எங்கள் மனமுவந்த பாராட்டுகள். நீங்களும் ஸ்ரீ அஜித் தோவல் அவர்களும் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். மிகைத்திறமையாக செய்திருக்கிறீர்கள். ஒரு தோட்டாக்களும் பயன்படுத்தாமல் வெற்றியை தேடித்தந்திருக்கிறீர்கள். சீனர்கள் பின்வாங்கி செய்னருக்கிறார்கள். அவர்களால் வெற்றிபெறமுடியாது என்பதை மூன்றில் ஒன்று பங்கிற்கு மேலான அவடலின் ஆயுத பலத்தை குவித்து வைத்து பயமுறுத்த பார்த்து பயந்து பின்வாங்கியிருக்கிறார்கள். அதை செய்தது மிகச்சிறப்பான நமது ஆட்சியாளர்கள். தாராளமாக சொல்லலாம்.56 இன்ச் மார்பென்று. நெஞ்சுரம் மிக்கவர்கள் நமது அரசாட்சி செய்வோர். மனமார்ந்த பாராட்டுக்கள். பாகிஸ்தானியர்கள் இப்போது நம்மிடம் இறைஞ்சுகிறார்கள். அவர்கள் சீனாவை நம்பி பயனில்லை என்பதை உணர்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானிய ராணுவத்தை பயன்படுத்தினால் உடனை நிர்மூலமாக்க படுவார்கள் என்பதை மிகவும் தெளிவாக்கி இருக்கிறீர்கள். பல தேசங்களுடன் சென்று பிரதமர் முதலில் நட்பை மேம்படுத்தினார். நமது தேசத்தின் வலிமையை பறை சாற்றினார். உதவிகள் பலவற்றை மனமுவந்து உடனடியாக செய்தார். செய்கிறோம் இப்போதும். கொரநா தடுப்பூசிகளை அல்லி வழங்குவது நாம். அவை ஸ்ரீஅப்பகை செயல்படுகின்றன. மேற்கத்திய நாடுகள் மேற்காசிய நாடுகள் என்று பலவும் நம்மை சார்ந்தே இருக்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகள் நம்மையே நம்பி இருக்கின்றன. உதவி கரம் நீட்டுவது ஆகட்டும், எதிரிகளை ராணுவத்தால் சந்திப்பதில் ஆகட்டும் எதிலுமே சிறந்தவர்கள் நாம் என்பதை நிரூபித்திருக்கிறோம். பாகிஸ்தானியர்கள் தங்களின் தீவிரவாத பயங்கரவாதா தாக்குதல்களை மறைமுக யுத்தங்களை இந்தியாவிற்கு எதிராக நினைத்து கூட பார்க்கமுடியாதவகையில் நாம் அவர்களை பல கோணங்களில் முடக்கி இருக்கிறோம். எப்படியாவது வெளிநாட்டு கடன்களை பெறுவதற்கு க்ரெய் பட்டியலிலிருந்து வெளியேற முயல்கிறார்கள் அவர்கள். சீன பக்கம் போனார்கள், துருக்கி பக்கம் போனார்கள் எங்கும் அவர்களால் சிறப்பாக இருக்க முடியாது. இருவருமே பாகிஸ்தானின் நிலத்திலும் வளத்திலும் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை இப்போது மெயில்ல உணர பார்க்கிறார்கள். இஸ்லாமிய தேச கூட்டமைப்பு காஸ்மீர் விவகாரத்தை அது ஒன்று பட்ட இந்தியாவின் ஒரு உள்நாட்டு சச்சரவு என்று சொல்ல வைத்தாகி விட்டது. மிக பெரிய ராஜ தந்திரம். சவுதியுடன் இணைந்து மேலை கடல் முழுதும் கூட்டு போர் பயிற்சி செய்கிறது நமது கடல் படை. ஆசிய பசிபிக் கடல் பகுதி என்பதை இன்று உலகமே இந்தோ பசிபிக் கடல் பிறந்திறம் என்று சொல்கிறது. சீனர்கள் முழி பிதுங்குகிறார்கள் இப்போது. ராணுவத்தின் ஐந்தாம் தலைமுறை எலாம் தலைமுறை ஆயுத்தங்கள் எங்களிடமே உள்ளன என்று உளறிய அவர்கள் நமது ராணுவத்தை எத்ரிகவே முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள். உளவியலாக ராணுவத்தை பலமிழக்க செய்யவேண்டும் என்று நினைத்து சீன ராணுவ வீரர்கள் அசைவ விருந்து உணவும் சொகுசாகவும் எல்லையில் வாழ்வதற்கு டென்ட் அமைத்து தந்திருக்கிறோம் இந்திய ராணுவத்திற்கு அப்படி இல்லை என்றும் ஹிந்தியிலும் பஞ்சாபியிலும் உங்கள் குடும்பம் குழந்தைகள் வீட்டில் தவித்திருக்கிறார்கள், யுத்தம் செய்வதை விட்டு குடும்பத்தை பார்க்க செல்லுங்கள் என்று செய்திகளையும் பாடல்களையும் எல்லையில் ஒலி