அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2023
08:00

அன்பு சகோதரிக்கு —

என் வயது: 45. திருமணமாகி, 25 ஆண்டுகள் கடந்து விட்டன. திருமண வயதில் இரு மகள்களும், கல்லுாரியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். சொந்த பிசினஸ் செய்கிறார், கணவர். வயது: 50.

பள்ளி இறுதி படிப்போடு என்னை நிறுத்தி விட்டார், அப்பா. படிப்பில் ஆர்வம் இருந்தும், அப்பாவை மீறி எதுவும் செய்ய இயலவில்லை. மகள்கள் இருவரும் பட்டப் படிப்பு படித்துள்ளனர்.

என் மகன் கல்லுாரியில் சேர்ந்தபோது, என் படிப்பு ஆர்வம் மீண்டும் தலை துாக்கியது. என் விருப்பத்தை, குடும்பத்தினர் யாரும் புரிந்து கொள்ளாமல், கேலி செய்தனர். அஞ்சல் வழி கல்வியிலாவது பட்டப் படிப்பு படிக்கட்டுமா என்று கேட்டால், 'மருமகன் வரப்போகும் நேரத்தில், எதற்கு இந்த வீண் வேலை...' என்கிறார், கணவர்.

'இந்த வயதில் என்ன படிப்பு வேண்டியிருக்கிறது...' என்று என்னை நானே கேட்டுக் கொண்டாலும், மகன் மற்றும் அவனது வயதொத்தவர்கள் படிப்பதை பார்க்கும் போதெல்லாம், எப்படியாவது படித்தே ஆகவேண்டும் என்ற வேகம் எழுகிறது.

ஆனால், வீட்டினர் எதிர்ப்பால், வருத்தம் ஏற்படுகிறது.

என் கடமைகளை எல்லாம் முடித்த பின்தானே, படிக்க விரும்புகிறேன். நான் படித்து, வேலைக்கா போகப் போகிறேன். நான் படிப்பதால், யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது.

எதற்காக, என் ஆசையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியமும் ஏற்படுகிறது.

என் ஆசையில் தவறு உள்ளதா. எனக்கு நல்ல ஆலோசனை கூறுவீர்களா சகோதரி.

இப்படிக்கு,உங்கள் சகோதரி.

அன்பு சகோதரிக்கு —

ஒருவர் பெற்ற கல்வி, பணிக்கு செல்ல, ஏற்கனவே பணியில் இருப்பவர் உயர் பதவி பெற உதவுவதுடன், நின்று விடுவதில்லை.

பெண்களுக்கு தலைமைப் பண்பை, ஆண்கள் நிர்வாகத்தை, குடும்ப நிதி நிர்வாகத்தை, குழந்தை வளர்ப்பை, ஆண்-, பெண் உறவு சிக்கல்கள் களைய தேவையான அறிவை அள்ளித் தருகிறது, கல்வி. பெண்கள் சொந்தக்காலில் நிற்கவும், சுய அடையாளம் பெறவும், கல்வி உதவுகிறது.

கல்வி கற்க கணவரிடமோ, மகன் - மகளிடமோ அனுமதி கேட்க தேவையில்லை. கல்வி கற்பது உன் பிறப்புரிமை, சகோதரி.

தமிழகத்தில் தொலைதுார கல்வி கற்றுத்தரும் பல்கலைக்கழகங்கள் நிறைய உள்ளன. அதில் சேர்ந்து படிக்கலாம்.

கையில் சேமிப்பு வைத்திருப்பாய் அல்லவா? அதை படிப்புக்காக செலவழி.

பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரித்த, 40 வகை பட்டபடிப்புகளில் ஒன்றை தேர்ந்தெடு. நீ எந்த பல்கலையில் சேர்வதானாலும், அதன் தொலைதுார பட்டபடிப்புகள், பல்கலை மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என பார்.

நீ சேரும் பட்டபடிப்பு படித்து முடிக்க, ஆகும் மொத்த செலவை கணக்கிடு. பாடத்திட்டம் தரமாய் உள்ளதா என கவனி. தொலைதுார கல்வி இயக்ககங்களில் எது மாணவருக்கு சாதகமான அம்சங்களை கொண்டிருக்கிறது என, ஒப்பிடு.

சகோதரி... செமினார் வகுப்புகளுக்கு உன்னை விட, 20 வயது குறைந்த மாணவ - மாணவியருடன் செல்ல வேண்டும். கல்வி தனிப்பட்ட யாருக்கும் ஏக போக உரியமையானதல்ல. அது மனித குலத்தின் பொது சொத்து என்ற ஞானம் உனக்கு பிறக்கும்.

