திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, புனித இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளியில், 1967ல், 4ம் வகுப்பு சேர்ந்த போது, ஆங்கில பாடத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, பொக்கிஷமாக கிடைத்தார் பாசத்திற்கு உரிய வகுப்பாசிரியை ஜாஸ்பின். நல்ல நிறத்தில் ஒல்லியாக இருப்பார்; அழகிய, 'பிங்க்' வண்ணத்தில் புடவை கட்டியிருப்பார்; விரும்பும் ..
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியில், 1995ல், 10ம் வகுப்பு படித்தபோது, வேப்பங்காயாய் கசந்தது படிப்பு; தட்டுத்தடுமாறியபடி இருந்தேன். தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்ததால், 'படித்து முன்னேற வழியைப் பாரு...' என கண்டிப்பர் ஆசிரியர்கள். இதனால், மனதளவில் சோர்வடைந்தேன். சமூக அறிவியல் ஆசிரியர் சண்முகம் மிகவும் பரிவு காட்டினார்; நன்றாக ..
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவ பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் சந்தித்ததை விவரித்தார் உறவினர் செல்வானந்தம். அடுத்தவாரம் தாயாரை அழைத்து செல்ல வரவிருப்பது பற்றி தகவல் கூறினார். இனி - மறுநாள் செவ்வாய் கிழமை -லட்சுமி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிதுரை, மனைவி சங்கீதாவுடன் ஊர் திரும்பினார். ஆனந்த அழுகையுடன் ..
ஒருவருடைய கை விரல் ரேகையை போல, இன்னொருவருடைய ரேகை அமையவே அமையாது. இதில், இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், பிறப்பிலிருந்து இறப்பு வரை, நம் உடலில், எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், மாறாமலே இருக்கிற ஒன்று, கை விரல் ரேகைகள் தான். இந்த காரணத்துக்காகவே, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு, காவல் துறையினர், கை விரல் ரேகைகளையே பெரிதும் ..
மைதிலி, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி; படிப்பில் படுசுட்டி; வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்தாள்.பெற்றோருக்கு செல்லம் என்பதால், தின்பண்டங்கள், குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றுக்கு குறைவே கிடையாது. ஆனாலும், வீதியில் வரும், குல்பி ஐஸ், பஞ்சு மிட்டாய் போன்றவற்றையும் வாங்கி தரும்படி அடம் பிடிப்பாள்.அன்றும் அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தாள். அவளை சமாதான ..
தேவையான பொருட்கள்:கேரட் - 1 சர்க்கரை - 150 கிராம்காய்ச்சிய பால் - 150 மி.லி.,முந்திரி - 10திராட்சை - 10ஏலக்காய் - 3.செய்முறை:கேரட்டை சுத்தம் செய்து, துருவி, ஆவியில் வேக வைக்கவும்; வெந்த கேரட்டுடன், சர்க்கரை சேர்த்து கிளறவும். பின் காய்ச்சிய பாலை சேர்க்கவும். கொதித்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பொடித்த ஏலக்காய் போட்டு இறக்கவும். சுவை மிக்க, 'கேரட் பாயாசம்' தயார். சிறுவர், ..
தேயிலையின் பூர்வீகம்!தென்கிழக்கு ஆசியா தான் தேயிலை செடியின் பூர்விகம். ஆசிய நாடான சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சியில் தேயிலை முதன்முறையாக பயிரிடப்பட்டது. உலக அளவில் தேயிலை உற்பத்தியில், சீனா முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. வட கிழக்கு மாநிலங்களான அசாம், மேற்கு வங்கம் ஆகியவை உற்பத்தியில் ..
அது கோடைகாலம். கடும் வெயிலால், கோவிலம்பாக்கம் கிராம நீர் நிலைகள் வரண்டிருந்தன. உயிரினங்கள், வேறு நீர் நிலைகளை நாடின. ஆமை மட்டும் எங்கும் செல்லாமல் தவிப்போடு சுற்றி வந்தது. அதன் நட்பு வட்டத்தில் சில பருந்துகள் இருந்தன. அவை, ஆமைய பிரிய மனமின்றி, 'நண்பா... உன்னையும் உடன் அழைத்து செல்ல விரும்புகிறோம்...' என்றன.வருத்தத்துடன், 'அது எப்படி சாத்தியமாகும்... நீங்கள் வானத்தில் ..