பரப்பிரனார்கள். எல்லையில் அவ்வப்போது ட்ராகன் கத்துவதை போல எதோ ஒரு வினோத சத்தத்தை அதிக இரைச்சலில் எழுப்பி ராணுவத்தை அச்சமூட்ட நினைத்தார்கள். பழைமையான முறைகளை கையாண்டு பார்த்தார்கள். எப்படி செய்தாலும் இந்திய ராணுவம் அஞ்சாது வெற்றி பெறுவதை குறிக்கோள் என்று உள்ளவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்தார்கள். குளிர் பிரதேச எல்லையில் மலை முகத்தில் போராட முடியாமல் அதற்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வந்து உதவ வேண்டும் என்று முயன்று பார்த்தார்கள். பாகிஸ்தான் ராணுவம் அத்தகைய செயலைசெய்வதற்கு நடுநடுங்கியது. அவ்வாறு அவர்கள் ராணுவ வீரர்கள் யுத்த எல்லைக்கு வந்தால் பாகிஸ்தானிய பகுதிகள் பல்வேறும் கபளீகரம் செய்யப்பட்டு விடும் என்பதையும் பாகிஸ்தான் ராணுவத்தை நிர்மூலம் செய்து விடும் இந்தியா என்றும் உணர்ந்தார்கள். அமைதி காத்தார்கள். சீனாவை தவிர எந்த தேசமுமும் எந்த விதத்திலும் பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யவே செய்யாது என்பதை சையது காட்டியது வெளியுறவு தரூரின் சிறப்பு. உங்களின் பங்கு மிக அதிகம். ஆப்கானின் புனரமைப்பு பாதுகாப்பு இரண்டும் இந்தியாவின் வசமிருக்கிறது. பாகிஸ்தானிலங்கை பகுதிகளில் நமது ரா அமைப்பின் கைவண்ணம் மிகவும் அதிகமாக செயல் படுகிறது என்று அஞ்சுகிறார்கள் அவர்கள். இரண்டரை யுத்தம் என்று அழைப்பதில் அந்த அரை யுத்தம் என்பதில் மிகவும் பொருள் பொருந்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் பலவாறாக ஆய்ந்து சொல்கிறார்கள். இந்தியராக நமக்கு பிரமிப்பூட்டுகிறது அவைகள். இராது எதிரிகள் சீன பாகிஸ்தான் எல்லையில் நமது ராணுவத்தின் யுத்த நேரடி இலக்கில். மூன்றாவதாக உள்நாட்டில் ஏற்படும் குழப்பம் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் என்ற அரை யுத்தம். இந்த அரை யுத்தத்திற்கு பல்வேறு ஊகங்களை வெளி தருகிறது பல்வேறு ஆராய்ச்சிகள். எதை மனதில் வைத்து இந்திய அதிகாரிகள் அரை யுத்தம் என்று சொன்னார்கள். இந்திய மானிற்குள்ளாக சீனர்கள் தூண்டுதலில் வட கிழக்கு பிராந்தியத்தில் மியான்மர் எல்லைப்பகுதியில் நடக்கும் யுத்தத்தை மியான்மர் ராணுவத்துடன் இணைந்து இந்திய ராணுவம் எதிர்கொள்வதையா அல்லது காஸ்மீர் முதல் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நுழைந்து தாக்குவதையா என்று ஆய்வுகள். இது ஒரு புறமிருக்க வேறு விதமாக இந்திய பாகிஸ்தானிய மற்றும் ஒரு குட்டி தீவு தேசத்தை குலை நடுங்க செய்யும் ஆய்வுகளையும் தருகிறார்கள். அது ராவின் கைவண்ணம் என்று சொல்கிறார்கள். இந்திய எல்லைக்குள் பயங்கர வாத தாக்குதல்களை நிதி உதவிகளை அந்நிய சக்திகள் செய்தால் அதை எதிர்த்து எதிரிகளுக்கு தக்க பாடமாக அவர்கள் வழியிலேயே பேசுவதற்கு இந்தியாவிற்கு தெரியும் என்றும் நெஞ்சு நிமிர்த்தி சொன்னது அழுத்தம் திருத்தமாக இந்தியா. இந்த செய்தியை மேற்கோள் காட்டி அதன் பிறகு அந்நிய தேசத்தில் அங்குள்ளவர்கலே தாக்குதல்களை தாக்கியதை அதன் பின்புலத்தில் இந்தியாவை குற்றம் சாட்டிய இம்ரான் போன்றோரின் ஐயத்தை பயத்தை வெளிக்காட்டி ஆய்ந்து சொல்வது பல ஆராய்ச்சி செய்திகள். ஒரு சிறு சம்பவங்களால் பாகிஸ்தான் மற்றும் குட்டி தீவு தேசம் அலறி சுருட்டி கொண்டது என்பதை விளக்குகிறார்கள் அவர்கள். யுத்தம் என்று வந்தால் அது இந்திய எல்லைக்குள் அல்ல என்று நமது அதிகாரிகளும் அரசாள்வோரும் தொடர்ந்து சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்கள். ஆகா அந்த அரை யுத்தம் என்ற உள்நாட்டு கலவர யுத்தம் என்பது எதிரிகளை குலை நடுங்க செய்கிறது என்பது பொருளாக பார்க்க படுகிறது. மிக பெரிய ராணுவப்பழம் என்று தம்பட்டம் அடிக்கும் சீன தோல்வியுற்றால் அது வாய்ப்புக்கள் நூற்றுக்கு நூறுசதவீதத்தை குறையாமல் இருக்கிறது, அவர்களால் உலகின் எங்கும் ஜம்பம் அடித்து கொள்ளமுடியாத நிலையம் வாலய் சுருட்டி கொள்ளும் நிலையேற்படுவதால் வேறு வழியின்றி திரும்பும் அவர்களை நம்பி பாகிஸ்தான் இனி எதையும் செய்ய அஞ்சுகிறது. அவர்கள் எந்த பேச்சையும் விட்டு ஒதுங்கி அவர்களின் பகுதிக்குள் சீரமைத்து கொள்ள முயலவே மிகப்பிரயத்தனம் படுகிறார்கள். இதையெல்லாம் செய்தது திறமையான நிர்வாகம், சாணக்கியத்தனம். மிக்க மகிழ்ச்சியுடன் நம்மால் இருப்பதற்கு நமது தலை சிறந்த அரசாள்பவர்களை செல்லவேண்டும். பாராட்டுக்கள் உங்கள் அனைவருக்கும். நன்றி. ஜெய் ஹிந்த்
27-பிப்-2021 18:28:46 IST
உயர்திரு பாண்டியன் அவர்களே எப்படி இருக்கிறீர்கள். சுகந்தன்னே வெளிநாட்டில் இருந்து தேசம் திரும்பி உறவுகளை சந்தித்து விட்டு திரும்புவது கடினமாகத்தான் இருக்கிறது. நீண்டநாட்களாக தாங்கள் இந்த பக்கமே கருத்து சொல்ல வரவில்லையே? அங்கு தாங்களும் குடும்பமும் நலமாக இருக்க இறைவன் அருளாசி உண்டு. பிழை இல்லாமலும் தெளிவாகவும் சுருக்கமாகவும் தாங்கள் எழுதுவதை படிக்க எனக்கு பிடிக்கும். பல நேரங்களில் தெற்கத்திய வடக்கத்திய லோக்கல் தமிழ் வாசம் தங்கள் கருத்தில் படிக்க நேரடியாக கேட்பதை போல இருக்கும். வளமுடன் வாழ்க.
14-பிப்-2021 02:48:15 IST
சைபர் வார் என்பதில் சீன என்றோ ஆரம்பித்து விட்டது. அதற்காக முதலில் சோசியல் மீடியாக்களை பயன்படுத்த வைத்து மக்களுடன் இணைந்ததது. இப்போது அதனை வைத்து நாட்டிற்கு எதிராக மக்களை திசை திருப்ப முயல்கிறது. இந்தியா படித்த மக்களை பன்மடங்கு கொண்டது. தர்க்கம் செய்து அதில் உண்மையை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் சமுதாயம் மேம்பட்டது. பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்கள் இங்கே மக்களால் நன்கு ரசிக்கப்பட்டு சிறப்புக்களை உண்மையை மக்கள் உடன் புரிந்து கொள்வார்கள். எதை வேண்டுமானாலும் ட்ரெண்டிங் ஆக்குங்கள் அதில் ஒத்த கருத்துக்களை கூட பதிவிடுவார்கள் அனால் தேசம் உண்மை என்று சிறப்புக்கள் அனைவருக்கும் தெரியும். ட்ரெண்டிங் ஆவது என்பது ஒரு பொழுதுபோக்கு இங்கே. அதை சீனாவோ அந்நிய சக்திகளோ இந்திய மக்களை திசை திருப்பி விட்டோம் வெற்றி என்று தவறாக புரிந்து கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு பணம் விரயம், சிலருக்கு லாபம். எந்த சோசியல் மீடியாவை வைத்து விவசாயிகள் போராட்டத்தை பெரிது படுத்தி இந்தியாவிற்கு எதிராக திசை திருப்புகிறது சீனா அதே சோசியல் மீடியாக்களில் நல்ல கருத்துக்களை பதிவிட்டு உண்மை நிலையை, சீனாவை தூண்டுதல்களை, கனடாவின் ஏமாந்த வேலைகளை, பாகிஸ்தானிய சீக்கியர்களின் உள்ளடி ஏமாற்று வேலைகளை, ஐ எஸ் ஐயின் தொடர்புகளை வெளிப்படுத்தி நாம் பாரதத்தின் நலனில் அக்கறையுற்றே இருக்கிறோம். நாட்டை துண்டாக்க வேண்டும் என்று பலஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து முயன்று கொண்டே வருகிறார்கள் பொறாமை குணம் படைத்தோர். மேற்படி ஹேஷ்டாக் மூலம் ஒரு சிலருக்கு ஒருவித சந்தோசம் கொள்வர். ஒரு குறிப்பிட்ட குணத்தை