நாகரிகம் கொடி கட்டிப் பறக்கிறது. ஆளும் கட்சியின் பாராளு மன்றக் கட்சித் தலைவர் அப்பட்டமாக அறைகூவல் விடுகிறார்.
இந்த நாட்டில் ஜனநாயகம் கை கொட்டிச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. ஆளும் கட்சிப் பிரமுகர்கள் எவ்வளவு தாராரளமாக வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள் . மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
28-ஜன-2023 13:54:15 IST
அரசியல்வாதிகள் ஆளுநர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஆளுநர்கள் அரசியல் பேசுவது அதிமாகி வருகிறது.தமிழ்நாடு என்ற பெயர் பற்றி ஆளுநர் பேசி உள்ளது தேவையற்றது. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாரதியின் வாக்கு பொய்யா. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக அப்போதைய சென்னை ராஜ்ய சட்ட சபையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் பட்ஜெட் உரையை பகிஷ்காரம் செய்தன. தமிழரசுக் கழகம் 18 நாட்கள் போராட்டம் நடத்திற்று. எம்மைப் போன்ற பலர் சிறை சென்றோம். சும்மா கிடைத்து விடவில்லை தமிழ்நாடு என்ற பெயர். இது போன்ற விவகாரங்களில் ஆளுநர் கருத்துரைத்து தமிழர்கள் மனதைப் புண்படுத்தாமலிருப்பது நல்லது.
05-ஜன-2023 16:55:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.