தி மு க கொரோனா காலகட்டத்திலும் ஒரே ஆண்டில் 2லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது.நிதியமைச்சர் நிர்மலா அவர்கள் மத்திய தர வரிசை பட்டியலை வெளியிட்டுயிருக்கிறார். அதில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் வாஜ்பாய் ஆட்சியினால் கவரப்பட்டு ஒரு மதிப்பு கூடியிருந்தது. அதனால்தான் காங்கிரஸ் தமிழகத்தில் சரிவை சந்தித்தது. இன்று தமிழ்நாடு பா ஜ கவில் புரட்டு அண்ணாமலையால் சரிவை சந்தித்துகொண்டிருக்கிறது. உங்க கட்சி பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக மண்ணைகவ்வ போகிறது. உங்க கட்சியை தமிழ்நாட்டில் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.
13-ஜன-2023 09:58:37 IST
தி மு க சாட்டையை தமிழ்நாட்டிற்காக தமிழர்களுக்காக பல தடவைகள் சுழற்றியிருக்கிறது. தமிழ்நாடு பெயர் மாற்றம் முதல் இன்று பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வரை மக்களுக்காக ஜனநாயக முறையில் போராடி வெற்றிபெற்றிருக்கிறது. தமிழர்களின் வரலாறில் தி மு க பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. பிஜேபி ஆட்சியைகூட வாஜ்பாய் காலத்தில் காப்பாற்றியிருக்கிறது.. தி மு க எத்தனை ஆண்டு ஆட்சி செய்தது என்பதை விட தி மு க நிகழ்த்திய அதன் தமிழர்கள் நலன் சார்ந்த சாதனைகள் ஏராளம். தி மு க வை எந்த ஒருவராலும் அடக்கிவிடமுடியாது என்பதை புதியவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
13-ஜன-2023 09:01:52 IST
சித்தாந்தந்தை பேசும் ஆளுநர், தமிழகம் என்ற சொல் பண்டைய காலத்தில் கேரளா , ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கியது என்பதை ஏற்றுக்கொள்வாரா? அப்படி ஏற்றுக்கொண்டால் திராவிடம் என்கின்ற வார்த்தையை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட பின் தமிழ்நாடு என்றும் தெலுங்கு தேசம் என்றும் மாநிலங்கள் பெயர் சூட்டிக்கொள்வதில் என்ன தவறு உள்ளது. ஆளுநர் மீதான வெறுப்புகள் மக்களிடம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இவர் சுதந்திர இந்தியாவின் ஆளுநரா ? மன்னராட்சி ஆளுனரா? எப்போதும் பிரதமரை பாராட்டுபவர் . இந்த முறை மறந்து விட்டார் போலும்.
08-ஜன-2023 10:00:22 IST
வட இந்தியர்கள் மத்தியில் கடவுளாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்துவர்களா? இந்தியா விடுதலைக்கு பிறகு தமிழகம் பகுத்தறிவு பாதையில் , சமத்துவபாதையில், சகிப்புத்தன்மையில்,முன்னணியாக திகழ்கிறது . ஆக மொத்தம் இந்துக்கள் தமிழகத்தில் இந்துக்களாகவே இருக்கின்றனர் , கிருஸ்தவர்கள் கிருஸ்தவர்களாகவே இருக்கின்றனர்....இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு நடக்கின்ற கட்சி திமுக தான் . வரலாற்றை மாற்ற முடியாது. வரலாற்று கசப்புகளை காலமானது.....திமுக மீது இருந்த சில மக்களின் கோபங்களை கரைத்துக் கொண்டிருக்கிறது.
