அதானே - நம்மூர் மூளைக்கு கர்ணன் - மண்டேலா - வடசென்னை - மாரி படங்கள் தான் புரட்சிகரமானவை. சமுத்திரக்கனி படம் , சாதி சண்டை, வன்முறை அடிதடி இது இல்லை எனில் படமே பப்படம். முனியாண்டி விலாஸில் தயிர் சாதமா விக்க முடியும்? விற்றால்தான் விலை போகுமா
18-ஏப்-2021 02:57:11 IST
செல்போன் அரட்டை அடிக்க மட்டும் அல்ல, ஆபத்துக்கும் உதவும். அதனை எடுத்து வராதே என்பது பேச உதவும் மற்றபடி நடைமுறைக்கு சரி அல்ல இன்று எல்லாமே செல்போனில் செய்யவேண்டிய அவசியம் உருவாகி இருக்கிறது. செல்போன் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் நானும் பல ஆண்டுகள் இருந்தேன். இன்று வங்கிகள் தங்கள் பரிவர்த்தனைக்கு கூட, அட ஓலா வரவழைக்க கூட செல்போன் தேவை. அந்த டீக்கடைக்காரர் சென்ற நூற்றாண்டில் அல்லது இமயமலையில் டீக்கடை நடத்தலாம்.
10-ஏப்-2021 20:47:25 IST
ஏன் தமிழ்நாட்டில் நந்தினி, ஹாசிநீ , பொள்ளாச்சி நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதற்கு இதோ இந்த ஒரு ஆதாரம் போதும். இவர்களை போன்றவர்கள் மறையும் காலத்தில் நாடும் வீடும் சுபிட்சம் அடையும்
09-ஏப்-2021 06:32:41 IST
இந்த கலாச்சார காவலர்தாம் வன்புணர்வு நடக்கையில் அதனை சுற்றி இருந்து வேடிக்கை பார்த்து ஊக்குவிப்பராக இருப்பர் - உண்மையில் இது போன்ற போலிகளை கண்டால் அதீத கோபம் வருகிறது.
09-ஏப்-2021 06:27:14 IST
சம்பாத்தியம் என்பது ஒருவரின் லட்சணம் என்பது இன்றுதான் தெரிய வந்தது - என்ன ஒரு ஆணாதிக்க எண்ணம். ஏன் ஒரு பெண் சம்பாதித்து அதில் ஒரு கணவன் வீட்டை நிர்வகிக்க கூடாதா என்ன? எந்த காலத்தில் இருக்கிறீர்கள் @பிரேமா? அடுத்த அபத்தம் - குழந்தைகளுக்காக வாழுங்கள் என்பது. பெரிதாக முன்னேறி இருக்கும் (என்று நாம் கருதும்) அமெரிக்காவில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகம். பல பல விதங்கள்களில் குழந்தைகள் நலன் ஆசிரியர் மற்றும் அரசால் கவனிக்கப்படும். பெற்றோர் இடையே இருக்கும் மனக்கசப்பு, மனஉளைச்சல்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும் சூழலில் வளரும் குழந்தைகள் நல்ல ஆரோக்கிய மனநலத்துடன் வளர்வதில்லை. ஆமாம சண்டை சச்சரவு (அதுவும் இங்கு சிறார்களுக்கு அவர்கள் அவர்கள் அறைகள் கிட்டும்) இடையே வளர்ந்தால் அந்த சூழலில் நன்மை உண்டாகாது. நம்மூரில் ஒரே ரூம் என்று இருக்கும் சூழலில் பெற்றோர் சண்டை குழந்தைகள் இடையே தான் நடக்கும் அதிலும் அவர்களின் கோபம் ஆத்திரம் குழந்தைகள் மீதுதான் விடியும். இதில் மற்றவர் தலையிட முடியாது கூட - என் குழந்தை நான் என்ன வேண்டுமானலும் செய்வேன் என்ற மனோபாவம் உண்டு. இது குழந்தைக்கு என்ன நன்மை தரும்? ஏன் இந்த ஒவ்வாத பெற்றோர்களை "குழந்தைக்காக" என்று வலுக்கட்டாயமாக இணைந்து இருக்க சொல்வது மிக பெரிய அபத்தம் - அந்த குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி. அவர்கள் முன்னேற்றம் என்றால் அது இவர்கள் பிரிந்து வாழ்வதில் இருக்கிறது. ஒரு சிங்கிள் பேரண்ட் படும் துன்பங்களை பார்க்கும் குழந்தை மிகவும் பொறுப்புடன் வளர்கிறது. ஆனால் சண்டை போடும் பெற்றோர்களை பார்க்கும் குழந்தை ரௌடிகளாகவே வளர்கிறது எனலாம். உடனே இங்கே வரும் பாருங்கள் ஒரு கூட்டம் dislike. போட. ஏனெனில் தமிழகம் ஒரு ஆணாதிக்க பிற்போக்குத்தனம் நிறைந்த மாநிலம் என்பதை இங்கு பதிவாகும் பல பதிவுகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன
05-ஏப்-2021 06:23:13 IST
உங்கள் மனைவி இந்த வயதில் தன சுதந்திரத்தை உணருகிறார் - அதனை கூட தாங்க முடியாது கைதி போல (சமூக கட்டமைப்பு என்ற பெயரில்) நடத்தும் கேவலம் இது - இவருக்கு அறுவது வயது வரப்போகிறது. மனைவி நிச்சயம் ஐம்பத்தைந்து தாண்டி இருக்கலாம். இன்னமுமா கட்டி வைக்க போகிறீர்கள் (ஒரு அடிமையாக). போதும் நிறுத்துங்கள் அவரை இனியாவது வாழவிடுங்கள்
27-மார்ச்-2021 23:17:53 IST
என்னங்கடா இது - போகிற போக்கில் ஏதாச்சும் இது போல எழுதிவிட வேண்டியது @நாகராணி மதுரை வாசகி - காலம் கடந்து திருமணம் செய்வதாலும், பல பிரச்னை ஏற்படும் என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது - என்கிறார். மறுபுறமோ "சிறுவயதில் செய்தால் பல பிரச்னை ஏற்படும் என்பதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏன் உறவுக்கு இசைவு வயதை அரசே நிர்ணயம் செய்கிறது. அதற்கு முன்னர் உறவு கொண்டால் போக்ஸோ அல்லது வேறு சட்டத்தின் கீழ் தண்டனை. அந்த வயது பதினெட்டாம். அறிவியல் கூறுகிறது அறிவியல் கூறுகிறது என்று பொரியல் செய்யவே எல்லோரும் முனைகிறார்கள்.
21-மார்ச்-2021 00:27:46 IST
பெண் நிராகரித்தது சரி - ஆனால் அது சற்று சினிமாத்தனமான முறையில் வெளிப்பட்டு இருப்பது நம்ப முடியவில்லை. பெண் (இது மார்ச் 8. ) தன்னிச்சயா முடிவெடுக்க நினைத்தது மட்டும் அல்லாது அதனை செயல்படுத்தியது வரவேற்க வேண்டும். உண்மையாக இருக்கும் பட்சத்தில். அதே நேரம் அந்த பெண்ணின் எதிர்பார்ப்பு தவறு - ஒரு ஆணுக்கும் அவனுக்கான SPACE. தேவை என்பதை நவீன பெண்கள் உணருவதில்லை. அதுதானே மாலை நேர "விளையாட்டுகள்" அது பார் ஆக இருக்கலாம், சீட்டாக இருக்கலாம் அல்லது ஏன் ஒரு RACQUET BALL. ஆட்டம் ஆக இருக்கலாம். இது பெண்களுக்கும் தேவை - இயல்பாக அது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கிட்டியது. அதுதானே மதியநேர ஒய்வு. சினிமா மேட்னி ஷோ என்பதே அவர்களுக்கு உருவான ஒன்று - அது பள்ளி மாணவர்களுக்கு என்று மாறியது வேறு விஷயம். இன்று பெண்கள் பணிக்கு சென்றுவிட்டு அதனை அந்த SPACE. ஐ அவர்களும் நாடுவதை - பார்க்கலாம் ஆகையால் இந்த பெண்ணின் எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும்
07-மார்ச்-2021 19:47:08 IST
என்ன சமூகம் ஐயா இது ? பெற்றோர்கள் - தன பெண்ணுக்கு நிகழும் பாலியியல் அச்சுறுத்தல்களை களைய முற்படாது - இங்கே வராதே என்று சொல்லும் சமூகம். தமிழ் சமூகம் , தாய் மாமன் ஒருவன் போதுமே - வெகுண்டு வந்து வெட்டி போட்டு விட்டு பின்னர் பேசுவான். இந்த பெண்ணின் பெற்றோரும் இது போன்ற கோட்பாடுகளில் கட்டுண்டவர் என்ற எண்ணம் தோன்றுகிறது. பாவம்
07-மார்ச்-2021 19:30:41 IST
நேரிடையாக காவல் துறை மாற்று மீடியாவுக்கு புகார் தாருங்கள். இன்றைய தினத்தில் இவை மிகவம் சீரியஸ் ஆக எடுத்து கொள்ளப்படுகின்றன. அதுவும் மகளிர் வாரம் வேறு. பின்விளைவுகள் இருக்கலாம் ஆனால் இவரை போன்றவர்கள் கோழைகள். அடிப்படையில் பயந்தவர்கள். திருத்துவது எல்லாம் உதவாது. லத்தி ரெண்டு பேசு பேசினால் போதும்
07-மார்ச்-2021 19:24:59 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.