சார்ந்தோர். சில விஷயங்களை ஆறப்போட்டு தான் தீர்க்கவேண்டும். போராடுவோருக்கு பணம் கொட்டுகிறது பலவழிகளில். இதை தடுப்பதற்குத்தான் பணமதிப்பிழப்பு, முழுதும் டிஜிட்டல் பணவர்தனை என்று பல்வேறு திட்டங்களை முன்னரே கொணர்ந்தாயிற்று. இப்போது உள்ளூர் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் மூலம் உண்டியல் (ஹவாலா) மூலம் வரும் பணம் புழங்க செய்யப்படுகிறது. என்று அவர்களின் போராட்டம் வன்முறையாகிறதோ அன்றே இரும்புக்கரம் கொண்டு முழுதும் அடக்கப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்காமல் உண்மையான விவசாய சங்கங்கள் அவர்களின் பிரச்சினைகளை ஜனநாயக முறைப்படி தீர்க்கவேண்டும். தீவிரவாதிகள் நிச்சயமாக உள்ளே இருக்கிறார்கள் அந்த போராட்டத்தில். இரண்டு வகையான தீவிரவாதிகள், ஒன்று மிக கொடிய ஆயுதம் தாங்கி கையில் கிடைக்கும் ஆயுதம் கொண்டு வன்முறை செய்ய முயல்வோர், மற்றோர்கள் என்ன ஆனாலும் சரி டேரா அடித்து கூச்சல் குழப்பம் என்று பிரச்சினைகளை உருவாக்கி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்து குழப்பம் விளைவிப்ப்போர் என்று பல செய்திகள் சோசியல் மெடியாக்களில்வருகிறது. அமைதியான வழியில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு சில காலம் எடுத்து கொள்கிறது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது அடுத்த கணமே நடவடிக்கை இருக்கும். அரசு பொறுமையாக திண்ணியமாக செயல்படுகிறது. ஆதரிப்போம் நமது அரசை.
13-பிப்-2021 16:25:31 IST
பேசிய பேச்சுக்கள் திரும்ப பெறமுடியாதது தான். முதலில் தான் பேசியது தவறு என்றும் அதற்காக தன்னை மன்னித்து விடவேண்டும் என்று கோரிக்கையை வைக்கவேண்டும் இவர். இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையீடு என்று கொள்வது மட்டுமல்ல, நமது பாராளுமன்ற தீர்மானங்களை சட்டங்களை எதிர்ப்பதற்கு இவருக்கு எந்த விதத்திலும் உரிமை இல்லை. பத்து வருடங்கள் ஆனாலும் இவர்களால் காரோண தடுப்பூசியை அவர்களின் குடிமக்களுக்கு வழங்க முடியாத நிலை தற்போதைய சூழல், என்பதால் இந்தியாவிடம் தடுப்பூசிக்காக ஒரு கோடி டோஸ் கேட்டார் இவர். நாம் எந்த விதத்திலும் அதை கண்டு கொள்ளவே இல்லை. ஆம் என்றும் பதிலில்லை நோ என்றும் எதிர்ப்பில்லை. ஓடோடி வருகிறார் இப்போது இந்தியாவிடம் இவர். சீக்கியர்களின் காலிஸ்தான் போராட்டத்தை சீனா பாகிஸ்தான் மூலமாக இயக்குகிறது என்பது இவருக்கு தெரியாததா? அப்படி இருக்க இவர் எதற்காக இந்தியாவிற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் சிறப்பானது நமது பாராளுமன்றம் செய்தது தவறு என்று பிதற்றவேண்டும். இவருக்கு அடுத்த நாட்டின் செயலில் மூக்கை நுழைத்து வாங்கி கொள்வதே வழக்கமாயிற்று. சவூதி அரேபியான் செய்கையில் கடந்தாண்டிற்கு முன்பு இவர் மூக்கை நுழைத்து எதிரித்தார் அவர்களை, அடுத்த நாளே அவர்கள் கனடாவுடனான அனைத்து தொடர்பையும் துண்டித்தார்கள். அங்கு பயிலும் அவர்களின் அனைத்து மாணவர்களையும் திரும்ப அழைத்து கொண்டார்கள் ஏறத்தாழ ஒருவருடத்திற்கும் மேலாக யாருமே திரும்பி செல்லவில்லை, முழுமையான தடையை விதித்தது சவூதி அரசு. விளைவு கனடாவிற்கு ஆண்டிற்கு பத்து லட்சம் கோடி கல்வி நிறுவனங்கள் என்று பலவற்றிற்கு நஷ்டம். அவர்களால் வழக்கமான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கூட பணத்தேவையை சமாளிக்க முடியாத நிலைக்கு சென்றார்கள். மீண்டும் சவுதியிடம் மண்டியிட்டு