சென்றவாரம்: அமைச்சரின் உளவாளி கைது செய்த, மெய்யன்பன் உள்ளிட்ட எட்டு மேலை நாட்டு வீரர்களை, தளபதி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இனி-"எசமான் என்னை மன்னிச்சிடுங்க!'' என்று வேகமாக அழ ஆரம்பித்தான்."ஏன் அழுகிறாய்! என்ன தவறு செய்தாய். உடனே கூறு?''"நான் கூறுகிறேன்...'' என்று பலத்த குரல் கேட்டது.தளபதியும், சின்னையனும் திரும்பிப் பார்த்தனர்."ஆம் தளபதியாரே! நடந்த ..
அழகாபுரி என்ற நாட்டை அமரேந்திரா என்ற மன்னர் ஆண்டு வந்தார். மன்னர் அமரேந்திரா கொடூரமான எண்ணம் கொண்டவர். மக்கள் படுகின்ற துன்பங்களை எல்லாம் பார்த்து சிரிப்பார். குடிமக்கள் யாராவது அவரிடம் உதவி கேட்கச் சென்றால், எள்ளி நகையாடுவார். அதற்காக வேண்டி யாருமே அந்த மன்னரிடம் உதவி கேட்கச் செல்லமாட்டார்கள்.அந்நாட்டிற்கு புதிதாக இளைஞன் ஒருவன் வந்தான். அவன் பெயர் இளவழகன். அவன் ..
அல்டிமீரோவின் வேலைக்கு முக்கியமாகத் தேவைப்படுவது பார்வை. ஆனால், அதில் குறைபாடு காணப்பட்டது. அதாவது இடது கண்ணில் படர்ந்திருந்தது கண்புரை. அது நன்றாகப் பழுத்த பிறகே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், மங்கலான பார்வையுடன் காலத்தைத் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அல்டிமீரோ.இதுபோன்ற ஒரு தருணத்தில்தான் அரிகோவைப் பற்றி அவர் ..
ஒரு சமயம் விஜயநகரப் பேரரசு கிருஷ்ணதேவராயருடைய அரசவைக்கு வண்ண வண்ணத் தலைப்பாகை அணிந்த உயரமான இருவர் வந்தனர்.அவர்கள், "அரசே! நாங்கள் அஜ்மீரிலிருந்து வருகிறோம். அந்த ஊர் வாசனைத் தைலத்துக்குப் பெயர் போனது. நீங்களும் போட்டுப் பாருங்கள்... மகிழ்வீர்கள்...'' என்றனர்."எடுங்கள்... பார்க்கலாம்...'' என்றார் அரசர்.கொஞ்சம் முகர்ந்து பார்த்தார். மகிழ்ச்சி அடைந்தார். சபையினரும் ..
காந்தியைக் குறித்து ஒரு படம் எடுக்கப்பட்டது.அதில் நடிக்க பென் கிங்ஸ்லி என்ற ஒரு நடிகரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் புது டில்லிக்கு வந்தார்.அவருக்கு ஆடம்பரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் தங்குவதற்கான அறைக்கு அழைத்துச் சென்றனர்.பென் கிங்ஸ்லி உள்ளே நுழைந்தார். அனைத்தையும் பார்வையிட்டார். மிகவும் கவனத்தோடு அவரை மகிழ்ச்சியில் ..
ஒரு நரி, ஒரு ஓநாயைச் சந்தித்தது. அவை இரண்டும் உரையாடத் தொடங்கின.ஓநாய், நரியிடம் கேட்டது."நரித் தம்பி, நீ எதுவரை படித்திருக்கிறாய்?''"உண்மையைச் சொன்னால், நான் பாதி படித்திருக்கிறேன்!'' என்றது நரி."அப்படியென்றால், உன்னை விட நான் இரண்டு மடங்கு படித்திருக்கிறேன். அதனால் நீ இன்று முதல் என்னை, "சார்' என்று அழைக்க வேண்டும்!'' என்று கட்டளையிட்டது ஓநாய்.அப்படிப் ..
கண்ணாடி மட்டுமல்ல, செராமிக்ஸ், பாறைகள் போன்றவற்றையும் அறுக்க, "வைரம்'தான் பயன்படுத்தப்படுகிறது. வைரம் எந்ததொரு மெட்டலையும் விட அதிகக் கடினத்தன்மை வாய்ந்ததால் கண்ணாடி போன்றவற்றைக் கூர் சிதறாமல், வரை பிளேடு மூலம் அறுக்க முடிகிறது. முக்கியமாகக் கண் அறுவை சிகிச்சையில் பயன்படுகிறது. பெரும் பாறைகளைக் குடைந்தெடுக்க வைரத்துண்டுகளே பயன்படுகிறது. செயற்கை வைரங்கள் ..
அறுசுவைகளை பத்தி நமக்குத் தெரியும். அதன் பயன்கள் என்ன என்பதை தெரிஞ்சிக்கோங்க பட்டூஸ்!காரம்: உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளைக் குறைக்கவும், கூடுதலாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.கசப்பு: உடலிலுள்ள உதவாத கிருமிகளை அழிக்கும் சக்தியை மிகுதியாக்குகிறது.இனிப்பு: உடலில் தசையை அதிகமாக வளர்க்க உதவுகிறது.புளிப்பு: ரத்தக் குழாயிலுள்ள அழுக்கை நீக்கச் ..
இந்த மேஜிக்கிற்கு தேவையான பொருட்கள்: கண்ணாடி டம்ளர் ஒன்று, தண்ணீர் -ஒரு டம்ளர், ஒரு சிறிய கிண்ணத்தில் சோப்பு தண்ணீர்.மேஜிக் செய்யும் முறை:1. ஒரு கப் தண்ணீரில் சோப்பு கரைசலை கலக்கவும். இப்போது சோப்பு கரைசலைத் தொட்டு ஏதேனும் ஜோக் அல்லது வார்த்தைகளை கண்ணாடி டம்ளரில் எழுதுங்கள்.2. இப்போது டம்ளரை 15 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.3.இப்போது உங்கள் நண்பனுக்கு (அ) பார்வையாளர்களுக்கு ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.