கோர்ட் தீர்ப்பு என்றால் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அடிக்கடி அறிவுறுத்துபவர்களே, இப்படி புலம்பினால் என்னாவது?? குஜராத் கலவர தீர்ப்பு, மசூதி இடிப்பு தீர்ப்பு வந்தபோது கொண்டாடியது போல இதையும் கொண்டாட வேண்டியதுதான்...
16-பிப்-2021 14:45:27 IST
மருத்துவ காரணங்கள் இவர் அறிவிப்புகள் செய்யும் முன்பே இவருக்கு தெரிந்தவைதானே, சொல்லியதில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற திட்டத்தை "அண்ணாத்தே" திரைக்கதையில் கண்டுபிடித்ததுதானே விமர்சனத்திற்கு காரணம். வந்தாலும் அசிங்கப்படப்போவது உறுதிதான், அதை வராமலே சற்று குறைத்து அனுபவிக்கும் கர்மவினை அவருடையது.
12-ஜன-2021 17:15:38 IST
இன்று இவரது கட்சியில் பொறுப்பில் இருப்போர் பலரும் இரண்டாம் தலைமுறை ஜனசங்க கட்சியினர்தான். கட்சியில் இல்லையென்றால் மற்ற அதிகாரமையங்களில் வாரிசுகளின் ஆதிக்கம் தொடரத்தான் செய்யும். கம்யூனிஸ்டுகள் உட்பட எந்தக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்திய கேரள உள்ளாட்சி தேர்தலே இதற்கு சாட்சி. இவருக்கு வாரிசு இருந்திருந்தால் இப்படி பேசக்கூட முடியாது. காங்கிரசை காட்டி சொந்த கட்சியினருக்கு அறிவுரை கூற முயற்சிக்கிறார், இதில் தோல்வியும் அடைவார்.
12-ஜன-2021 17:04:29 IST
அசோக் குலாத்தி இந்த குழுவில் இடம் பெற்றிருப்பது நல்ல திருப்பமென்று சொல்லலாம். அவரால் விவசாயிகளை மாற்றுப்பயிருக்கு கொண்டு செல்லமுடியுமென்று தோன்றுகிறது. அரசின் கொள்முதல் விஷயம் விவசாயிகள் கைவிடுவது மிகசிரமம். மாற்றுப்பயிர்களுக்கு சலுகை, விற்பனைக்கு உதவும் சந்தை என்று அரசுதான் வழிகாட்டவேண்டும். சட்டத்தின் மூலம் சீர்திருத்தம் விவசாயத்தில் சரிவராது. எப்படியாகினும் உணவுப்பொருட்கள் வரும்காலங்களின் விலையேற்றம் பொதுமக்களை பாதிக்கப்போவது நிச்சயம்.
12-ஜன-2021 16:58:29 IST
கொரானா நோய் மனிதர்களை தாக்கியபோது, மருத்துவர்கள் கொரானாவை ஒழிக்க பாடுபாட்டார்கள். ஆனால் பறவைகளுக்கு ஒரு நோய்வந்தவுடன், அந்த நோயை ஒழிக்க முடியாமல், அந்த நோயாளிகளையே ஒழிக்கிறார்கள்.. நோயுடன் போராடவேண்டும் நோயாளியுடனல்ல என்ற விளம்பரம் பாவப்பட்ட பறவைகளுக்காக இல்லை.
