பைக்கில் வந்தவர்கள் யார் ? என்று விசாரணை நடக்கிறது என்று சொல்லுவது தலையைச் சுற்றி மூக்கைத்தொடுகிற கதையாக இருக்கிறது. இதுதான் காரணம் கேஸுகள் எல்லாம் பைசல் ஆகாமல் மலைபோல் குவிந்து கிடைப்பதற்கு. வந்த பைக்கின் நம்பரை சிசிடிவி புட்டேஜ்ஜிலிருந்து ட்ரேஸ்அவுட் செய்து அந்த வண்டிக்குரியவரை முதலில் கைது செய்து துப்புத் துலக்கி குற்றவாளியைக் கண்டுபிடிக்கலாம்.போலீஸ்காரர்கள் எல்லாம் இன்னும் எல்.கே.ஜி .,யு.கே.ஜி.நிலையிலேயே இருந்தா எப்படி?
08-பிப்-2022 12:39:55 IST
கடந்த பத்து வருட காலத்தில் கார்பொரேஷனில் எந்த ஒரு பணியும் நடக்கவில்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.கலெக்ஷன்,கரப்ஷன் எல்லாம் அமோகமாக நடந்திருக்குமே? எந்த மாமாங்கத்தில் நாட்டில் நல்ல ஆட்சி நடைபெற்றிருக்கிறது ?
07-பிப்-2022 00:28:32 IST
இவர்கள் இருவரும் பணியில் இருந்தபோது (தலைமை) ஆசிரியர் அறையையே ரியல் எஸ்டேட் ஆஃபீஸ்சாகத்தான் வைத்திருந்திருப்பார்கள். இப்பொழுதெல்லாம் ஒரு செங்கலை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றும் காலமாக ஆகிவிட்டது. கல்வித்துறை அதிகாரிகள் இந்த இருவரிடமிருந்தும் கணிசமான அளவு பயன் பெற்றுக்கொண்டு பள்ளியில் அவர்கள் பணியில் போதிய அளவு கவனம் செலுத்தாமலிருந்ததைக் கண்டு கொண்டிருந்திருக்க மாட்டார்கள்.அவற்றையும் விசாரித்து கல்வித்துறை அதிகாரிகளையும் ஒரு வகையில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்படவேண்டும்.
04-பிப்-2022 13:35:31 IST
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் வைபவம் அல்லோகலல்லோகப்படாமல் இருப்பதற்குக் கோவிட்டும் ஒரு முக்கியக் காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
04-பிப்-2022 12:46:23 IST
கடலில் கலங்கரை விளக்கத்தைக் கண்ட நாவாய் போன்று வாழ்க்கை என்னும் கடலில் தனக்குப் பிடித்த துறையில் பயணிக்கக் கால் தடம் பதித்துள்ள திரு.அரவிந்த் பெருமாள் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.
04-பிப்-2022 00:50:04 IST
நாடு மெல்ல மெல்ல சீரழிந்து கொண்டிருக்கிறது. டாஸ்மாக், போதைப் பொருட்கள் எல்லாம் நாட்டை நரக பூமியாக மாற்றிக் கொண்டு இருக்கின்றன.
03-பிப்-2022 16:12:03 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.