அனைத்திற்கும் டாக்டர் அம்பேத்கரைப் புகழ்ந்து பேசும் ஒரு சில அரசியல்வாதிகள் அவர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய சட்ட விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வருகிறார்கள் முக்கியமாக அசுர பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும் வாய்ப்பைப் பெறும் அரசியல் கட்சிகள் இதனைச் செய்கின்றன. ஆரம்ப காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் நலம் கருதியும், சமூக நலன் கருதியும் தேவையான ஒரு சில சட்ட திருத்தங்களை பாராளு மன்றத்தில் உரிய விவாதங்களுக்குப் பின்னரே கொண்டு வந்தார்கள். ஆனால், எமெர்ஜென்ஸி காலத்திலும் அதன் பின்பும் இந்த மரபுகள் பெரும்பாலும் மீறப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பேரில் அவசரச் சட்டங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டன. நீதி மன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு மக்களின் பிரதிநிதி அடுத்த கணமே அந்தப் பதவிக்கு தகுதியில்லாதவராகிறார் என்றுதான் சட்டம் சொல்கிறது. பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியிருந்த திரு.லாலு பிரசாத் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு சட்ட திருத்தம் காங்கிரஸால் கொண்டு வரப்பட்டது அதன்படி நீதி மன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு நீதி மன்றத்தால் இறுதித் தீர்ப்பு வரும் வரையில் பதவியில் இருக்கலாம் என்பதுதான் அதன் சாராம்சம். மேல் முறையீட்டுக்கு நீதி மன்றம் 30 நாள் அவகாசம் வழங்குகிறதா அல்லது
90 நாள் அவகாசம் வழங்குகிறதா என்பதல்ல பிரச்னை 'நீதி மன்றத்தால் இறுதி தீர்ப்பு வரும் வரையில்..' என்றால் என்ன பொருள்? மாறி மாறி மேல் முறையீட்டுக்கு செல்லும்போது நீதி மன்றம் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்க 4, 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் கூட எடுத்துக் கொள்ளலாம் அதுவரை எவரும் பதவி இழக்க இயலாது இடையில் தேர்தல் வந்தால் கூட போட்டியிட்டு வென்று மறுபடியும் நாடாளுமன்றத்திற்கு வரலாம் என்பதுதான் மறைமுகப் பொருள். அப்போது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தபடியால், இந்த சட்ட திருத்தம் காரணமாக எதிர்காலத்தில் எதிர்க் கட்சிகள் பலனடைந்து விடக்கூடாது எனும் நல்ல எண்ணத்தில் இந்த சட்ட திருத்தம் ராகுல் காந்தியின் முயற்சியால் கை விடப்பட்டது. இவர் பார்லிமென்ட் சென்று என்ன கிழித்தார் என்று எவரும் இனிமேல் கேட்டு விடக் கூடாது எனும் தன்மான உணர்வில் இந்த சட்ட திருத்தத்தை அவரே அனைவரும் காணும் வண்ணம் தன் கையால் தானே கிழித்தெறிந்தார்.
25-மார்ச்-2023 22:22:41 IST
'நீ பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமான் பேசாத வார்த்தைகளுக்குத்தான் நீ எஜமான் ' என்று சொல்வதுண்டு. அதேபோல, நீ உமிழ்ந்த வார்த்தைகளை நீயே பொறுக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் விதி. நீதி மன்றம் தண்டனை அறிவித்ததில் தவறேதும் இல்லை இதன் காரணமாக ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழப்பதோடு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் இழக்கலாம். இந்த தீர்ப்பு ஒரு மைல் கல். இதனை முன்னுதாரணம் காட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாகவும், ஆபாசமாகவும், கேலியாகவும்
பேசுபவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் இதே போன்று தண்டனைக்கு
அவர்கள் உள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
23-மார்ச்-2023 20:31:10 IST
அனைத்திலும் சமத்துவத்தைக் எதிர் நோக்கும் அரசியல்வாதிகள், 'ஆப்சென்ட்' ஆவதிலும் சமத்துவம் வெளிப்படுகிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும்....
19-மார்ச்-2023 08:46:02 IST
அடேய் .. மாணவக் கண்மணிகளா பெரியார் வந்துதானேடா நீங்கள் எல்லோரும் பள்ளிக் கூடத்திற்கே போக ஆரம்பித்தீர்கள் என்று எல்லோரும் சொல்றாங்களே... ஸ்கூலுக்கு 'கட்' அடித்து விட்டு சினிமாவுக்கோ, காஃபி ஷாப்புக்கோ, மாலுக்கோ சென்று சுற்றுகிறீர்கள்..... சரி ..போகட்டும்... பரவாயில்லை... ஆனா.. தமிழ் பரீட்சையையும், ஆங்கிலப் பரீட்சையையும் பெரியாரா வந்து உங்களுக்காக எழுதுவாரு? இதே 'லெவலி'ல் நீங்கள் இருக்கிறீர்கள் எனில் ' நீட்'டுக்கும் 'நீட்டாக'ஆப்சென்ட் தானா?