அவர்களின் எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை என்று உத்திரவாதம் தந்து பழைய படி சவூதியிடம் வியாபார உத்திகளை சென்றிருக்கிறார்கள். தனது தலைமை தனது பதவி முக்கியம் என்பதை தவிர்த்து தேசத்திற்கு எது முக்கியம் என்று பார்க்கவேண்டும் இவர். சிறுபாண்மை அரசை நடத்துவதற்கு பத்து இருபது எம் பி களின் தேவை மற்ற சீக்கிய அமைப்புகளிடம் தேவை என்பதாலும் அவர்கள் சீனாவின் மூலம் பாகிஸ்தானியர்களால் பெரும் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக பதிவிட சொல்வதை கேட்டு இவர் ட்விட் செய்து விடுகிறார். அதன் விளைவை இவர் எதிர் கொள்கிறார். இந்தியாவை எதிர்த்து இவர் செய்யும் செயலால் பாமர மக்கள் இந்தியாவிற்கு எதிரான மனநிலை கொண்ட சில குறிப்பிட்ட இந்தியாவின் வேற்று எண்ணம் கொண்ட பாமரர்கள் இலவசமா பணம் பெற்று கொண்டு உழைக்காமல் திரிபவர்கள் சந்தோஷப்படுவார்கள் தவிர உலக அரங்கில் இந்தியாவின் தன்மை குறையாது. 160 பேர் இறந்தார்களாம் விவசாயிகள் போராட்டத்தில் என்று ஒரு கால்பந்து விளையாட்டு நேரடி ஒளிபரப்பின ஊடே ஒரு தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது சமீபத்தில். அப்படியா அத்துணை விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் இறந்தார்கள்? உண்மை அதுவா? இவர் ஏன் அது போன்று தவறான செய்தியை ஒரு தேசத்திற்கு ஜன நாயக தேசத்திற்கு எதிராக பொய் பரப்புகிறார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை. காலிஸ்தான் தேசம் வேண்டும் என்று போராடிய பலர் இவர்கள் தேசத்தில் இன்னும் இருக்கிறார்கள் சீனாவின் ஆசியோடு உதவியோடு. பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ சீனாவின் பணத்தை கொண்டு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானத்து பகுதி சீக்கியர்களை பாகிஸ்தான் சீக்கியர்களை வைத்து தானே கனடாவில் காய் நகர்த்துகிறது. பாகிஸ்தானிய சீக்கியர்கள் கோரிய காலிஸ்தான் பகுதியின் வரைபடத்தில் இந்திய நிலப்பகுதிகள் ஹிமாச்சல் ஹரியானா என்றுபல காட்டப்படுகின்றன ஆனால் லாஹூரில் இருந்து ஆட்சி செய்த சீக்கிய மன்னர்களின் ஒரு மில்லி மீட்டர் பாகிஸ்தானிய நிலப்பரப்புக்களையும் அதில் சேர்க்கவில்லை இவர்கள். எதற்காக? பாக்கித்தான் தான் அதை தூண்டியது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வெளியுறவு துறை மூலம் மிகவும் அழுத்தம் திருத்தமாகவும் கடினமாகவும் இந்தியா தனது எதிர்ப்பை கனடா பிரதமருக்கு அன்றே வெளிப்படுத்தியது. அவர் இப்போது கில்டி ஆக உணர்வார். கேட்ட தேசத்திற்கும், இலவசமாக, குறைந்த விலையில் மற்றும் ஓரளவிற்கு கட்டுப்படியான விலையில் என்று பல்வேறு தேசங்களுக்கும் உடனடியாக தடுப்பூசிகளை இந்திய அனுப்புகிறது. கனடா ஒரு கோடி தடுப்பூசிகளை கூடுதல் விலை தருகிறோம் என்று கூட கேட்டுப்பார்க்கிறது. மவுனம் காக்கிறோம் நாம். கனடாவிற்கு இதைவிட மிக சிறந்த டிப்ளமேடிக் அழுத்தம் யாராலும் தர முடியாது. நமது டிப்ளமேடிக் அப்ப்ரோச் சிறப்பாகவே இருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் அமைச்சர்களை பாராட்டவேண்டும். நமது அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமது பாதுகாப்பிற்கு நாம் சிறப்பாக செய்து கொள்வோம். அதை யாரும் தடுக்கவோ எதிர்க்கவோ முடியாது. அமெரிக்காவை மட்டுமோ அல்லது ரசியாவையோ நாம் அகமது பாதுகாப்பிற்கு சார்ந்திருக்கவில்லை. நமது