திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும்போது இந்த நிதி நிலை தெரியாத என்ன? பிறகு அதை மறைத்து மக்களை ஏமாற்றும் வேலையாக தேர்தல் அறிவிப்பு ஏன்? ஆட்சிக்கு வந்தபிறகு வெள்ளை அறிக்கை வெளியிடும்போதுகூடவா நிதி நிலைமை தெரியாது? அதன்பிறகும் தங்களையும் தனது தந்தையையும் விளம்பரப்படுத்த கடலில் பேனா போன்ற மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத திட்டங்களுக்கு எப்படி நிதி கிடைக்கின்றது? டாஸ்மாக் மூலம் கிடைக்கும் கணக்கில் வராத வருமானத்தை முறைப்படுத்த என்ன நடவடிக்கை? மற்றவர்களை போலல்லாமல் பொருளாதாரம் நன்கு படித்து வெளிநாட்டில் வங்கிகளில் வேலைபார்த்த அறிவாளியான நிதி அமைச்சருக்கு ஏன் இது செய்யத்தெரியாத?
23-மார்ச்-2023 06:53:42 IST
வியர்வை சிந்தி வெயிலிலும் மழையிலும் உழைத்து விளைவித்த நெல் மணிகளை விற்பனை செய்ய தமிழ் நாடு நுகர் பொருள் வாணிப கழக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அதை கொள்முதல் செய்ய 40 கிலோ கொண்ட ஒரு சிப்பதுக்கு ரூபாய் 40 முதல் 50 வரை லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. தாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது வாய்கிழிய பேசிய திமுக தற்பொழுது ஆட்சியில் என்ன செய்துகொண்டுள்ளது? விளைவித்த பொருளுக்கு நியாயமான விற்பனை விலைஇல்லாமல் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். ஏன் இவர்கள் ஆட்சியில் விவசாயி தற்கொலை நடக்கவில்லையா?
22-மார்ச்-2023 14:12:50 IST
வேத மந்திரங்கள் ஒலி வடிவில் உச்சரிக்கப்படவேண்டியவை. அவரவர்களுக்கு தெரியும்படியும் புரியும்படியும் எழுத்து வடிவில் வைத்துக்கொள்வது அல்ல. இசையும் பாடல்களும் அதுபோலத்தான். இசைக்கருவிகளை வாசிக்க மியூஸிக்கல் நோட்ஸ் வைத்துக்கொள்வார்கள். அதுவும் எழுத்துவடிவில் அல்ல. தமிழ் திரை இசையில் கோலோச்சிய பலர் பல மொழிகளிலிருந்து வந்தாலும் அவர்கள் பாடியவை நம் மனங்களில் இன்றும் நிலைத்து நிற்க மொழி காரணம் அல்ல. அந்த சப்த ஒளிதான். அதுபோல வேத மந்திரங்களில் உள்ள குறியிடுகளை கொண்டு சரியான உச்சரிப்பதால் மட்டுமே இறைவனை வழிபடவேண்டும். ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவா என்பதை சரியாக உச்சரிப்பதால் வேண்டுகோளாகவும் அல்லது ஆணையாகவும் மாற்றமுடியும். ஆனால் தமிழில் எழுதினால் வித்தியாசம் காணமுடியாது. அதுபோலத்தான் மந்திரங்களை மொழி மாற்றம் செய்தால் அதன் முழு பலன் கிட்டாது
22-மார்ச்-2023 13:10:24 IST
அரசு ஊழியர்கள் மாற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைபார்க்கும் அழகை பார்த்து பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். லஞ்சம் இல்லாமல் எந்தஒரு காரியமும் எந்த அரசு அலுவலகத்திலும் நடப்பதில்லை. மாத சம்பளத்தை தாண்டி இதர வருமானம் பார்க்கின்றனர். இப்பொழுது வெளியிட்ட தமிழக பட்ஜெடில் ஒரு ரூபாய் செலவினத்தில் அரசு ஊழியர்களின் செலவு இரண்டாம் இடத்தில உள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள்மட்டும் உ ழைக்கவில்லையா? அவர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடக்கின்றது என தெரியுமா?