18-மார்ச்-2023 22:35:19 IST
'கட்சிக்கு உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் கெட்ட பெயர் ஏற்படுத்தி கட்சிக்கும் நாட்டிற்கும் களங்கும் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் திரு. ராகுல் காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எவரும் திரு. ராகுல் காந்தியுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது ' என்பது போன்ற அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்
திரு. மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக வெளியிட்டால்தான் இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது எனப் பொருள். செய்வாரா?
16-மார்ச்-2023 19:54:13 IST
தமிழ்நாடு மாநிலத்தில் அரசாங்க கல்வி நிலையங்களும், தனியார் கல்வி நிலையங்களும் அநேகமாக காலை 9.00 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் துவங்குகின்றன. ஒரு சில பள்ளிகள் 10.00 மணிக்கு துவங்கலாம். இந்த அட்டவணைக்கு ஏதுவாக மாணவர்களுக்கு இலவசமாக பஸ் பயண சலுகையைத் தரும் அரசாங்கம் அதிக பேருந்துகளை காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் பிரத்யேகமாக 'மாணவ மாணவிகளுக்கு மட்டும்' என ஸ்டிக்கர் ஒட்டி இயக்கலாம். இது மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்வதைத் தடுக்கும். அதேபோல மாலை நேரங்களில் வீடு திரும்ப 4.30 முதல் 5.30 மணி வரை அதிக பேருந்துகளை மாணவ/மாணவியருக்கென இயக்கலாம். திருச்சி போன்ற பெரு நகரங்களில் பள்ளி மாணவ/மாணவியர் யூனிஃபார்மில் காலை 10.30 மணிக்கும் மதியம் 3.30 மணிக்கும் இடைப்பட்ட காலங்களில் பள்ளிக்குள் இருக்காமல் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. ஷாப்பிங் எரியா, காஃபி ஷாப், தெருவோரக் கடைகள், மால்களில் காண நேரிடுகிறது. இவர்களை யார் கட்டுப்படுத்துவது? பள்ளிக்குள் இருக்க வேண்டிய நேரத்தில் அங்கு செல்லாதவர்கள் பரீட்சைக்குப் பயப்படுவதில் ஆச்சரியம் இல்லை. இந்த வருடம் 50,000 பேர் நிச்சயம் தோல்வி என்பது உறுதியாகி விட்டது.
15-மார்ச்-2023 08:57:12 IST
அட... சாமிப் படத்தை விடுங்க சார் .. கோவில்களை நிர்வகிப்பதாகச் சொல்லும் அறநிலையத் துறை புகழ் பெற்ற பெரிய கோவில்களின் 'ப்ளோ அப்' ஃபோட்டோக்களையாவது பின்னணியில் வைக்க வேண்டும் அல்லவா? இது என்ன திராவிடக் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டமா? இங்கேயுள்ள மடாதிபதிகள் அனைவரும் சைவ சமயத்தினர் வைணவ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது காஞ்சி, சிருங்கேரி மடத்தைச் சேர்ந்தவர்களோ ஏன் அழைக்கப்படவில்லை? வேதம் தெரிந்த பண்டிதர்களைக் காணவில்லையே ஏன்? மேடையில் இருப்பவர்களை திரு. சுகி.சிவம் உட்படப் பலரை நடு நிலையாளராக ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
08-மார்ச்-2023 05:57:05 IST
'இந்தி தெரியாது போடா' என தங்களது மேலாடையில் எழுதிக் காட்டினார்களே அப்போதே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? இந்தியா நமது நாடு இதில் வசிக்கும் பல்வேறு மொழி பேசும் மக்கள் நம் மக்கள் அவர்கள் நம் நாட்டிற்குள் நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எங்கு வேண்டுமானாலும் பிழைப்பை நாடிச் செல்லலாம் அதன் காரணமாக தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ குடியேறலாம் இந்த உரிமை நம் மாநிலத்தவர்களுக்கு எவ்வளவு உள்ளதோ அவ்வளவு மற்ற மாநில மக்களுக்கும் உண்டு. ஒரு மாநிலத்தின் மொழியைத் தெரிந்து கொள்ளாமல் அங்கு வேலை தேடிச் செல்வதோ அல்லது அங்கு வேலை தேடிக் கொண்டு அங்குள்ள மொழியைக் கற்றுக் கொள்வதோ தனிப்பட்ட மனிதரின் விருப்பம். 'பிஜேபி தமிழ் இந்தி தெரிந்த உதவி மையங்களை அமைக்க வேண்டும்' என்பது நகைப்புக்கு உரியது ஏன் தமிழக அரசுக்கு இந்த கடமை கிடையாதா? தனது கூட்டணி கட்சித் தலைவர்களும், முன்னணித் தொண்டர்களும் வட மாநில மொழியைப் பற்றியும், தொழிலாளர்களைப் பற்றியும் கேலியும், கிண்டலுமாகவும், ஆபாசமாகவும், வெறுப்பைத் தூண்டும் விதமாகவும் பேசும்போதும் செய்தி ஊடகங்களில் பதிவிடும்போதும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டல்லவா இருந்தது.
05-மார்ச்-2023 09:14:59 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.