சரியாகச் சொன்னீர்கள் ... வாட்ஸ் அப், இன்டர்னெட், ஏன் டிவி, டெலிஃபோன் கூட அனைத்து வீடுகளிலும் இல்லாத அந்த கால கட்டங்களில் விடுதலைப் புலிகள் சொல்வதையும், செய்வதையும் மட்டுமே மக்கள் நம்பினார்கள். அமைதிப் படை ராணுவச் செயலுக்காகவோ, தாக்குதல்களுக்காகவோ அனுப்பப் படவில்லை. புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடுநிலையாக செயல்பட்டு, புலிகளிடமிருந்த ஆயுதங்களைக் களைந்து அவர்களை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு திருப்பும் விதமான ஒரு நல்ல நோக்கத்திற்காக அனுப்பப்பட்டது. புலிகள் ஒத்துழைக்காமல் போனதால், இடையில் மாட்டிக் கொண்ட ராணுவத்தினர் இலங்கை ராணுவத்தாலும், புலிகளாலும் பெரும் இன்னல்களை அனுபவித்ததோடு பெருமளவில் நம் ராணுவ வீரர்களின் உயிரிழப்பும் ஏற்பட்டது. இங்கே குறிப்பிட்டது போல இந்திய ராணுவத்தினர் மீது கொரில்லா தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இலங்கை ராணுவத்தினரின் பிடியில் இருந்த பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதற்கு இந்திய அமைதிப்படையே காரணம் எனத் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. முடிவாக இந்திய அமைதிப் படையை விரட்டும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய பல அட்டூழியங்களை இந்திய ராணுவத்தினர் செய்ததாக மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. இறுதியில் 1989ல் திரு. வி.பி. சிங் பிரதமரான
பின்னர் இந்திய அமைதிப்படை விலக்கிக் கொள்ளப்பட்டது.
21-மே-2022 21:32:15 IST
உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்கும் அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் தமிழ் நாட்டின் மேதகு கவர்னர் அவர்களை பலி கடா ஆக்கியிருக்க வேண்டுமா எனும் கேள்விதான் எழுகிறது. தற்போதுள்ள தமிழக கவர்னர் அவர்கள் பதவிக்கு வந்து சுமார் 1 வருடங்கள்தான் ஆகிறது எனத் தோன்றுகிறது. ஆனால், பேரறிவாளன் அவர்களின் 31 வருட சிறை வாசத்திற்கு நம் நாட்டின் முந்தைய ஜனாதிபதிகள், நீதிபதிபதிகள், தற்போதைய நீதிபதிகள் என எவருமே காரணமில்லையா? அரசியல் சட்டப் பிரிவு விசேஷ அதிகாரத்தை உச்ச நீதி மன்றத்திற்கு அளித்திருக்கும்போது, அதைப் பயன்படுத்துவதில் இவர்கள் ஏன் காலம் தாழ்த்தினார்கள் எனும் கேள்வி எழுகிறதே.
