Venkataraman : கருத்துக்கள் ( 102 )
Venkataraman
Advertisement
Advertisement
Advertisement
மே
27
2023
அரசியல் தி.மு.க., வன்முறை கட்சி என்று மீண்டும் நிரூபித்துள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
திமுக என்றாலே அது ஊழலும் வன்முறையும் நிறைந்த கட்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும். அதை மறைப்பதற்கு ஏராளமான பொய் புரட்டுகள், திசை திருப்பி மற்றவர்கள் மீது பழி போடுதல் போன்றவற்றை செய்து ஊரை ஏமாற்றுவார்கள். இதையெல்லாம் மக்களின் நன்மைக்காகத்தான் செய்ததாகவும் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இவர்களின் வண்டவாளத்தை நிரூபிக்க மத்திய அரசின் புலன் விசாரணை அமைப்புகளாலும் நீதிமன்றங்களாலும்தான் முடியும். அதை அவர்கள் செய்வதில்லை.   08:05:30 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
18
2023
தமிழகம் அமைச்சர் மீதான விசாரணை நேர்மையாக நடக்குமா?
செந்தில் பாலாஜி மீதான வழக்கு மட்டுமல்லாமல் ஆ.ராஜா, கனிமொழி, தயாநிதி மாறன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டும்   11:03:44 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
18
2023
அரசியல் தன் மக்கள் நலம் ஒன்றே ஸ்டாலினின் குறிக்கோள்!
இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். கருணாநிதி குடும்பம் எப்போதுமே தன்னுடைய சுயநலத்துக்காகத்தான் எதையும் செய்யும். கட்சியின் தொண்டர்களை கொத்தடிமைகளாக அல்லது பகடைக்காய்களாக பயன்படுத்திக்கொள்ளும்.   10:59:43 IST
Rate this:
0 members
0 members
4 members

மே
18
2023
தமிழகம் மரக்காணம் விஷச்சாராய வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்
இந்த விஷயத்தில் ஆளுநர் அவர்கள் தமிழக அரசிடம் விசாரணை அறிக்கை கேட்டிருக்கிறார். மேலும் மாநில மனித உரிமைகள் கழகமும் அறிக்கை கேட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதால் உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்   10:54:54 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
17
2023
தமிழகம் சாராய வியாபாரிகளிடம் வசூல் செய்து நிவாரணம் தரவேண்டியது தானேஇதுதான் திராவிட மாடலா சீமான் கொந்தளிப்பு
சீமான் அவர்கள் சொல்வது மிகவும் சரி. கள்ளச்சாராயத்தை குடித்து இறந்தவர்களை ஊக்குவிப்பது போல நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாயை அரசு கொடுப்பது என்பது கேவலமான முன்னுதாரணமாக அமையும்.   00:20:26 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
17
2023
அரசியல் கள்ளாச்சாராய பலி கவர்னரிடம் புகார் அளிக்க அ.தி.மு.க, முடிவு
இந்த புகாரை நீதிமன்றத்தில் வழக்காக போட்டால் சரியாக இருக்கும். கள்ளச்சாராயம் தயாரிப்பது விற்பது இரண்டிலும் திமுகவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்குள்ள காவல்துறையினருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரிந்தேதான் நடந்திருக்கிறது. ஆனால் அதைவிட கேவலமானது என்னவென்றால் இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் ஒவ்வொன்றுக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊக்கத்தொகையாக பத்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக் கிறது. அத்துடன் அந்த சாராயத்தை கள்ளத்தனமாக விற்ற குற்றவாளிக்கு 50000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் அரசின் தவறான நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டுகிறது. உயர்நீதிமன்றம் தானே முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து குற்றவிதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்   00:13:47 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
16
2023
அரசியல் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரவேற்பு இல்லை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
தவறான தகவலை தமிழக அரசு நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது. தமிழக அரசு இந்த படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு தர மறுத்து விட்டது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சில திரையரங்குகளில் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டபோது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் திரையரங்குகளின் உரிமையாளர்கள் இந்த படத்தை வெளியிட தயங்கினார்கள். இதற்கு தமிழக அரசின் மறைமுகமான ஆதரவு படத்தின் எதிர்ப்பாளர்களுக்கு தரப்பட்டதுதான் காரணம். எனவே உச்ச நீதிமன்றம திரையரங்குகளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்   13:53:11 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
16
2023
இந்தியா நாய் கடித்ததில் அர்ஜூன் டெண்டுல்கர் காயம்
இதெல்லாம் ஒரு செய்தியா? அர்ஜுன் டெண்டுல்கர் மிக மிக சாதாரணமான ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காரர். பெரிய அளவில் சிறப்பான பந்து வீச்சாளரோ அல்லது பேட்டிங் வீரரோ அல்ல. இப்போதுதான் விளையாட ஆரம்பித்திருக்கிறார். இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அவரைப்பற்றி பேசலாம்.   13:42:13 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
15
2023
அரசியல் விழுப்புரம் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்
தனக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாத மாதிரி விசாரணை செய்ய கிளம்பி விட்டார் ஸ்டாலின். கள்ளச்சாராயம் பெருமளவில் விற்கப்படுவது பற்றி அந்த ஊர்காரர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் நன்றாக தெரியும். மாமூல் வாங்கிக் கொண்டு இந்த வியாபாரத்தை அனுமதித்து வந்தார்கள். ஆனால் இதில் வெட்கக்கேடு என்னவென்றால் கள்ளத்தனமாக சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து லட்ச ரூபாய் அரசே கொடுப்பதுதான். யார் யாருக்கு எதற்காக பணம் கொடுப்பது என்ற விதிமுறையே இல்லையா? இப்படி பணம் கொடுப்பது கள்ளச்சாராயம் குடிப்பதை ஊக்குவிப்பது போல இல்லையா ?   18:00:35 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
15
2023
உலகம் 141வது மாரத்தானில் லண்டனில் மகனுடன் ஓடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நல்லதுதான். இந்த முதிர்ந்த வயதிலும் உடற்பயிற்சி செய்து நல்லபடி உடல் நலனை பாதுகாத்து வரும் அமைச்சருக்கு பாராட்டுகள். மற்ற அமைச்சர்களுக்கும் சாதாரண பொதுமக்களுக்கும் கூட இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். ஆனால் ஸ்டாலினை போல இதை விளம்பரத்துக்கோ அரசியலுக்கோ பயன்படுத்த கூடாது   17:02:20 IST
Rate this:
2 members
1 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X