உன்னை குறைவாய் மதிப்பிட்ட குடும்ப அங்கத்தினர்களும், உறவுகளும், நட்புகளும் உண்மையான மதிப்பை உணர்வர்.

ஊமைத்துாக்கத்துக்கு ஓலை வாங்கும் கடைசி நொடி வரை, கல்வி கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்ற கல்வியை எளிமையாக, இளைய தலைமுறைக்கு ஊட்டிவிடுவது நம் கடமை.

கேலி, எதிர்ப்பு இவற்றை உன் கல்வி முன்னேற்றத்துக்கான எரிபொருளாக மாற்று. இளங்கலை, முதுகலை, இளம்முனைவர், முதுநிலை முனைவர் பட்டம் வரை தொடர்ந்து படி. உன்னுடன் தொலைதுார கல்வி இயக்ககத்தில் படிக்கும் மாணவியருடன் தோழியாகி, சந்தேகங்களை தீர்த்துக் கொள்.

கற்ற கல்வியை பயன்படுத்த விரும்பினால், படிப்புகளை முடித்து விட்டு, டியூஷன் எடுக்கலாம்.

எவரெஸ்ட் தொட்டு விடும் துாரம் தான் சகோதரி!

என்றென்றும் பாசத்துடன் சகுந்தலா கோபிநாத்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
NeelaXanthum - Miami,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202322:28:18 IST Report Abuse
NeelaXanthum இந்த பெண்மணி ஒரு அடிமை - இதை யாரும் மறுக்க முடியாது. இவர்கள் மட்டும் அல்ல, பெரும்பாலான வீட்டு கதை தான். இவர்கள் சரியாய் படித்து ஓர் அடையாளம் தனக்கு என்று உருவாக்கும் முன்பே கல்யாணம் - அப்புறம், அந்த வீட்டு நலன் மட்டுமே அவர்கள் நினைக்க வேண்டும் (இவர்கள் படிப்பு, அதனால் இவர்களுக்கு வரும் தன்னம்பிக்கை எல்லாம் ஒரு கணக்கில் இல்லை.) அதனால் இவர்கள் படிப்பேன் என்றதும் ஆதரவு தர யாரும் இல்லை. வீட்டில் என்ன இவர்கள் கணவர் கிழிக்கிறார்? இவர்களுக்கு பட்டு புடவை வாங்கி தருவாரா - அவருடைய அந்தஸ்து உலகிற்கு தெரிய? படிப்பு அப்படி இல்லை போலும். பட்டத்தை கழுத்தில் தொங்க விட்டு கொண்டு போக முடியாது. மேலும், முக்கால் வாசி பேருக்கும் வேலை செய்vaது பணம் சம்பாதிக்கத்தான் படிப்பு. அறிவு எல்லாம் வளர இல்லை சொந்த விருப்பம் என்பது, ஐயோ, இந்த மாதிரி 'பொம்பளை' க்கு எல்லாம் இருக்கவே கூடாது. படிக்க ஆரம்பித்தால் ஒரு வேலை இவர்கள் வீட்டு கும்பலுக்கு தோசை சுட்டு தருவது தடை படுமோ? அட, இவர்கள் படிப்பு காசு செலவழித்தால், வீட்டு கும்பலுக்கு என்ன பயன்? எல்லாம் வீண் தான். இவர்களை படிக்க விடாமல் திருமணம் செய்த அந்த பெற்றவர்களை சொல்லவேண்டும். இந்த சூழ்நிலையில் இவர்களால் கல்லூரி படிப்பு (தூர கல்வி ஆனாலும்) எல்லாம் கனவு தான். திருமண முறிவு செய்து தனியாக இருந்தால் வேண்டுமானால் நடக்கும். அப்போதும் தூற்றுவார்கள். இவர்களை ஊக்குவித்து படிப்பு ஆர்வத்தை மதிக்கவேண்டுவது இவ்ரகள் கணவரின் கடமை. அவர் என்ன கிழிக்கிறாரோ?
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
08-ஜூன்-202300:38:51 IST Report Abuse
Kundalakesi 1. Why you want permission from family members? 2. If you are financially good, or you get support, please join ASAP...all the best...
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-ஜூன்-202320:05:00 IST Report Abuse
Barakat AliIf she doesn't require permission from family members, then why from a third person (the adviser here)?...
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
04-ஜூன்-202323:33:37 IST Report Abuse
rama adhavan கல்விக்குக் கரையுமில்லை கற்பதுக்கு வயதுமில்லை. எனவே படியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X