11-ஜன-2021 17:47:48 IST
விவசாயிகளுக்கான திட்டமென்ற பெயரை எதற்கு வைத்தார்களோ? ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் மண்டிகளுக்கு மூடுவிழா சட்டம் என்றே வைத்து இருக்கலாம். அரசுகொள்முதல் கைவிடல் சட்டமென்று பெயர் வைக்கலாம். எங்கும் யாருக்கும், எந்த அனுமதியின்றி, கிடைக்கும் விலைக்கு விற்க அனுமதிக்கும் சட்டமென்று பெயரை வைத்திருந்தால் ஏன் போராட போகிறார்கள். அரசி கோதுமை இரண்டுமே தேவைக்கு அதிகமாக விளைகிறது, அதனால் நிலத்தடி நீர் குறைத்துவிட்டது, அதனால் குடிநீர் தட்டுப்பாடு, கொள்முதல் செய்யவும், செய்ததை சேர்த்துவைக்கவும் அரசிடம் போதுமான பணமில்லை, நிர்வாக திறனுமில்லை அத்துடன் விருப்பமும் இல்லையென்று தேங்காயை உடைப்பது நல்லது. விவசாய சீர்திருத்தங்கள் சட்டங்கள் மூலம் நடத்திக்காட்டுவது சரிவராது. அரசின் கொள்முதலை நம்பியே விவசாயம் செய்துவருபவர்களே இந்த போராட்டக்காரர்கள். இனிமேல் தனியாரிடம், போட்டி போட்டுக்கொண்டு விலை நிச்சயமில்லாமல் கையேந்தி நிற்கவேண்டும். மாற்றுப்பயிருக்கு சலுகைகளை வாரிவழங்கியே அரசு இந்த சீர்திருத்தங்களை கொண்டுவரமுடியும். இன்று தேவைக்கும் அதிகமாக விளையும் கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட காலம் மறந்துவிட்டதா? படித்தவன் பாமரனை எப்படி கையாள்வது என புரியாத நிர்வாக திறனை எவரும் பாராட்டமாட்டார்கள்.
11-ஜன-2021 17:24:41 IST
ஜெ இவருக்கு தந்த மரியாதையே அதிகம். ஒரு சீட் கூட தனியாக வெல்லமுடியாத, வன்முறையை இன்றும் கைவிட மறுப்பவரை, கட்சிகள் கைவிட வேண்டும்.
11-ஜன-2021 17:04:39 IST
நீங்க கேட்டதெல்லாம் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும். தனியார் முதலாளிகளுக்கு விருப்பம் இல்லையென்றால் அவரை குற்றம் சொல்லாதீர்கள்.
11-ஜன-2021 17:01:58 IST
வரி ஏய்ப்பு என்பது பல்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவது இரண்டே காரணங்களால்தான். ஒன்று அதீதமான வரிவிதிப்பு, மற்றொன்று லாபம் குறைந்த அல்லது இல்லாத இன்றைய சந்தை சூழல். ஒருவிதமான வரி என்பதே கேட்பதற்கு அருமையாக இருந்தாலும், சிறிய நிறுவனங்களும், பெருநிறுவனங்களும் ஒரேவிதமான பொருட்களுடன் சந்தையில் நிற்பது சமபலம் இல்லாதவர்களிடையே போட்டி என்பது போலத்தான். அதிகமான வரிவிதிப்பு தொடரும்வரை வரிஏய்ப்பும் தொடரும்...
04-ஜன-2021 13:40:56 IST
அரசு ஏதோ இந்துமத கோவில் மட நிர்வாகங்களை நல்லமுறையில் செய்துவருவது போல எண்ணி இப்படி கேட்டால், அது முற்றிலும் தவறு. அறம்கெட்ட துறை என்று பெயரெடுத்த நிலையில் அதன் நிர்வாகம் இருக்கிறது. அந்தந்த நகரில் வாழும் பக்தர்களே போராடி நடக்கும் தவறுகளை சீர்செய்ய முனைகின்றனர். அணைத்து தவறுகளும் அரசின் ஆதரவோடு நடப்பவையும் கூட. இந்நிலையில் நியாயம் உங்கள் பக்கமிருப்பின் மக்கள் ஆதரவு கிடைக்க, இன்றுள்ள ஊடக முறைகளில் மறைமுகமாகவே ஆதரவை திரட்டி போராடலாம். அரசை நம்பாமல் ஆண்டவனை நம்புவது நல்லது.
03-ஜன-2021 14:54:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.