எப்படியாவது இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று என்னென்னமோ செய்கிறார்....... ஆனால் பாவம் எல்லாம் தோல்வியிலேயே முடிகிறது...... இதை விட்டுவிட்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்துவதை பற்றி சிந்திக்கலாம்..... நிதிநிலைமையை சரி செய்ய அடுத்து எந்த நாட்டிடம் கையேந்த வேண்டும் என்பதைப்பற்றி சிந்திக்கலாம்.......
04-ஜன-2020 17:05:40 IST
திமுக அதிகமான இடங்களை பிடித்தது என்பதற்காக வேண்டுமானால் சந்தோஷப்பட்டாலும் நினைத்த அளவுக்கு பெருவாரியான வெற்றி பெறவில்லை என்பதை திமுக உணர்ந்துள்ளது போல தெரிகிறது இவரது அறிக்கையின் மூலம்...... தோல்விகரமான வெற்றி என்று கூறுவதைப்போல உள்ளது தொளபதியின் அறிக்கை.......
04-ஜன-2020 16:48:47 IST
இரண்டு கட்சிகளுமே சரி சமமாக அளவில் (திமுக சற்று அதிகம்) பெற்று இருந்தாலும், இது இரண்டு அக்கட்சிகளுக்குமே சரியான அடியாகத்தான் கருதவேண்டும்...... ஒன்று- ஆட்சியில் இருக்கும் கட்சிக்கே உள்ளாட்சி தேர்தல்களில் அதிக இடங்கள் கிடைக்கும் என்பது இம்முறை மாறியுள்ளது..... இது அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பையே காட்டுகிறது...... தென்மாநிலங்களில் மட்டும் தான் ஆளும் கட்சி கணிசமான இடங்களை பெற்றுள்ளது..... அது இல்லையென்றால் இன்னும் மோசமாக போய் இருக்கும்........ இரண்டு - கடந்த இரண்டுமுறையாக ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி இந்த தேர்தலில் முழுமையாக வெளிப்பட வில்லையோ என்று என்ன தோன்றுகிறது..... அதாவது அதிருப்தி என்பது முழுமையாக இல்லையோ என்று எண்ண வைக்கிறது முடிவுகள்...... 3 - என்னதான் திமுக ஆளும்கட்சிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினாலும் முழுமையாக வெற்றிபெறாதது சற்று அவர்களுக்கு பின்னடைவாகவே அமைந்து இருக்கிறது...... 4 - அதிமுக மற்றும் திமுக கட்சி தான் இந்த தேர்தலில் பிரதானமாக இருந்தது..... அப்படியிருந்தும் திமுக வால் முழுமையான வெற்றியை அடையமுடியவில்லை எனும் போது மற்ற கட்சிகள் இருந்தால் காலத்தில் இருந்திருந்தால் இரண்டு கட்சிகளுமே இன்னும் சரிவை சந்தித்திருக்கும்..... ஆக தேர்தல் உணர்த்துவது அடுத்த முதல்வர் இவர்தான் என்று யாரையும் குறிப்பிடும் வண்ணம் இல்லை என்பதே.........
04-ஜன-2020 16:27:07 IST
சிறைபிடிக்கப்படுவோம் என்று தெரிந்தவுடன் எடுத்த அரசியல் ஸ்டண்ட் அபாரம்..... அரசியல்வாதிகளையே மிஞ்சிவிட்டது இவரது நடவடிக்கை....... வீராவேசம் சில சூழ்நிலைகளில் வெறும் பேச்சில் மட்டும் இருந்தால் போதாது.......
02-ஜன-2020 15:26:42 IST
அநேகமாக உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது..... நுகர்வோரின் வாங்கும் திறனை அத்திப்படுத்தினால் சற்று பொருளாதாரம் மேன்மையுறும்..... ஆனால் அதை சிந்திப்பதாக தெரியவில்லை.......
02-ஜன-2020 15:07:01 IST
குற்றங்கள் குறைந்துள்ளது என்ற செய்தி என்றாலும் சில குற்றங்களுக்கு FIR போடவே போலீசார் கெடுபிடி காட்டுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை... இவற்றை களைய தற்போது Online பதிவுகள் கொண்டு வந்திருப்பது வரவேற்க தக்க செயல்... இது நன்று என்று சொல்வதற்கில்லை, பரவாயில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.....
02-ஜன-2020 14:17:42 IST
யார் வந்தால் என்ன மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்று தான் பார்க்க வேண்டும். இதுபோன்ற தேர்தல்களில் அந்ததந்த பகுதியில் உள்ள செல்வாக்கான மனிதர்களை தேர்தெடுப்பதும் நல்லது தான்.. அப்போது தான் ஜனநாயகம் தழைக்கும்.. மாறி மாறி கட்சிகளை தேர்ந்தெடுப்பது பின்னர் அவர் அந்ததந்த பகுதிகளில் சிற்றரசர் போல வலம் வருவது தடுக்கப்பட வேண்டும்...
02-ஜன-2020 12:56:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.