ஒருவனுக்கு ஒருத்தி!மனைவியை விவாகரத்து செய்ய இருந்த என் நண்பனின் எண்ணத்தை, மனநல மருத்துவர் ஒருவர் மாற்றிய நிகழ்வை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...மனநல மருத்துவரை, நண்பன் சந்தித்த போது, 'ஆமாம்... உங்கள் வீட்டைச் சுற்றி எப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கின்றனர்?' என்று கேட்டார். அவனோ, 'வலது பக்கத்தில் இருப்பவர் நாய் வளர்க்கிறார்; இரவிலே உறக்கம் கலையுமளவு, அது ..
ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் சாப்பிட்டு பிழைத்த சந்திரபாபு, சில நாட்களிலேயே, மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் அறிந்து விரைந்தார், நண்பர் கணபதி. அது, அரசு பொது மருத்துவ மனை; கணபதி, சந்திரபாபுவை பார்த்ததும், அவர் பேசிய முதல் வார்த்தை, 'இந்த முறை விஷம் எதுவும் சாப்பிடல... தெருவில் நடந்து செல்லும் போது, பசியில் மயங்கி விழுந்துட்டேன்; யாரோ, என்னை இங்கே ..
'சுத்தம் சுகம் தரும்; -சோறு போடும்' என்றெல்லாம் சிறு வயதில் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றனர். இவற்றை நம்மில் பலர் பின்பற்றுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது. இ.உ.இ., பகுதியில் எத்தனையோ வாசகர்கள், 'பர்சனல் ஹைஜீன்' பற்றி அடிக்கடி எழுதி வருகின்றனர்.கடந்த வாரம், என்னை சந்தித்த வாசகி ஒருவர், தன் கணவர் சுத்தமாக, சுகாதாரமாக இல்லை என்பது குறித்து, ஒரு மணி நேரம் ..
* சோ.ராமகிருஷ்ணன், அரியலூர்: பேசினா ஓட்டவாயன், -அளந்து பேசினா உம்மணா மூஞ்சி என்கிறார்களே...பேசாமலே இருந்தால், 'அமுக்கன்' என்பர்; நம்ம ஜனங்கள் சூட்டும் நாமகரணங்களுக்கு அளவேது... நீங்கள், நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள். அவன் சொன்னான், இவன் சொன்னான் என்பதற்காக ஒவ்வொரு அரை வினாடியும் உங்களை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன? வி. நாராயணன், மதுரை: நம்ம சமூகத்தில் ..
மின்னொளியில், தங்க கோபுரம் தகதகக்க, மனம் நெகிழ, கையெடுத்து கும்பிட்டார், ராஜவேலு.''தாத்தா... நீங்க திருப்பதிக்கு நிறைய முறை வந்திருக்கீங்களா...'' என்று கேட்டான், பேரன்.''ஆமாண்டா செல்லம்.''''இந்த சாமிய பாக்க மட்டும், ஏன் தாத்தா இவ்வளவு கூட்டம்?''''மனுஷனுக்கு நிம்மதிய தர்ற ஒரே இடம், கோவில் தானேப்பா. அதுவும், இந்த ஏழுமலையானை, சகலமும் நீதான்னு அடிபணிஞ்சிட்டா, ..
வீட்டிற்குள் கண்காட்சி இருக்கிறதா இல்லை கண்காட்சிக்குள் வீடு இருக்கிறதா என்று கணிக்க முடியாத அளவிற்கு, வீட்டின் நுழைவு வாயில் துவங்கி, வரவேற்பறை, சமையலறை, படிக்கட்டுகள் என்று, பார்க்கும் இடம் எல்லாம் பழமையான, அபூர்வமான பொம்மைகள் மற்றும் பொருட்கள் நிறைந்திருக்கிறது, அந்த வீட்டில்!சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கழனிவாசலைச் சேர்ந்தவர், ஜி.ஆர்.மகாதேவன். டி.வி.எஸ். இரு ..
விஜயசேதுபதி சம்பளம் உயர்ந்தது!விஜயசேதுபதி நடிப்பில், ஆண்டுக்கு, அரை டஜன் படங்கள் வெளியாகின்றன. என்றாலும், அவரது சம்பளம், சில கோடிகளாகவே இருந்து வந்தது. ஆனால், மாதவனுடன் இணைந்து அவர் நடித்த, விக்ரம் வேதா படத்திற்கு பின், விஜயசேதுபதி கேட்காமலேயே அவரது சம்பளத்தை, ஒன்பது கோடி ரூபாயாக தயாரிப்பாளர்களே உயர்த்தி விட்டனர். இதனால், இன்ப அதிர்ச்சி அடைந்த விஜயசேதுபதி, இனிமேல் ..
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொன்றை அறிவித்து, அதன்படி நடக்க வழிகாட்டுகிறது, தெய்வம். உணர்ந்து செயல்படுவோர், உள்ளம் மகிழ்கின்றனர்; உதாசீனம் செய்பவர்களோ, உள்ளக்கவலை தீர, வழி தேடுகின்றனர்.தெய்வமே, நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால், திருநெல்வேலி என பெயர் பெற்ற திருத்தலத்தில், நெல்லையப்பர் எனும் புலவர் வாழ்ந்து வந்தார்; இலக்கண, இலக்கியங்களில் பெரும் புலமை பெற்றவர். ஒருநாள், ..
'விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை' என்பது பழமொழி. இது, எந்த அளவிற்கு ஏற்கத்தக்கது என்கிற ஐயப்பாடு, பலர் மனங்களில் ஓடுவதாலோ என்னவோ, எவரும் சாமானியத்தில் விட்டுக் கொடுக்க முன்வருவதில்லை. ஒன்றை மட்டும் நிச்சயமாக நம்புங்கள்...நம்மை விமர்சிப்போர், நமக்கு ஓர் ஆபத்து, சிக்கல் என்றால், நமக்காக களத்தில் இறங்க போவதில்லை.நம்மை நிரந்தரமாக அரிக்கிற மனக்கரை யான்களை உதறி, ..
என் வயது, 50; என் கணவர் வயது, 53. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறோம். என் கணவருடன் பிறந்தவர் ஒரே அண்ணன். கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். என் மாமியார் - மாமனார் அவருடன் தங்கியுள்ளனர். என் அப்பா இறந்து விட்டார்.என் அக்காவுக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டுகளுக்கு பின், என், 25வது வயதில் எனக்கு திருமணமானது. என் அக்காவுக்கு வாரிசு இல்லை. எனக்கு திருமணமான அடுத்த ஆண்டே ஒரு ..
கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பெண்கள் செல்லக்கூடாது என்பது நீண்டகால நடைமுறை. இது போல பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட கோவில்கள் தமிழகத்திலும் உள்ளன.கரூரில் இருந்து சின்ன தாராபுரம் வழியாக, 40 கி.மீ., கடந்தால், பெரிய திருமங்கலத்தை அடையலாம். இங்குள்ள அருங்கரை நல்லதாய் அம்மன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சில நூற்றாண்டு களுக்கு முன், இங்குள்ள ..
ஆணிவேர்!விழுதுகளை தாங்கும்வேர்கள் ஆசிரியர்கள்!சமுதாயம் என்ற - ஆலமரத்தின்ஆணிவேர் ஆசிரியர்கள்!வேர்கள் வெளியே தெரிவதில்லைசுதந்திரமாய் விருட்சப்பூக்கள்!அடித்தளம் தன்னை வெளிக்காட்டவிரும்புவதில்லை!விரும்பினால்...ஆபத்து கட்டடத்திற்குத்தான்!இவர்களுக்கு தேசியவிருதெல்லாம் ஒரு பொருட்டல்லமாணவனின் மதிப்பெண் பட்டியலேமாசற்ற விருது!மாதா, பிதா, குரு, தெய்வம்பட்டியலில் ..
'சிந்தனையாளர் பெரியார்' எனும் நூலிலிருந்து: ஈரோட்டில் பெரிய வணிகர் மற்றும் செல்வந்தர், ஈ.வெ.ராமசாமியின் தந்தை வெங்கட நாயக்கர். சேலம் விஜய ராகவாச்சாரியார், ராஜாஜி மற்றும் உ.வே.சாமிநாதய்யர் போன்றவர்கள் எல்லாம், ஈரோடு வழியாக செல்லும்போது, இவர் வீட்டுக்கு வந்து, தங்கி செல்வர். அப்படி வருபவர்கள், இளைஞராகிய ஈ.வெ.ராமசாமியுடன் பேசுவது வழக்கம்.பின்னாளில், ராஜாஜி ..
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான், கருப்பு. அவன் மனக்கண்ணில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம், சினிமாப் படம் போல் நிழலாடியது...கொலைகாரன் ஓடைக்குள் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, கரையில், அடர்ந்திருந்த கற்றாழை புதருக்குள், உட்கார ஏதுவாக செப்பனிட்டு வைத்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தான், கருப்பு.வழக்கமாக, ஆடு, மாடு மேய்க்க வரும் அவன் கூட்டாளிகளை அன்று ..
சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதி என, பல்வேறு அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, மக்கள் மனு போடுவது உண்டு. ஆனால், வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து, கடவுளுக்கு மனு போடும் பக்தர்களை கேள்விப்பட்டுள்ளீர்களா?இமயமலை அடிவாரத்தில், குமயூண் என்ற இடத்தில் உள்ளது, கோகுல் ..
தேவையான பொருட்கள்:அதிகம் பழுக்காத மஞ்சள் பூசணிக்காய் - கால் கிலோவெள்ளை பூசணிக்காய் - கால் கிலோசேப்பங்கிழங்கு - கால் கிலோபச்சை பயறு - நூறு கிராம்கறிவேப்பிலை உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்பதேங்காய் - அரை மூடி (பால் எடுக்க)பாசிப்பருப்பு - கால் கப்பச்சை மிளகாய் - நான்குசெய்முறை: எல்லா காய்கறிகளையும் சிறிய சதுரமாக வெட்டி உப்பு சேர்த்து வேக விடவும். தேங்காயை ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.