ராணுவத்தை நாம் சிறப்பாக்கி உயர்த்து கொண்டு வலிமை பெற்றிருக்கிறோம். அறுபதுகளின் ராஜ்யமல்ல நமது பாரதம் இன்று. புதிய மில்லேனியத்தின் ராஜ்ஜியம். சீனாவிற்கு நமது தேசத்தை வலிமையை பற்று முழுதும் தெரியாமல், பழைய அரசினரை போலவே எண்ணி விட்டது. மோடி டஃப் மனிதர் என்று ட்ரம்ப் பலமுறை சொல்லி இருக்கிறார். அது உண்மை தேசத்திற்கு அவர் சர்தார் படேலை பின்பற்றுபவர். இரும்பு மனிதராயத்தான் இருக்கிறார். மிக பிரமாண்டமான ராணுவத்தை உயரிய பலத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் இமயம் முழுதும் நிறுத்தி சங்கநாதம் செய்து சீனாவிற்கு அச்சத்தை கொண்டுவந்தவர். நீயாகவே ஓடிவிடு. ஒரு இன்ச் அளவு உள்ளே வந்தாலும் நிர்மூலம் செய்யப்படுவதை என்று தெளிவாக புரியவைத்திருக்கிறார். கள்வான் பகுதியில் தோல்வி கொண்ட சீன அதை தொடர்ச்சியாக்கி கொள்ள அஞ்சுகிறது. கவுரவமாக வெளியேறுவதற்கு பலமுறை முயன்றும் அந்த கவுரவ பின்வாங்கலுக்கு எந்த வகையிலும் இந்தியா அனுமதிக்கவில்லை. துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடாமல் வேண்டுமானால், எங்களை விட்டு விடுங்கள் திரும்பி விடுகிறோம் என்று திரும்புவதற்கு வழிவிட்டிருக்கிறது என்பது தான் உண்மை. மிகப்பெரிய கூட்டமாக வந்து டேரா போடுவார்கள் சீன ராணுவத்தினர், அதை கண்டு சிறு நரிகள் அஞ்சும். சிங்கம் ஒரு கர்ஜனை தந்தால் காடே அதிரும் என்பது தான் நமது ராணுவத்தின் சிங்கங்கள். சீனா நிச்சயமாக இந்திய வுடன் யுத்தம் செய்வதற்கு விரும்பாது, வெறும் வாய்சவடாலாத்தான் இருக்கும். நாங்கள் பயப்படவில்லை, மிகப்பெரிய ராணுவத்தை கொண்டவர்கள் என்று பேச்சளவில் பயமுறுத்தி பார்க்கும். உண்மையான ராணுவ வீரன் யுத்தத்தை எதிர்நோக்கி திரிகளின் பலத்தை என்றும் அஞ்சாமல் தனியொருவனாக இறுதி வரை வெல்வான் என்பது நமது ராணுவத்தினரின் மனோதைரியம். அதை குலைப்பதற்கு பல பாடல்களை எல்லையில் ஒலிபெருக்கி அவைகள் பழுதாகி போனது தான் கடந்த வருட உண்மை சீனாவின் முகம். இந்தியாவுடனான யுத்ததில் தோல்வி பெறுவார்கள் அது அவர்களின் உலக வல்லரசு கனவை அன்றே முடித்து விடும்.உலகம் இவர்களை பற்றி மிக பெரிய வல்லரசு என்று கொண்ட எண்ணத்தை அடுத்த நொடியில் துச்சமாக மாற்றிவிடும் என்ற அச்சம் கொண்டிருக்கிறது சீநா. சீனாவுடனான ஒரு யுத்தம் வேண்டும். அதன் வெற்றி நம்மை உலகின் உண்மையான முதன்மையான ராணுவம் என்பதை பறை சாற்றும். இழந்து விட்ட ஐம்பதாயிரம் சதுர கி மீ நிலத்துடன் அதற்கு நஷ்ட ஈடாக சீனாவின் லட்சம் கி, மீ பகுதிகளை கைப்பற்றவேண்டும். அவர்களின் மிகப்பெரிய டேம்களை தரைமட்டமாக்கவேண்டும். நிரந்தரமாக எரிச்சல்கள் நின்று விடும். வாழ்க அகண்ட பாரதம்.
13-பிப்-2021 16:08:38 IST
சாமானிய மக்கள் இந்த விஷயத்தை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. அது அவர்களின் பரிபூரண நம்பிக்கையினால். உள்மனது எல்லோருக்கும் சொல்கிறது. அதை தாராளமாக கேட்டுணரலாம். நமது ராணுவமும் நமது பிரதமரும் மிக தீர்க்கமாக மிக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் அதில் எந்த அச்சமும் இல்லை. அனைவருக்கும் பிரதமரின் தலைமையின் மீது இந்த விச்யத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. அவரும் மிகவும் சிறப்பாகவே செயல்படுகிறார். நமது கவுரவம் வெளிநாட்டில் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும் சிறப்பு பெறட்டும். பாரத் மாதாகி ஜெய்.