18-மே-2022 13:39:16 IST
'ஸ, ஜ, ஷ,க்ஷ, ஹ' என்பவை வட மொழி ஒலிகள்.. அவற்றைத் தமிழில் வரி வடிவமாகக் காட்டத்தான் நாம் இவ்வாறு எழுதுகிறோம். நீங்கள் சொல்வது இந்த ஒலிகள் வரி வடிவமாக சம்ஸ்கிருதத்தில் இல்லை என்பது. அப்படியல்ல. சம்ஸ்கிருதத்தில் இதற்கான வரி வடிவம் வேறு படும். 'ஸ' என்ற ஒலியை வரி வடிவமாக்க 'ல'வைத் தேர்ந்தெடுத்து இடையில் ஒரு கோட்டை சேர்த்து 'ஸ'எனும் ஒலிக்கு வரி வடிவத்தை தமிழ் கொடுத்தது அதேபோல 'ஐ' என்ற உயிரெழுத்தை சற்றுத் திருத்தி 'ஜ' எனும் ஒலிக்கு வரி வடிவம் தந்தது. 'ஷ' என்பது 'டி' என்பதன் திருத்தமே அதே போல 'க்ஷ' எனும் ஒலிக்கு 'க' வையும் 'டி'ஐயும் இணைத்து 'க்ஷ'எனும் சம்ஸ்கிருத ஒலிக்கு வரி வடிவம் தமிழில் வந்தது. எனவே, இவை யாவுமே வட மொழி ஒலிக் குறிப்புக்கு இணையான தமிழ் வரி வடிவங்களேயன்றி வேறு அன்று. 'ஸ்ரீநிவாசன்' என்பதை 'சீனிவாசன்' என எழுதுவதில் பொருள் மாறுபடுகிறது. " ஸ்ரீ " என்பது திருமகளைக் குறிக்கும். திருமகளுடன் இணைந்தவர் என்பதைத்தான் 'ஸ்ரீநிவாசன்' எனும் பெயருக்குப் பொருள். 'சீனிவாசன்'எனில் 'சர்க்கரையில் இருப்பவர்' எனும் பொருளாகிறது. தூய தமிழ்ப் பற்றாளர்கள் 'ஸ்ரீ' ஐத் 'திரு' என மாற்றினார்கள். எனவே, 'ஸ்ரீரங்கம்' 'திருவரங்கம்' என ஆயிற்று. அண்ணாமலை அவர்கள் சொல்வதில் கருத்து உள்ளது. தமிழ் இலக்கண விதிப்படி பெயர்ச் சொல்லின் முதல் எழுத்து மெய்யெழுத்துடன் ஆரம்பிக்கலாகாது.
17-மே-2022 09:15:06 IST
ECRசாலையை EVR சாலையாக மாற்றியிருந்தால், ஒரு எழுத்தில்தான் மாற்றம் இருந்திருக்கும்.
இப்போது அங்கே இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வணிக வளாகங்களும், ஹோட்டல்களும், ரிசார்ட்டுகளும், குடியிருப்புகளும் தங்கள் முகவரியை நீட்டி முழக்கி கலைஞர் கருணாநிதி சாலை என மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
05-மே-2022 19:50:47 IST
சம்ஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்களா? அப்படியென்றால் +2 படித்து, 'நீட்' தேர்வு எழுதிப் படித்து மருத்துவப் படிப்புக்குத் தேர்வான மாணவர்கள் 250 பேருக்கு சம்ஸ்கிருதம் சரளமாகப் பார்த்துப் படிக்க முடிந்ததா? இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமல்லவா? சம்ஸ்கிருதத்தில் எப்படி, என்ன உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள் என்பதை 'வீடியோ'வாக வெளியிட்டிருக்கலாமே
01-மே-2022 14:55:51 IST
சம்ஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லையே தவிர, நிறைய காவியங்களும், கவிதைகளும், நூல்களும் அதில் உள்ளன. சம்ஸ்கிருதம் படிக்க, எழுதத் தெரிந்தவர்கள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளனர். இந்த உண்மை மறைக்கப்படுகிறது. சம்ஸ்கிருதமும் ஒரு தொன்மையான இந்திய மொழி. தொன்மையான மொழிகள் என்று பார்த்தால், நம் பாரத தேசத்தில் அனைத்துமே தொன்மையான மொழிகள்தான். வெவ்வேறு மாறுபட்ட நிலையில் அனைத்து மொழிகளும் சிறப்பு வாய்ந்தவையே. எனவே, ஒன்றையொன்று ஒப்புடைமை பார்த்து இது உயர்ந்தது காலத்தால் முற்பட்டது