மத்திய அரசு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் மையத்தில் (Currency Note Press (CNP) ) ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நாசிக்கில், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை விட்டு சுமார் 30 வருடங்கள் ஆகின்றன. ரிசர்வ் வங்கி உத்தரவின்பேரில், மீண்டும் ஒரு ரூபாய் ..
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், டால்பின் நீந்திச்சென்றதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர். டால்பின்கள், பொதுவாக ஆழ்கடலில் வசிக்கும் தன்மை கொண்டவை. அவை, கால்வாய் போன்ற ஆழம் குறைந்த பகுதிக்கு வருவது அபூர்வம். இந்நிலையில், கொச்சியில் உள்ள வைப்பின் (Vypin) கடல் முகத்துவார பகுதியில், குட்டி டால்பின் ஒன்று நீந்துவதை கண்டு, மக்கள் ..
இனி வானவேடிக்கைகளை காட்ட, பட்டாசுகள் தேவைப்படாத காலம் விரைவில் வரலாம். அதற்கு பதிலாக, அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்னி( Disney) மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் (Intel) நிறுவனங்கள், டிரோன்கள் எனப்படும் ஆள் இல்லாத குட்டி விமானங்களை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. புளோரிடா மாகாணத்தில் உள்ள டிஸ்னி வேர்ல்டு கேளிக்கை பூங்காவில், 'ஸ்டார்பிரைட் ஹாலிடேஸ்' (Starbright Holidays) என்ற ..
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதி, 2016ம் ஆண்டின் சிறந்த ஆங்கில வார்த்தையாக 'post-truth' என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது.ஒவ்வோர் ஆண்டும், மக்களால் பயன்படுத்தப்படும் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2016ம் ஆண்டின் சர்வதேச வார்த்தையாக, post-truth என்னும் வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது.'நடுநிலையான உண்மையை விட, ..
A star some 5,000 light years from Earth has been hailed the roundest object in nature by a team of astrophysicists.The sun was previously believed to be the most perfectly round natural object in the universe.Researchers at the Max Planck Institute, Germany measured the roundness of the star 'Kepler 11145123'. The team found that the difference between star's equatorial length and its polar axis is smaller than that of the sun, meaning it is more round in shape.Laurent Gizon, the study's lead researcher, confirmed that Kepler 11145123 is now “the most rounded object ever observed in nature, rounder than the sun.” The team said the measurement was made with an accuracy of 1km. ..
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிவிமானம் எப்படி கீழிருந்து மேல் எழும்புகிறது? ஏதேனும் வாயுக்களா, அல்லது விமான இறக்கைகள் வளைந்து இருப்பது காரணமா?R. சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.சிறிய பரிசோதனை வழியாக இதனை உணர்ந்துகொள்ளலாம். நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு வெள்ளைத்தாளை எடுத்து, பட்டத்தின் வால் போல ..
தேயிலைச்செடி தாவரவியல் பெயர்: 'கமீலியா சைனென்சிஸ்'(Camellia Sinensis)நாம் அன்றாடம் பருகும் பானங்களில் முக்கியமான ஒன்று தேநீர். தேயிலையைக் கொதிக்க வைத்து தயாரிக்கும் தேநீர் பானம் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படுகிறது.தேயிலை, 'தீயேசியே' (Theaceae) குடும்பதைச் சேர்ந்த சிறு மரம். குட்டையாக இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும். ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண் வளம் சிறப்பாக உள்ள ..
கரடி (Sloth Bear - ஸ்லோத் பியர்)விலங்கியல் பெயர்: 'மெலுர்சஸ் அர்சினஸ்' (Melursus Ursinus)வெளிறிய முகம், வெண்ணிற வளைந்த கூரிய நகங்கள், அடர்த்தியான முடி உடையவை. மற்ற வகைக் கரடிகளோடு ஒப்பிடுகையில் இவை மந்தமானவை. சிறிய கண்களும், பெரிய காதுகளும், நீண்ட மூக்கும் உடையவை. நெஞ்சுப் பகுதியில் கோதுமை நிறத்தில் Y அல்லது U வடித்தில் மிருதுவான ரோமம் இருக்கும். கால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து கூரிய ..