12-பிப்-2021 20:52:23 IST
சீனாவின் சூழ்ச்சி இருக்கும். அவர்கள் பிரபலமானவர்கள், பத்திரிகையாளர்கள் என்று உலகம் முழுவதிலும் பலரையும் தங்களில் பய்மேன்ட் லிஸ்டில் வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே பல்வேறு என்டேர்டைன்மெண்ட் ஆப்ஸ் மூலம் பல தகவலகையும் திருடி வைத்து கொண்டு அதன் மூலமும் பல்வேறு தெடங்களில் குழப்பம் விளைக்கிரியார்கள். சீன துருக்கி பாகிஸ்தான் உலகின் சாபக்கேடு என்று சொல்கிறார்கள் பலர் இப்போது. சீன எப்போது இந்தியாவின் மாநிலங்களை தனி தனி நாடக மாற்ற தங்களால் முடியும் என்று உதார் விட்டது குளோபல் பத்திரிகையின் மூலம் என்பது பல்வேறு சமூக ஊடகங்களில் கூட வெளிவந்தது. பலம் பொருந்திய நாடாக தன்னை கருதுகிறது சீன. ரசியாவின் பக்கம் இருந்த தேசங்களும் அமெரிக்காவின் பக்கம் இருந்த பல தேசங்களையும் தங்களின் கூட்டணிக்கு கொண்டுவர முயற்சிக்கிறது கடன் என்ற வலையில். வேறு வழியில்லாமல் அவர்களிடம் மாட்டி கொண்ட தேசங்கள் பல. ஒவ்வொரு தேசத்தின் மிக உயர்ந்த அதிகாரிகளை ஆட்சியாளர்களை தங்களின் உச்ச பட்ச லஞ்சம் என்ற முயரில் தங்களின் ஆளுமைக்கு கீழே கொண்டுவந்திருக்கிறது. பல அதிபர்களின் குடும்ப உறுப்பினர்களை சீனா தனது வெளிநாட்டு வர்த்தக பங்காளர்களாக இலவசமாக மாற்றி சட்டபூர்வமாக அவர்கள் பல ஆயிரம் கொடிகளை சமப்பதிக்க வேலைசெய்து தந்து அந்த பணத்தை அவர்கல் ஆளும் தேசத்திலேயே கூட பல்வேறு நிறுவனங்கலய் உருவாக்கி பணம் கிடைக்க வலி செய்திருக்கிறது. இதனால் தான் அந்த அதிபர்கள் எல்லாம் சீன சொல்வதை கேட்கிறார்கள். அவர்கள் தாய் தேசத்தின் மக்கள் நலன் தாய் நாடு என்பதை அவர்கள் மதிப்பதே இல்லை. உதாரணமாக இலங்கை, நேபாள பிரதமர்கள் அதிபர்களை கூட சுட்டி காட்டுகிறார்கள். அதனால் தான் அவர்கள் தங்கள் தேசத்தின் நலனுக்கு எதிராக கூட பல செயல்களை செய்கிறார்கள். அதற்காக அங்கு ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை கூட உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் பல வருடங்களாக சில கட்சி அமைப்புகள மூலம் போராட்டங்கள் நடத்தி கோர்ட்டில் வழக்கு என்று செய்து பல்வேறு திட்டங்களை வரவிடாமல் செய்தார்கள். அதையெல்லாம் மீறி தான் நாம் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்போது அவர்களின் நோக்கங்களை நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ளும்படி பல்வேறு வல்லுநர்கள் ஆய்ந்து எழுதியும் பேசியும் வருவது நம்மை இந்தியர்களை ஒன்றுபட வைத்திருக்கிறது. சீனா செய்கின்ற அமைதியாக பின்புலத்தில் செய்கின்ற செயல்களால் ஒன்றாய் இருந்த இஸ்லாமிய தேச கூட்டமைப்பு இரன்டு இரண்டு பட்டிருக்கிறது. அவர்களின் பல தேசத்தவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது. சில தேசங்கள் சீனாவின் அடிமைபோலவே மாறி இருக்கின்றன.கடவுள் நம்பிக்கையில்லாத சீன அரசு, உலக தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக தெரிகிறது பலருக்கு இன்று வரலாற்றில். அந்த தேசம் மாறி ஜனனநாயகம் அங்கே குளிக்கவேண்டும். பக்தி மார்க்கமும் அங்கு பெறுக வேண்டும். உணவு உற்பத்தியில் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். மாமிச உணவை மட்டுமே வைத்து உலைக்கூட்டமுடியாது என்று உணர வேண்டும். அனைத்து ஜீவா ராசிகளுக்கு ஆதாயமாக இறைவன் படைத்தது தாவரங்கள் தான். மிக பெரிய தேசமாக இருக்கும் சீன அந்த தேசத்திற்கே ஆபத்தாகத்தான் இருக்கிறது.