இதுதான் முதலில் வந்தது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. தமிழ்தான் தொன்மையான மொழி எனில் நாம் முதலாம் பராந்தக சோழன் காலத்து தமிழை இப்போதும் பேசி, எழுதி, உபயோகிக்கிறோமா? ஆம் எனில், தமிழ் நாட்டில் பல்வேறு சைவ, வைணவல் கோவில்களில் உள்ள தமிழில் உள்ளதாகச் சொல்லப்படும் கல்வெட்டுகளை ஏன் சாதாரண மனிதனால் படிக்க இயலவில்லை? அவை தமிழ் இல்லையெனில், மூவேந்தர்கள் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லையா? இன்னமும் 'ஹோட்டல்' என்று (தமிழில்) எழுதினால்தான் அநேகருக்குப் புரிகிறது. 'சிக்னல்', 'ஹாரன்', 'ஸ்கூட்டி', 'ப்ளம்பர்', 'எலக்ட்ரீசியன்' என்ற சொற்களெல்லாம் தமிழிலிருந்து வந்ததா? அஞ்சலகத்திலும், வங்கியிலும் பணம் எடுக்கவோ, பணம் செலுத்தவோ இருக்கும் ஆவணங்கள் தமிழில் இருந்தாலும் அவற்றைத் தப்பும், தவறுமாக நிரப்புபவர்கள் உள்ளனர் இவர்கள் விமானப் பயணத்தின்போது கொடுக்கப்படும் 'ஃபாரங்களை' (ஆங்கிலத்தில்) நிரப்ப அடுத்தவர் உதவி தேவைப்படுகிறது. ஆங்கில, அறிவும் இல்லை தமிழும் தகராறு எனும்போது கூட ஹிந்தியோ, சம்ஸ்கிருதமோ இருந்துவிட்டுப் போகட்டுமே...
01-மே-2022 09:28:44 IST
'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' எனும் புரட்சிகரமான மசோதாவைக் கொண்டு நடைமுறைப் படுத்த முயல்பவர்கள்தான், தாங்களும்... அதாவது முதல்வர்களும் துணை வேந்தர்களாகலாம், வேந்தர்களாகலாம் எனும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், 3,4 முறைக்கு மேல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபை உறுப்பினர்களானவர்கள் அனைவரும் முதலமைச்சர் ஆகலாம் என்று சொல்ல விரும்பமாட்டார்கள் என்பதுதான் உண்மை.
29-ஏப்-2022 08:08:42 IST
6300 கோடி ரூபாய்க்கு நீங்கள் கேட்டபடி 'வெல்ல நிவாரணம்' கொடுத்திருந்தால் நிச்சயமாக எறும்பு வந்து அனைத்தையும் சாப்பிட்டு விட்டது என்றுதான் சொல்லப்போகிறீர்கள். எனவேதான் வெறும் 300 கோடி மட்டும் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.. நீங்களும் உங்கள் தமிழும் ..
17-ஏப்-2022 21:53:07 IST
இவர்கள் கையில் ஏதாவது விழுந்தால் உடனே கொடுத்தவர் கால்களில் விழுபவர்கள்.. ஒருக்காலும் உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.. காங்கிரசை 1967 வரை எதிர்த்து விட்டு பின்னர் 'கை'யோடு இணைந்து விட்டவர்கள்.. பெறுவதெல்லாம் வலது கையில் விழுந்தாலும் இடது கைக்குத் தெரியாமல் வாங்குபவர்கள்.. காலில் விழுவதைப் பற்றி என்ன வியாக்ஞானம் செய்தால் காதில் விழாதவர்கள்...
07-ஏப்-2022 15:56:44 IST
நீங்களே லிஸ்ட் கொடுத்துள்ளீர்கள் பாருங்கள்... அதில் வேண்டுமென்றே சிலரை விட்டு வீட்டீர்கள் ... விடுபட்டவர்களுக்கும் சேர்த்துதான் நமது பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்... நீங்கள் கொடுத்துள்ள லிஸ்ட்டில் 60 சதவீதம் பேர் வெளியேற்றப்பட்டால் போதும்... மற்றவற்றை மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான்...
06-ஏப்-2022 21:14:48 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.