“உங்க பள்ளிக்கூடத்துல உலக கழிப்பறை தினத்தைக் கொண்டாடினீங்களா?” என்று விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார் ஞாநி மாமா.“கழிப்பறை தினத்தை எப்படி மாமா கொண்டாடமுடியும்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். “கழிப்பறை என்பதே ஒரு கொண்டாட்டம்தான்” என்றார் மாமா. “பல முதியவர்களுக்கு பிரச்னை இல்லாமல், வலி இல்லாமல், மலச் சிக்கல் இல்லாமல் மலம் கழிப்பது என்பது ஒரு கொண்டாட்ட ..
One day Pat Woo saw the sun dip and tip out the sky. ”Wow! See the sun!”Pat Woo saw the sun run and Pat ran too. The sun set off for the day. One sun ray hit the ill cow. Pat saw the cow fly - set out for the sky. “Moo! Pat Woo! The cow can fly!”Pat Woo saw the sun run and dip. Its ray hit the old rat. The old rat was lit. The rat got fit - saw the sky; his old eye now new. The rat saw the sun; saw Pat Woo.“Pat Woo! The rat can see!”One ray hit the cod. Pat Woo saw its fin dip; saw the cod nod and the cod got out the sea net.“Pat Woo! The cod will not die!””Hot sun you are ace.” Pat Woo had joy for the sun. The sun had fun. Pat Woo did too - the day Pat Woo saw the sun dip and tip out the sky.Vikki என்பவர் தன் இணையப் பக்கத்தில் இந்தக் கதையை எழுதியுள்ளார். இதை படிக்கும் போது என்ன தோன்றியது? ..
'அத்தை வீட்ல போயி உறையூத்த மோர் வாங்கிட்டு வா கண்ணு' என்று அம்மா கூறுகிறார். பாலில் உறைமோர் ஊற்றினால், அது தயிராக உறைந்துவிடும். இங்கே உறை என்பது உறைதல் என்னும் வினைச்சொல்லைக் குறிக்கும். திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு உறைவது. சோழநாட்டின் தலைநகரம் உறையூர். இந்த ஊர்ப்பெயரில் உள்ள உறைக்கு என்ன பொருள்? பாலுக்கு உறையூற்றுகிறவர்கள் வாழ்வதால், இவ்வூருக்கு உறையூர் ..
நண்பரைச் சந்தித்தேன். அவரோடு தேநீர் அருந்தினேன்.தேநீருக்கு ஆங்கிலத்தில் Tea.Tea Leaf என ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒருவகையான இலையிலிருந்துதான் Tea எனும் பானம் தயாராகிறது. இந்த இலையைத் தமிழில் 'தேயிலை', அதாவது, 'தே இலை' என்று எழுதுவார்கள்.'தே' எனும் அந்த இலையைக்கொண்டு தயாரிக்கப்படும் நீரிலிருந்து இந்தப் பானம் கிடைக்கிறது. ஆகவே, அதனை இப்படி எழுதவேண்டும்:தே + நீர் => ..
திருவிழா நாட்களில், தேர் வீதி உலா வருவதை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். அந்தக் காலத்தில் ஆண் பிள்ளைகள் சிறுதேர் வைத்து விளையாடினார்கள். அரசர்கள் குதிரை பூட்டிய தேரில் பயணம் செய்தார்கள். பாரி வள்ளல் முல்லைக்கு தேர் கொடுத்தார் என்ற கதையும் நமக்குத் தெரியும். இப்படி தேருக்கு நிறைய சிறப்புகள் இருப்பதைப் போல, நிறைய பெயர்களும் இருக்கின்றன.அரி, இயந்திரம், இரதம், ..
சிகேடா (Cicada) என்பது, வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படும் ஒரு வகை பூச்சி இனம். இவற்றில் மொத்தம் 2,500 வகைகள் இருக்கின்றன. இந்தப் பூச்சிகள், தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை மண்ணுக்குள் கழிக்கும். இறுதியாக, முதிர்ச்சி அடைந்த பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்காக, மண்ணில் இருந்து லட்சக் கணக்கில் வெளிப்படும். இரண்டு மாதங்கள் வரை சுற்றித் திரிந்த பிறகு மடிந்துவிடும். இந்தக் ..
