கவிதை பாடும் கவி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2023
08:00

கேரள மாநிலம், பத்தனம்திட்டா பகுதியில் உள்ளது கவி. எழில் நிறைந்த காட்டுப்பகுதி. விலங்குகள் சுதந்திரமாக உலாவருவதை இங்கு எளிதாக பார்க்கலாம். சபரிமலை செல்லும் பாதையில் கவிக்கு செல்லும் காட்டுப்பாதை துவங்குகிறது.

இருமருங்கிலும், நெடிதுயர்ந்த மலை தொடர், பச்சைப்பசேல் புல்வெளிகள் நிறைந்துள்ளன. வழியில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள். பேருந்து பயணம் சுக அனுபவம் தரும்.

சாலையில் கவிந்துள்ள மரங்கள் அடர் நிழலாக காட்சி தருகிறது. வழியில் கக்கி, மூழியார் அணைக்கட்டுகள் கடல் போல் தேங்கியுள்ளதை பார்க்கலாம். கவியிலும் அணை உள்ளது. அது இரு ஆறுகள், நான்கு மலைகள் நடுவில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் சபரி நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீர் பாய்கிறது. இதன் அருகே, சூழல் சுற்றுலா மையம் நிறுவப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில், பொன்னம்பலமேடு பகுதியில் உள்ளது.

மிகுந்த சோதனைக்கு பின் தான் இங்கு சுற்றுலாவுக்கு அனுமதிக்கிறது கேரள வனத்துறை. காலை உணவுக்கு பின், அணையில் படகு சவாரி செய்யலாம். மதிய உணவுக்கு பின், நறுமணம் வீசும் ஏலக்காய் தோட்டங்களைப் பார்க்கலாம். ஏலக்காய் பதப்படுத்தும் ஆலை ஒன்றும் உள்ளது. பயணத்துக்கு ஜீப் வசதி உள்ளது.

காட்டுக்குள் வரையாடுகள் கூட்டமாக நகர்வது வியப்பு ஏற்படுத்தும். காட்டெருமை, யானைகள் எழிலாக சுற்றித் திரியும். இவற்றை காண கண்ணாயிரம் வேண்டும். இங்கு, 260 வகை பறவையினங்கள் உள்ளதாக வனத்துறை கணக்கிட்டுள்ளது. பறவைகளின் இனிய குரல்களின் ஊடே, சுத்தமான காற்றை சுவாசித்தபடி புல்வெளிகளில் சுற்றித் திரியலாம். இது பேரானந்தம் தரும்.

காட்டை சுற்றிப் பார்த்து, இரவு காட்டேஜில் தங்கி ஓய்வெடுக்கலாம். இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. இந்த காடு மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. கமகமக்கும் ஏலக்காய், மிளகு தாராளமாக கிடைக்கிறது. சந்தனக்கட்டை, 20 கிராம் விலை,1,500 ரூபாய்க்கு கிடைக்கிறது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் காலை, 6:30, மதியம், 12:15 மணிக்கு இங்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. குமுளியில் இருந்து அதிகாலை, 5:30, மதியம், 1:15 மணிக்கு கேரள அரசு பேருந்துகள் இயக்குகிறது. பெரியார் புலிகள் சரணாலய பகுதியில் உள்ளதால், கேரள வனத்துறை, இந்த பகுதியை சுற்றிப் பார்க்க பிரத்யேக வேன் இயக்குகிறது.

குழந்தைகளே... பயணங்கள் செய்து இயற்கை சூழலை பற்றிய அறிவை வளர்த்து வாழ்வில் உயருங்கள்.

- எல்.மீனாம்பிகா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X