10-டிச-2022 10:37:05 IST
வெட்கக்கேடு . ஒரு கவர்னர் இவ்வாறு பேசுவது இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும். தமிழகத்திற்கு தேவையில்லாத ஆளுநர் . இவருடைய எண்ணமெல்லாம் அரசு சார்ந்து இல்லை. மத்திய அரசின் கைக்கூலியாகத்தான் செயல்படுகிறார். மரியாதைக்குரிய ஆளுநர் பதவியை எவ்வளவு அசிங்கப்படுத்தமுடியுமோ அவ்வளவுக்கு அசிங்கப்படுத்துகிறார். இது தமிழகம் இங்கு எல்லா தரப்பு மக்களும் இருக்கிறார்கள் . மத்திய அரசு பொருளாதாரத்தை பண முடக்கத்தில் தொடங்கி சீர்குலைத்து கலங்கிய குட்டை தண்ணீரை போல் தான் இன்னும் வைத்திருக்கிறது. பிரிவினைவாத அரசியல் மக்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. மீடியா செய்திகளை நம்பும் போக்கு மாறியுள்ளது. மக்கள் அவர்களின் தலைவரை அவர்களுக்குள்ளே தேர்தெடுக்க தொடங்கிவிட்டார்கள். பாஜக ஏஜெண்டாக ஒன்றும் சாதனை நிகழ்த்திவிடமுடியாது. உங்களால் முடிந்த அளவிற்கு ஆளுநர் பதவிக்கு பெருமை தேடிதாருங்கள். அதைவிடுத்தது அரசியல் செய்யவேண்டாம் . வரலாறு ஒன்று இருக்கிறது அது உங்களை கீழ்த்தரமாக மாற்றிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் . இப்போதெல்லாம் ஆளுநர் பற்றி செய்தி வந்தால் வாந்தி வருவது போல் தான் இருக்கிறது.
11-ஜூன்-2022 19:25:54 IST
தமிழின அரசு திமுக ஆட்சிக்கு வந்தபோதே 3 ரூபாய் குறைத்தது. 4 மாநில சட்டமன்ற தேர்தல் காலத்தில் பல மடங்கு கச்சா எண்ணெய் உயர்ந்தது அப்போதெல்லாம் ஒரு பைசா கூட ஏறவில்லை. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்த நேரத்தில் பலமடங்கு விலையேற்றத்தை செய்துவிட்டு விலையேற்றத்தை தடுக்க மத்தியரசு குறைத்திருப்பதாக மக்களை முட்டாளாக்குகிறது. அண்ணாமலை பேரணி என்பது அவர் முழங்கால் தண்ணீரில் போட்டில் சென்றது போல தான் இருக்கும். ஒரு படத்தில் பரட்டை வேடத்தில் வரும் ரஜினிக்கும் இவருக்கும் வித்தியாசமில்லை. பரட்டை செய்கின்ற சில்மிசத்தை தான் அரசியலில் செய்து வருகிறார். மத்திய அரசு கானல் நீரை போன்ற ஆட்சியை செய்து வருகிறது . தமிழகத்தில் உதய சூரியன் மக்களுக்காக தினம் தோறும் பல்வேறு திட்டங்களை தீட்டி மக்களுக்கு வெளிச்சத்தை அளித்துக்கொண்டிருக்கிறது.
25-மே-2022 09:32:02 IST
தி மு க தான் எல்லா சாதனைகளையம் நிகழ்த்தியிருக்கிறது.மாநில முதல்வர் சுதந்திர கொடி ஏற்ற உரிமை பெற்றதிலிருந்து இன்று 27 சதவிகித இட உரிமை பெற்று தந்தது வரை. இன்னும் ஏராளம் சொல்லலாம். ஜல்லிக்கட்டில் தமிழகம் உரிமை நிலைநாட்டவில்லையா? மக்கள் ஒன்றிணைந்தால் எல்லாம் சாத்தியம். நமக்கானதை பெறுவதில் எல்லோரும் முதலில் ஒன்றுபட வேண்டும் . மத்திய அரசின் ஆட்சி வட இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது . தி மு க இதையம் நிகழ்த்தி காட்டும் .
21-ஜன-2022 10:21:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.