இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

ஒழிக ஆணாதிக்கம்!
அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். சில நாட்களுக்கு முன், அவசரத் தேவை காரணமாக, பணம் எடுக்க வங்கிக்கு கிளம்பினேன். கருவூலம் செல்வதற்காக, அலுவலக கணக்காளரும் அதே நேரம் புறப்பட்டார். வாகனம் இல்லாமல் அவர் தவித்ததால், என் இரு சக்கர வாகனத்தில், அவரை அழைத்துச் செல்ல முன் வந்தேன்.
உற்சாகமாக கிளம்பியவர், நான் வண்டியை எடுத்ததும், தயங்கினார். "சார்... நான் நல்லா வண்டி ஓட்டுவேன்; பயப்படாம ஏறி உட்காருங்க...' என்று நான் அழைக்க, அவரோ, "அதில்லை மேடம்... லேடீஸ் பின்னாடி உட்கார்ந்து எப்படி வர்றது... நான் ஓட்டுறேனே...' என்று கேட்டார்.

எனக்கு வந்ததே கோபம்... போவதே ஓசி சவாரி. ஓட்டுவது ஆணாய் இருந்தால் என்ன, பெண்ணாய் இருந்தால் என்ன? ஒரு பெண் வண்டி ஓட்டி, இவர் பின்னால் அமர்ந்து பயணித்தால், என்ன தேய்ந்து விடப் போகிறார்? இந்த ஆண் வர்க்கமே இப்படித்தான். ஒரு சின்ன விஷயத்தில் கூட, பெண்கள் முன்னிலைப்படுவதை சகித்துக் கொள்வதில்லை.
"நான் தான் ஓட்டுவேன். வர்றதானா வாங்க; இல்ல, நான் போயிட்டே இருக்கேன்...' என்ற நான், அவர் மேலும் தயங்க, கிளம்பி சென்று விட்டேன்.
வறட்டு கவுரவம் பார்த்த அந்த ஆசாமி, வங்கிக்கு போக - வர, ஆட்டோ கட்டணமாக, நூறு ரூபாய் தண்டம் கொடுத்து அலைந்தது தனிக்கதை. யாருக்கு நஷ்டம்? ஒழிக ஆணாதிக்கம்!
— பாரதி கண்ணம்மா, திருநெல்வேலி.

ஞாயிறு விடுமுறை!
கழக அரசின் கைங்கர்யத்தால், "குடிமகன்' ஆன நான், சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சுற்றுலா தலமான டார்ஜிலிங் சென்றிருந்தேன். வார நாட்களில் திறந்திருந்த மதுக்கடைகள், ஞாயிறன்று இழுத்து மூடப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகள் கூடும் ஒரு மலை வாசஸ்தலத்தில், ஞாயிறன்று மதுக் கடைகளை மூடி இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
நம் மாநிலத்தில், "டாஸ்மாக்' கடைகள் மூடியிருக்கும் நாட்களில், கடைக்குப் பக்கத்திலேயே, கூடுதல் விலை வைத்து சரக்குகள் விற்பனை நடக்கும்; அங்கு, அந்த பிசினசே இல்லை. பெரிய மனது வைத்து, பார்களை மட்டும் திறந்து வைத்திருந்தனர்.
வேறு வழியின்றி ஒரு பாருக்குள் நுழைந்து அமர்ந்தேன். அங்கு, அதை விட ஆச்சரியம். நான் அங்கு அமர்ந்து, "தண்ணீ' அடித்த ஒரு மணி நேரமும், தனியாகத்தான் அமர்ந்திருந்தேனே தவிர, பாரில் பணியாளர்களைத் தவிர, "தண்ணீ' பார்ட்டி யாரும் வரவே இல்லை. நம்மூரில் நடக்குமா இப்படி?
நான் அங்கு தங்கியிருந்த நான்கு நாட்களில், "தண்ணீ' அடித்துவிட்டு, தள்ளாடித் தடுமாறும் ஒரு உள்ளூர் ஆசாமி கூட கண்ணில் தென்படாதது கூடுதல் ஆச்சரியம்.
— எஸ்.அகமது, சென்னை.