22-மார்ச்-2023 07:31:18 IST
கல்வியை (மருத்துவம் இன்ஜினியரிங் உட்பட) தாய்மொழியிலேயே பயிற்றுவிப்பது, தாய்மொழியை தவிர நாம் தேர்ந்தெடுக்கும் மற்றொரு மொழியையும் பயிறுவிப்பது கல்வியை தேசிய அளவில் சீராக்குவது என்பன புதியகல்விக்கொள்கையில் உள்ளது. ஆமாம் அதிருக்கட்டும் இந்தக்கொள்கையை எதிர்பவர்கள்மட்டும் என்ன பாதகம் என எடுத்துச்சொல்லியா எதிர்க்கின்றார்கள்? எங்களுக்கு மோடியையும் மத்திய அரசையும் எதிர்க்கணும் அவ்வளவுதான். எதிர்ப்பவர்களுக்கு மேனேஜ்மென்ட் கொட்ட மருத்துவ சீட் போனால் கணிசமான வருமானம் போகும். அவளவுதான்
21-மார்ச்-2023 13:03:16 IST
இந்திய மக்கள் உண்மையில் உழைக்க விரும்புபவர்கள். ஆனால் இதற்குமுன் நாட்டை ஆண்ட அரசியல் கட்சி இலவசங்களை கொடுத்து மக்களை உழைக்காத சோம்பேறிகளாக்கி சுயமாக சிந்திக்கும் திறனையும் போக்கி நாட்டில் ஊழலை பெருக்கி குட்டிசுவராக ஆகிவிட்டனர்.
இப்பொழுதான் நிலைமை மாறி மக்களும் தலைநிமிர்ந்து நிற்கின்றனர் இந்தியாவும் நன்கு வளர்த்துவருகின்றது. ஆகவே இந்தநிலை தொடரவேண்டுமானால் மோடி மீண்டும் தனிப்பெரும் மெஜுரிட்டியில் பிரிதமராக வரவேண்டும். இல்லையேல் இழப்பு மோடிக்கு அல்ல. இந்தியனுக்கும் இந்திய நாட்டுக்கும்தான்.
19-மார்ச்-2023 07:30:01 IST
இந்தியாவை நாம் தாய்நாடு என்று அழைக்கின்றோம். தாய் நாட்டை அவமானப்படுத்துவது பெற்ற தாயை இகழ்வதற்கு சமம். தவறான வழியில் பிறந்தவர்கள்கூட பெற்றதாயை இகழமாட்டார்கள். ஆனால் இப்பேர்பட்ட ஒருவரை ஒரு பழமையான அரசியல்கட்சியின் முன்னாள் தலைவராக ஏற்றுகொண்டுளோம்.
15-மார்ச்-2023 07:33:02 IST
திராவிட கட்சியின் அரசியல் கொள்கையால் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதன் விளைவு தமிழர்கள் தமிழகத்தின் எல்லை தாண்டினால் சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிடவே திணறுகின்றனர்.
அப்படியாவது தமிழ் வளர்ந்ததா என்றால் டமில் ஆனதுதான் மிச்சம். ஆனால் ஹிந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வந்து வேலைசெய்து தமிழை சரளமாக பேசி வாழ்கின்றனர்.
இனியாவது திராவிட கட்சி மக்களை உறுப்பிடவிடாத ஹிந்தி எதிர்ப்பு நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லையேல் எதிகாலத்தில் பாடு மிகவும் திண்டாட்டம்தான்
11-மார்ச்-2023 16:37:53 IST
இந்த முடிவை அரசு ஊழியர்களுக்கும் சேர்த்து செய்யவேண்டியதுதானே? அவர்கள் மட்டும் 60-62 வயதில் மிகக் கடுமையாக உழைக்கின்றனரா.....அப்படிச் செய்தால் படித்து வேலையில்லாதவர்க்கு வேலை கிடைக்கும்.
11-மார்ச்-2023 10:27:29 IST
தனிநபர் மற்றும் நாட்டின் வர்ச்சிபெறும் நிலையில் எரிபொருள் தேவைகள் அதிகாரிகதைச்செய்யும். உதாரணத்துக்கு ஒரு நபருக்கு 5 - 10 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு மின்சாரம் மற்றும் பெட்ரோல், டீசல், காஸ் இவைகள் தேவைப்பட்டது?
அதைபோல் இன்று 3-4 மடங்கு தேவைப்படுகின்றது. எனவே தேவை அதிகரிக்கும்போது உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய நினை உள்ளது. இல்லையேல் நமது வருமானத்தில் பெரும்பகுதியை இறக்குமதிக்கு செலவழிக்க வேண்டும்.
விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளது. உணவுப்பொருட்களை நாம் இறக்குமதி செய்த காலம்போய் இன்று என்றுமதி செய்கின்றோம். அதனால் விவசாய நிலங்கள் பாதிக்கும் என்பதெவைத்தால் எல்லாம் பொய் பிரச்சாரம்.
இதை வைத்து அரசியல் செய்யலாம் பற்றும் சிலர் ஆதாயம் பார்க்கலாம். ஏன் இன்று விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் விவசாயம் பாதிக்கவில்லையா?
அதை ஏன் எந்த கட்சிகளும் அல்லது இயற்கை ஆர்வலர்கள் என சொல்லுபவர்களும் பேசுவதில்லை.
11-மார்ச்-2023 10:19:26 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.