05-பிப்-2021 03:32:29 IST
பெரும்பாலான பங்குகளை வரி செலுத்துவோரின் வரி செலுத்திய விகிதாசாரப்படி பிரித்து கொடுக்கலாம். கார்பொரேட் நிறுவனங்கள் பெரு முதலாளிகள் அரசின் பங்கு தனியாருக்கு என்று வருவதை கணித்து பங்கு சந்தை விளையாட்டை ஆரம்பித்து அரசின் பங்குகளை மிக குறைந்த விலைக்கு வாங்கவே முயல்வர். வரிசெலுத்துவோருக்கே முன்னுரிமை தரவேண்டும். மேலும் அரசு ஊழியர்கள் இதில் எந்த வித குழப்பமோ பிரச்சினைகளையோ சந்திக்கத்தவகையில் இதற்காக தனி அனுமதியோ அல்லது உயரதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு வாங்கவேண்டும் என்று எந்த கட்டுப்படும் இல்லாமல் பொது மக்களுக்கு விற்கலாம். இந்தியர்கள் என்றுதான் பர்ர்க்கவேண்டுமே தவிர இதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்று பிரித்து அவர்களை பங்குகளை வாங்குவதில் தடை செய்யவோ அல்லது மிக குறைவான பன்னுகளை அவர்களுக்கு கோட்டா செய்வதையோ கூடாது. பெரு முதலாளிகள் நிறுவனங்கள் பங்குகளை வாங்கினால் அவர்கள் தங்களின் பங்குகளை மூன்று வருடத்திற்கு விற்க கூடாது என்று சில கட்டுப்பாடுகளை அவர்களுக்கு மட்டும் விதிக்கவேண்டும். ஏற்கனவே ஒரு நிறுவனந்த்தை நடத்துகின்ற கார்பொரேட் கல் புதியதாக பல நிறுவனங்களை துவங்கட்டும் அது சிறப்பு. அதை விடுத்து அரசின் பல நிறுவனங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதால் புதிய தொழில் வாய்ப்பு புதிதாக இளைஞர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைகள் கிடைக்காமல் சென்று விட வாய்ப்புண்டு. பொதுத்துறை பங்கில் அரசின் கட்டுப்பாடுகள் பங்கு தேவையற்றது. அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே பல நிறுவனத்தில் பொதுமக்கள் நேரடி தொடர்புடைய நிறுவனங்களில் தேவை படும் கனிவான சேவைகள் கிடைப்பதில்லை. அவர்கள் இனியும் தங்களை அரசு அதிகாரிகளாக நினைக்க தேவை இல்லை. வங்கிகள். முதலில் இந்த வருவாய் துறை, ஆர்டிஓ அலுவலர்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி விடவேண்டும். லஞ்சம் பஅங்கு முற்றிலும் காணாமல் போய் விடும். டிஜிட்டல் இந்திய திட்டம் என்பது அரசின் ஊழல் அதிகாரிகள் அலுவலர்களை அடியோடு ஒதுக்குவது என்றாகி விடவேண்டும். அரசின் திட்டங்களை சலுகைகளை பெறுவதற்கு இடைத்தரகர்களாக அதிகாரிகள் எதற்கு. ஒவ்வொரு தேர்தலின் நேரத்தின் போதும் சங்கங்கள் அமைத்து வேலை நிறுத்தம் என்று அரசை மிரட்ட ஆரம்பிப்பார்கள். எதிர்க்கட்சிகள் அவர்களை தூண்டி விடவும் செய்யும், அல்லது எதிர்கட்சிகளை தேர்தல் வாக்குறுதிகளில் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லக்கூட வைத்து விடுகிறார்கள். ஊழியர்கள் குறைக்கப்படவேண்டும். அதற்கு அந்த துரையின் அலுவலர்களை கூட தனியாருக்கு மாற்றி விடவேண்டும். பாஸ்போர்ட் வழங்குவது, புதுப்பித்தல் என்பதில் பெரும்பான்மையான அடிப்படை வேலைகள் அனைத்தையும் தனியார்கள் தான் செய்கிறார்கள். பொறுப்பான கையெழுத்து இடுவதில் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். அப்படியே பல துறைகளில் அரசின் ஊழியர்களையும் விலல்க்கி கொள்ளலாம்.
05-பிப்-2021 03:10:01 IST
பெரும்பாலான பிரபலங்களின் பின்னால் குறிப்பாக அவர்களின் ட்விட்க்கு பின்னிருப்பது சீன தேசத்தின் சைபர் வார் பிரிவு. அவர்கள் நிறைய பேருக்கு அதீத பணம் தந்து அவர்களை சீனாவின் விருப்பத்திற்கு பேச எழுத வைப்பார்கள். சிலரின் ட்விட் கண்ணாக்குகளை நிர்வகிப்பதே கூட சீன அதிகாரிகள் அல்லதுஅவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூட பல ஆய்வுகள் சொல்கின்றன. சீனா துருக்கி இரண்டும் வேறொரு பாதையில் செல்கின்றன. சீன தான் சிப்பேர் வாரில் தற்போது அனைவரையும் முந்தி இருக்கிறது. இருப்பது வருடத்திற்கு முன்பே இதை ஆரம்பித்திருக்கிறது. ஒன்றை அவர்கள் புரிந்திருக்க மாட்டார்கள். கெடுவான் கேடு நினைப்பான்.
03-பிப்-2021 17:26:19 IST
காங்கிரசிற்கு ஐம்பது தொகுதிகளை ஒதுக்கி தந்து அந்த தொகுதிகளுக்குண்டான வேட்பாளர்களை அனைவரையும் திமுக கட்சியினரையே போட்டி இட செய்யலாம். காங்கிரசிற்கு அதிக தொகுதி ஒதுக்கிய படி இருக்கும். அதே நேரம் வெற்றி பெற்ற அனைத்தும் திமுகப்பக்கமே இருக்கும். தோற்றால் காங்கிரஸ் வென்றால் திமுக என்று சிறப்பாக வைத்து கொள்ளலாமே. சிலவற்றை சிறப்பாக இப்படித்தான் செய்ய முடியும்.
03-பிப்-2021 04:31:50 IST
முதலில் நம்பிக்கை வரவேண்டும் அரசியல்வாதிகளின் பேச்சில். அவர்கள் பேசுவது வேற்று அரசியல் என்பதால் அதை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை. நம்பிக்கை அளிக்கும்படி செயலில் செய்து காண்பித்திருக்கவேண்டும்.
30-ஜன-2021 15:30:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.