என் வயது, 67; புத்தக நிலையத்துடன், 'தமிழ் இல்லம்' என்ற பெயரில் வாசக சாலையும் நடத்துகிறேன். இங்கு வரும் இளைஞர்கள், சிறுவர்மலர் இதழை படித்தபின், சில நேரம் எடுத்துச் சென்று விடுவர். இதனால், சனிக்கிழமை காலை இதழ் வந்ததும் தவறாமல் வாசிக்கிறேன். இதில் வரும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி மிகவும் கவர்ந்துவிட்டது. முதியவர்களின் எண்ணங்களை, 'வீ டூ லவ் சிறுவர்மலர்' பகுதியில் ..
அக்பர் அரசவையில் பாடகராக இருந்தவர் தான்சேன்.அன்று பொருள் நிறைந்த பாடல் ஒன்றை இசையுடன் பாடி, அக்பரை மகிழ்வித்தார்.அதைக் கேட்டு, 'மிக இனிமையாக இருக்கிறது; ஆனாலும், ஒரு வினா எழுகிறது; உங்களை விட இனிமையாக பாடக்கூடிய யாராவது இருக்கின்றனரா...' என்று கேட்டார் அக்பர்.'என் குரு ஹரிதாஸ் பாடுவார்; ஆனால், உங்கள் தர்பாருக்கு வர மாட்டார்; யாருடைய கட்டளைக்கும் இணங்கிப் ..
ஜெயிக்க பிறந்த ஜேம்ஸ்பாண்ட்!ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, பவுண்டைன் பிரிட்ஜ், எடின்பர்க் பகுதியில், ஆகஸ்ட் 25, 1930ல் பிறந்தார், சீன் கானரி.தொழிற்சாலையில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்தார் தந்தை. சலவை தொழிலாளியாக இருந்தார் அம்மா. இரண்டு பேரின் வருமானத்தில் தான் பட்டினி இன்றி வாழ்க்கை ஓடியது.குழந்தை பருவத்தில், 'எவ்ளோ சின்னதா இருக்கு இந்த வீடு... ஒரு வசதியும் இல்ல...' என, தன் ..
மஞ்சூர், மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்த சிறு கிரமாம். பள்ளி வசதி கிடையாது. சிறுவர், சிறுமியர் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு காட்டு வழியில் நடந்து சென்று படித்தனர்.அன்று, கிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடந்தது. வேடிக்கை பார்க்க குவிந்தனர் மக்கள்.புத்தக பையுடன் முனியனும், கருப்பனும் பள்ளிக்குப் புறப்பட்டனர். வழியில் படப்பிடிப்பை, சிறிது நேரம் வேடிக்கை ..
அன்பு கனிந்த பிளாரன்ஸ்... என் வயது ௨௮; இல்லத்தரசியாக இருக்கிறேன். பன்னாட்டு நிறுவனத்தில், அதிகாரியாக பணியாற்றுகிறார் கணவர்; ஒரே மகனுக்கு வயது, 3; எதை கேட்டாலும், நான் சொன்னதையே, திருப்பி சொல்கிறான்.ஆர்வத்துடன், 'மம்மு சாப்பிடுறியா...' என கேட்டால், 'மம்மு சாப்திரியா...' என பதில் கூறுகிறான். நேற்று பார்த்த சினிமா வசனத்தின் ஒரு வரியை இன்று கூறுகிறான். தலையில் ..
வணங்காமுடி ராஜ்யத்தில் திராட்சை விவசாயம் செய்தார் கேசவன். ஒவ்வொரு ஆண்டும் நிறைய மகசூல் கிடைத்தது. அந்த ஆண்டில் மட்டும், மிக குறைவான மகசூல். மிகவும் வருந்திய கேசவன், மற்ற விவசாயிகளிடம் விசாரித்தார். மகசூல் குறைவுக்கான காரணத்தை கேட்டார். எவராலும் சரியான காரணத்தை கூற இயலவில்லை. ஒரு நாள் - விவசாயி போல் மாறுவேடம் அணிந்து, மக்கள் நலனை அறிய நகர்வலம் வந்தார் மன்னர். அவரிடமும் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.