த்ரீ இன் ஒன் யோசனை!
எங்கள் பக்கத்து தெருவில், எங்கள் உறவினர் குடும்பம் புதியதாய் குடிவந்துள்ளதால், மரியாதை நிமித்தமாக, சந்தித்து வர சென்றிருந்தேன். அவரை, "அண்ணி' என்றே அன்புடன் அழைப்பேன். அன்புடன் வரவேற்றவர்கள், "மதிய உணவருந்தி விட்டு தான் செல்ல வேண்டும்...' என வற்புறுத்தவே, சம்மதித்தேன்.
எங்கள் அண்ணி, தன், எட்டு வயது மகனைக் கூப்பிட்டு, அருகில் உள்ள மளிகை கடையிலிருந்து, அப்பளம் வாங்கி வரச் சொன்னார். சிட்டாகப் பறந்தவன், சில நிமிடங்களில் அப்பளத்தோடும், மீதி சில்லரையோடும் வந்தான்.
என் அண்ணி, அந்த சில்லரையிலிருந்து, இரண்டு ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தார்; எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "சொந்த வீட்டிற்கு வேலை செய்ய கூலியா?' என, அடக்க முடியாமல், அண்ணியிடமே கேட்டு விட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, "இது உங்கள் அண்ணன் கொடுத்த, த்ரீ இன் ஒன் யோசனை...' என்றார்.
அதாவது, வீட்டில் உள்ள குழந்தைகளைச் சிறு, சிறு வேலைகள் வாங்கும் போது, அதற்கு உண்டான சிறு தொகையை அந்த குழந்தையிடமே கொடுத்து, சேமிக்க சொல்ல வேண்டும். பின், வருடத்திற்கு ஒரு முறை, அச்சேமிப்பில் ஒரு பங்கை, கல்வி கற்க முயலும் ஏழை மாணவருக்கு,< அவர்கள் கையாலேயே உதவித் தொகையாக கொடுக்கச் செய்ய வேண்டும். மீதி பணத்தில், நல்ல புத்தகங்கள் வாங்கி கொடுக்க வேண்டும்.
இதன் மூலம், சிறு வயதிலிருந்தே பெற்றோருக்கு உதவும் மனப்பாங்கும், சேமிக்கும் பழக்கமும், நம் உழைப்பில் சம்பாதித்ததை தானம் செய்யும் மனப்பக்குவமும் வளரும். சிறிய வயதிலேயே இக்குணங்கள் வளரும் போது, பெரியவர்கள் ஆனாலும் நல்லொழுக்கத்துடன் இருப்பர்.
இது, எனக்கு மிகச் சிறந்த யோசனையாகப்பட்டது. உங்களுக்கு எப்படி?
— சுபப்பிரியா குருபிரசாத், சென்னை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
கார்த்திக் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
24-செப்-201123:29:35 IST Report Abuse
கார்த்திக் பாரதி கண்ணம்மா அவர்களே, உங்களுக்கு இந்த பெயர் வச்சிடாங்க அப்டின்றதுக்காக ஓவரா பேசாதீங்க... என்ன கேட்டால் அவர் கண்ணியம் மிக்கவர்... பெண் சுதந்திரம் வண்டி வோட்டுவதில் இல்லை...திருந்து
Rate this:
Cancel
சுரேஷ் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
24-செப்-201115:19:11 IST Report Abuse
சுரேஷ் குமார் இங்குள்ள வாசகர் கருத்துகளை பார்க்கும் போது, பரிசு கடிதங்களின் தன்மை நன்றாகவே தெரிகிறது, வாரா வாரம் வெளி வரும் பரிசு கடிதங்கள் பகுதியான "இது உங்கள் இடம்", அனைவரையும் எதிர்பார்க்க வைக்கிறது.
Rate this:
Cancel
வியாணி விஜயகுமார் - Dindigul,இந்தியா
23-செப்-201115:56:11 IST Report Abuse
வியாணி விஜயகுமார் பாரதி கண்ணமாவின் கருத்து அவருடைய குறுகிய மனபான்மைய குறிக்கிறது. இவர் எத்தனை ஆண்களிடம் பழகி இருக்கிறார் ? பெண்களையே எப்போழுதும் முன்னிலை படுத்த வேண்டும் என்பது தான் இவருடைய எண்ணம். இவர் நல்ல டாக்டரை பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X