வராமல், டாக்டரின் ஆலோசனையுடன் இவற்றை பயன் படுத்துவது பாதுகாப்பானது.

டாக்டர் அஸ்வின் கருப்பன்,உள் மருந்தக மருத்துவ ஆலோசகர்,சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
23-மே-202305:29:43 IST Report Abuse
தரம்குறைந்த டாஸ்மாக் நாடு டாக்டர்களும் இப்போதெல்லாம் தரமற்ற மனிதர்களாக மாறி விட்டனர் , அவர்களை நம்பலாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X