ஒரு விவசாயி சிறப்பு பண்புகள் பெற்ற ஒரு நிலப்பரப்பில் விவசாயம் செய்ய விரும்பினார். அவர் ஏதிர்பார்த்த சிறப்பம்சங்கள் இது தான்!(i) உழவு நிலம் செவ்வக வடிவில் அமைய வேண்டும்.(ii) நீளம், அகலத்த்தின் மதிப்புகள் இயல் எண்களாக (Natural numbers - நேச்சுரல் நம்பர்ஸ்)இருக்க வேண்டும்.(iii) சுற்றளவு (Perimeter - பெரிமீட்டர்) அதன் பரப்பைவிட (Area - ஏரியா) இரு மடங்கு இருக்க வேண்டும்.இந்த மூன்று கட்டுபாடுகளுக்கும் ..
நேற்று வரைக்கும் அப்பாவின் பையில் ஆசையோடு பார்த்த பணம், அம்மாவிடம் அடம் பிடித்துக் கேட்ட பணம், இப்போது செல்லாது என்று சொல்லும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் பணத்திற்கு அதன் மதிப்பு எப்படி வந்தது என்று தெரிந்தால் இந்த ஆச்சர்யம் காணாமல் போய்விடும். பணத்தை சம்பளமும், கையாளவும் அதன் கதையை தெரிந்து கொள்வது அவசியம்.மனித இனம் நாகரிகமடைந்த ஆரம்பக் காலகட்டத்தில் ..
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய 500 ரூபாய் மற்றும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இதைப் பயன்படுத்தி அடிக்கடி பணத்தை வங்கியில் மாற்றுவதைத் தடுக்கும் வகையில் விரலில் அடையாள, 'மை' வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தயாராகும் இடம்: மைசூர் பெயிண்ட் ..
சார்லஸ் ராபர்ட் டார்வின் - 1809 - 1882இங்கிலாந்து, ஷ்ரூஸ்பரி (Shrewsbury)சாதனை: உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்கியது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் டார்வினை மருத்துவம் படிக்க அனுப்பினார் அவரது அப்பா. உயிரினங்களை உயிருடன் அறுக்கப் பிடிக்காத டார்வினுக்கோ இயற்கையை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் இருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியருடன் நெருங்கிய ..
நாகப்பட்டினம் அருகே கழுக்காணி முட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட, செப்பேடுகள்தான் இதுவரை தமிழகத்தில் கிடைத்த செப்பேடுகளில் மிகப் பெரியவை. ஒரு வளையத்தில் மொத்தம் 86 செப்பேடுகள் கிடைத்தன. இதுவரை கிடைத்த தமிழகச் செப்பேடுகள் எதிலும் இவ்வாறு எண்ணிக்கை குறிப்பிடவில்லை. கழுக்காணி கைலாசநாதர் கோவில் மண்டபம் அருகில், கடந்த 2010 ம் ஆண்டு குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் ..
ரொட்டி, சப்பாத்தி, இடியாப்பம், முறுக்கு போன்ற உணவு பண்டங்கள் செய்வதற்கு, பொருட்கள் மாவாகத் தேவைப்படுகின்றன. இவற்றை அரைப்பதற்கு இப்போது 'அரைவை மில்கள்' இருக்கின்றன. அந்தக் காலத்தில் திரிகை எனப்படும் எந்திரக்கல் மட்டுமே இருந்தது. இது திருகை, திரிமரம், திரிக்கல் என்றும் அழைக்கப்பட்டது.உலகம் முழுக்க உள்ள மக்கள், இத்திரிகை கல்லை பயன்படுத்தியே உலர்ந்த தானியங்களை ..
பல்லவ அரசர்களில் மகேந்திர வர்மன் புகழ்பெற்றவர். சாளுக்கிய தேசத்தை ஆண்டு வந்த இரண்டாம் புலிகேசி, தன் பேரரசை விரிவுபடுத்துவதற்காகப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தார். நூற்றுக்கணக்கான கொடிகளையும், குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பிய தூசி, 'எதிர்க்க வந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச் செய்தது' என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.