அத்திக்கடவு-அவிநாசி திட்டம் போல , பவானிசாகர் அணையிலிருந்து புங்கம்பள்ளி பெரிய குட்டையில் நீர்த்தேக்கம் செய்தால் , அணையிலிருந்து நீர் கொண்டு வரும் பாதைகளில் இருக்கும் விவசாய பூமியிலும் , நீர்த்தேக்கம் செய்ய இருக்கும் புங்கம்பள்ளி குட்டையினை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் நீர் பிடிப்பு அதிகமாகி விவசாயம் செய்யும் பூமியின் பரப்பு அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும் , வேளாண் உற்பத்தியும் பெருகும்.அரசு நடவடிக்கை எடுக்குமா?
17-மார்ச்-2022 07:35:08 IST
வேலியில போற ஓணாயை எடுத்து வேட்டியில உட்ட கதை அப்படின்னு சொல்லுவாங்க, அத போல தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம்ன்னுட்டு சொல்லி, இப்ப என்னடா இப்படி ஆயிடுச்சுன்னு நினைச்சி நீட் தேர்வு ரத்து என்ற தீர்மான சனியனை ஜனாதிபதிக்கு அனுப்பினால், சனியன் தொலைந்தது என, அவர் இருந்து விடலாம் அப்படிங்கறாரா ?
11-பிப்-2022 10:41:28 IST
தேதி : 06.01.2022.
இடம் : சத்தியமங்கலம்.
தமிழ்நாடு அரசு
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை
மாண்புமிகு முதலமைச்சரின் மாடித்தோட்ட காய்கறி தொகுப்பு பெற 10.12.2021 அன்று விண்ணப்பம் அனுப்பி இருந்தேன். விண்ணப்ப எண் : 9761639115957 . தோட்டக்கலை துறை / டான்ஹோடா மூலமாக , கடந்த 21.12.2021 அன்று குறுந்தகவல் எனது கைபேசி எண்ணுக்கு வந்தது. அதன் அடிப்படையில் அருகில் உள்ள தோட்டக்கலை இணை / துணை இயக்குனர் அலுவலகம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது தோட்டக்கலை டிப்போ அலுவலகத்தை தொடர்பு கொண்டு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் , என்றும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் வி.பிரியா அவர்களை அணுகவும் என்று தெரிவித்து இருந்தார்கள். இது நாள் வரையிலும் தொகுப்பு கிடைக்கப்பெறவில்லை. இன்று தோட்டக்கலை உதவி இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்ட போது , காய்கறி தொகுப்புகள் அனைத்தும் ஈரோடு அலுவலகம் சென்றடைந்துள்ளது என்றும் வரும் திங்கள் கிழமை வந்து சேரும் என்றும் சொல்லியுள்ளனர். அந்தந்த வட்டார அலுவலகம் வந்தடைவது போல செய்திருந்தால் காய்கறி தொகுப்பு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனே கிடைத்திருக்கும். அல்லவா. இது குறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இலவச எண்: 1800 425 4444 என்ற டோல் பிரீ எண்ணை பல முறை தொடர்பு கொண்டு தகவல் கேட்க எண்ணியும் , பலமுறை இணைப்பு கிடைத்ததும் , பலமுறையும் உடனேயே இணைப்பை துண்டித்து விட்டனர். . லேண்ட் லைன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் எந்த சமயத்திலும் பிஸி பிஸி என்றே வந்துகொண்டுயிருக்கிறது ( 044 2851 3232 ) எங்கே யாரை இது குறித்து தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை. தோட்டக்கலை உதவி இயக்குனர் திங்கள் கிழமை வந்து சேரும் என்றும் சொல்லியுள்ளனர்
06-ஜன-2022 17:47:46 IST
கொகுசு கார் இறக்குமதிக்கான வரி குறித்து அவர் தம் தணிக்கையாளரை ஆலோசித்து இருப்பார் அல்லவா ? அவர் தெளிவாக வரி குறித்து விவரங்கள் சொல்லி இருப்பார். இவ்வளவு வரி வரும் என்று தெரிந்திருந்தும் ஏன் அதனை வாங்க வேண்டும் . வரிவிலக்கு பெறலாம் என்று சொல்லியிருப்பார் , அதனால் சொகுசு கார் வாங்கிவிட்டார்..எவ்வளவோ தொழில் புரிவோர் எண்ணற்ற இயந்திரங்களையும் , அதன் உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத உற்பத்திக்கு பயன் படக்கூடிய இறக்குமதிக்கு வரி விலக்கு கேட்கக்கவில்லை. சொகுசாக பயணம் மேற்கொள்ள அரசு விதித்துள்ள வரியினை செலுத்தி ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர இப்படி இருக்கக்கூடாது ?. இன்றியமையாத பல்வேறு மருத்துவ உபகாரணங்களுக்கே இறக்குமதி செய்யும்போது முறையான அணைத்து வரிகளையும் செலுத்துகின்றனர் அல்லவா ?
