அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
08:00

க.சிவசங்கர், மதுரை: ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?

ஒழுக்கமுள்ள மக்களை உருவாக்க, நல்ல அரசுகள் தான் வேண்டும். அதே மக்களை, ஒழுக்கமில்லாத, குடிகாரர்களாக மாற்ற, மாவட்டத்திற்கு, நான்கு கயவர்கள் இருந்தாலே போதும்!

அ. ரகுராமன், தேனி: 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் வரை...' என்கின்றனரே... நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
எட்டு நாள் வரை என்பதெல்லாம் முடிந்து, எவ்வளவோ காலம் கடந்து விட்டது. ஊழல் அரசியல்வாதிகள் வந்த பின், ஆட்சியை பிடித்த ஐந்து ஆண்டுகள் வரை, இது தொடரும் என்ற நிலைமைக்கு மாறிப் போனது.

ப. நாதன், தென்காசி: பெருந்தவம் என்று சொல்கின்றனரே... அப்படி என்றால் என்ன?

தன் பசியைத் தாங்கிக் கொள்வது, ஒரு தவம். பிறர் பசியை தணிப்பதே பெருந்தவம்!

ஆர்.மீனா, சென்னை: புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் திறக்க, 19 கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பது ஏன்?

ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்கின்றனர்... அப்படியானால், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு எதிராக நின்றனரே ஏன்? வரும் லோக்சபா தேர்தலில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

* மு.இசக்கி, சென்னை: புழக்கத்தில் உள்ள, 2,000 நோட்டு திரும்ப பெறுவது பற்றி...

சாதாரண மக்களிடம், 2,000 ரூபாய் நோட்டு இல்லவே இல்லை... ஆனால், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் மற்றும் வரி கட்டாத சிலரிடமும் தான், 2,000 நோட்டுகள் குவிந்து கிடக்கின்றன...

அவர்கள் அதை மாற்றுவதற்கு வழி காண வேண்டித்தான், செப்டம்பர் 30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதோ என, எண்ணத் தோன்றுகிறது!

* எம்.எஸ்.மணி, பெங்களூரு: கர்நாடகாவில், தி.மு.க.,வின் தோழமை கட்சியான காங்கிரஸ் ஆட்சியை பிடித்து உள்ளதே... இனி நமக்கு காவிரி நீர் தடையில்லாமல் கிடைக்க வழி செய்யுமா?

வழி செய்யவே செய்யாது... காங்கிரஸ் கட்சிக்கு, தாங்கள் ஆளும் மாநில மக்களின் நலம் தான் முக்கியம். தமிழகத்தில் காங்கிரசும், தி.மு.க.,வும் இனி காவிரி பற்றி வாயே திறக்காது என்பதே நிதர்சனம்!

கே.ராஜ், மதுரை: புதிய பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவி விட்டார்களாமே...

இது, தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்... இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்காமல், தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் கலந்து கொண்டு சிறப்பித்திருக்க வேண்டும்!

ஆர்.ஜெயபாரதி, சாத்துார்: 'இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும், வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக இருக்க வேண்டும்...' என்று, மார்க்சிஸ்ட் பொதுச்செயலர், சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறாரே...

இந்தியா என்ன அழிந்தா கொண்டிருக்கிறது! உலக நாட்டு தலைவர்கள் எல்லாம் இந்தியாவின் வளர்ச்சியை பாராட்டிக் கொண்டு தானே உள்ளனர். முதலில், இவர்களது, வ.கம்யூ., மற்றும் இ.கம்யூ., ஒன்று சேரட்டும்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Raamanj - Srirangam,இந்தியா
07-ஜூன்-202317:07:53 IST Report Abuse
Raamanj Why they kept 2000 rs note.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஜூன்-202301:05:35 IST Report Abuse
D.Ambujavalli இதே அவகாசம் ஐந்நூறு, ஆயிரத்துக்கு கொடுக்கப்பட்டதா? மக்களுக்கு எத்தனை சிரமம் எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் அதே எட்டாமதேதி மரணம் நிகழ்ந்தது. ஓரளவு கையிருப்பாக வைத்திருந்தும் பயனின்றி, நண்பர்கள், உறவினர்கள் அலைந்து, பாவம் போனவருக்காக சற்று துக்கம் கொண்டாடி அமரக்கூட விடாது அலைக்கழித்தனர் இந்த இரண்டாயிரம் கேசில், செப்டம்பர் தாண்டியும் நீட்டிக்கலாம் மூட்டைகள் பொருள்களாக வேண்டாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X