25-அக்-2021 20:13:49 IST
திருப்பூர் மாவட்டத்தில் கோவிஷில்ட் தடுப்பூசி முகாம் பல்வேறு தேதிகளில் நடைபெற , பல்வேறு பகுதிகளில் முன் பதிவு நடைபெற்று வருகிறது. அதில் திருப்பூர் கிழக்கு ரோட்டரி சங்கம் ரூ.780.00 என்றும் , திருப்பூர் திருமுருகன் பூண்டி ரோட்டரி சங்கம் ரூ.800.00 என்றும் , திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் ரூ.780.00 என்றும் , திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் ரூ.680.00 என்றும் நிர்ணயித்து உள்ளனர். இதில் அந்த மருந்து என்ன விலைக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கிறது என்றும் , தாங்கள் என்ன விலைக்கு அதனை சேவை அடிப்படையில் அளிக்கிறோம் என்று சம்பத்தப்பட்ட அமைப்பினர் தெரிவிப்பார்களேயானால் எல்லோரும் அறிந்து கொள்ள முடியும். அல்லது அரசே ஒரு விலை நிர்ணயம் செய்து அந்த விலைக்கு மேல் யாரும் வாங்க கூடாது என்று அறிவுறுத்தலாம் . இன்னும் விலை குறைத்து எவரும் கொடுப்பார்களா என்று எதிர் பார்ப்பு எழ வாய்ப்பில்லை .
10-ஜூலை-2021 11:14:28 IST
இதில் என்ன இருக்கிறது. எம்.பி.பதவி இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கு? எம்.எல்.ஏ. பதவி எப்படியும் ஐந்து ஆண்டுகள் என்பது உறுதியாகிவிட்டது. எம்.பி.பதவியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் எவ்வளவு, எம். எல். ஏ பதவியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் பிற சலுகைகள் எவ்வளவு என்று கணக்கிட்டு அதற்க்கு தகுந்தார்போல் ஏதாவது ஒரு பதவினை ராஜினாமா செய்யட்டும்.
08-மே-2021 07:54:19 IST
இன்றைய தேதி வரை ஐநூற்று ஐம்பத்து ஒன்பது நாட்கள் என்று அறக்கட்டளை உறுப்பினரின் WHATS-ஆப் மூலமாக தெரிவித்து உள்ளார்கள். எனவே நேற்றைய தேதி வரை ஐநூற்று ஐம்பத்து எட்டு நாட்கள் என்பது சரியாக இருக்கும் என தெரிகிறது. தங்களது செய்தியில் இன்றுடன் (25.04.2021) (நேற்று), 548வது நாளாக என்று உள்ளது. தவறு எங்கு நேர்ந்தது என தெரியவில்லை.. இருந்தாலும் , அக் ஷய பாத்திரம் அறக்கட்டளையினர் அன்னதானத்தை தொடர்ந்து வழங்கி வருவது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள். அவர்களின் பணி மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம் .
26-ஏப்-2021 19:28:34 IST
தேர்தல் சமயத்தில் , 200 , 300 , 500 , குஆர்டெர் , ஹலஃ , பிரியாணி என்று கூட்டம் சேர்த்த போது , சின்னம் பொறித்த முக கவசம் உடன் வழங்கியிருந்தாலே கொரோனா தொற்று குறைந்திருக்கும். செல்லும் இடம் எல்லாம் கோடையின் தாக்கம் தம்மையும் தாக்கிவிடுமோ என்று எண்ணி நிழல் பந்தலின் கீழ் நின்று பிரச்சாரம் செய்தபோதும் , தாங்கள் முகக்கவசம் அணிந்தும் , எல்லோரையும் முகக்கவசம் அணிவித்தும் , கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தால் , அனைவரும் கடைபிடித்திருப்பார்கள் அல்லவா. அல்லது அனைத்து கட்சியினரும் ஒருமித்த முடிவுடன் கொரோனா தொற்று மறுபடியும் தலைதூக்கி விடும் அபாயம் இருப்பதால் , ஒரு ஆறு மாத காலம் கவர்னர் ஆட்சி இருக்கட்டும் , ஆறு மாத காலம் முடிவுற்றதும் தேர்தல் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கலாம் அல்லவா. தேர்தல் திருவிழா கடைசியில் தடுப்பூசி திருவிழா என்று மாறி விட்டது..
15-ஏப்-2021 17:48:40 IST
மாற்றுங்கள். அதிகம் இவ்வாறான பெயர் சூட்டும் நிகழ்வுகளெல்லம் தமிழகத்திலே முன்பொரு கால கட்டத்தில் நிகழ்ந்து கொண்டு இருந்தது. வீதிக்கு பெயர் வைப்பதென்றாலே உயிருடன் இருக்கும் தலைவர் பெயரை வைத்துவிடுவார்கள். அதிலும் வளைவு என்றால் நம் தலைவர்கள் பெயரை சூட்டுவது அடி வருடிகளுக்கு அவ்வளவு ஆனந்தம்.
24-பிப்-2021 16:18:55 IST
திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதின் அடிப்படை என்னவென்றால் , கடந்த முறை மத்தியில் ஆட்சிக்கு வர முடியாததால் கல்விக்கடனை ரத்து செய்ய முடியவில்லை என்றும் , இந்த முறை சட்டசபை தேர்தலில் வென்றவுடன் தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொல்கிறார். மிக்க மகிழ்ச்சி . அணைத்து கல்விக்கடன் கடன்களுமா அல்லது கல்விக்கடன் பெற்று வேலை ஏதும் கிடைக்காதவர்களுக்கா என்று தெளிவு படுத்தவில்லை. வேலை கிடைத்து இன்று வரை சரி வர , கடன் செலுத்தி வரும் இளைஞர்களின் வெளிப்பாடு எப்படி இருக்கும் . இனி அவர்கள் கடன்களை திருப்பி செலுத்துவார்களா ?
அரசியல்வாதிகளினால் மட்டுமே இவ்வாறான தேர்தல் சமயங்களில் கடன் தள்ளுபடி என்று சொல்லி எல்லா வித கடன்களையும் முறையாக செலுத்துவர்களும் , நாமும் ஏன் பெற்ற கடனை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
29-ஜன-2021 18:13:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.