S.VELMURUGAN : கருத்துக்கள் ( 91 )
S.VELMURUGAN
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
21
2022
உலகம் சிரியா மாகாணங்கள் மீது துருக்கி ஏவுகணை தாக்குதல்
தன்மேல் அடி விழுந்தவுடன் இந்த துருக்கியின் எருதுகான் சந்தேகத்தின்பேரில் சிரியா மீதும் ஈராக்மீதும் கொடூரமாக ஏவுகணைகளை வீசியுள்ளது.எங்கள்தாய் திருநாடான இந்தியாமீது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு நீ ஆதரவு கொடுக்கிறாயே? உனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமான? துருக்கியை நேட்டோவிலிருந்து கழட்டிவிட இந்தியா முயற்சி செய்யவேண்டும்.இந்த எருதுகானின் கொட்டத்தை அடக்க இந்தியா எல்லா வழிகளையும் கையாள வேண்டும்.   11:57:38 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
31
2022
அரசியல் கவர்னர் ரவி பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
இவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள்...சமீபத்தில் கோவையில் காரில் குண்டு வெடித்த போது அந்த மக்களுக்கு ஆறுதல் கூடவா சொல்லக்கூடாது... சரி, முதல்வரையாவது ஒரு ஆறுதல் வார்த்தை சொல்ல சொல்லலாமில்லையா... சமத்துவம் பேசும் நீங்கள், கோவை மக்கள் கதி கலங்கி. நின்ற போது, உங்களின் சமத்துவ தர்மமும் சனாதன தர்மமும் எங்கே போய்விட்டது...முதலில் மனிதத்தன்மையுள்ளவர்களாக இருங்கள்.   15:37:21 IST
Rate this:
2 members
0 members
18 members

செப்டம்பர்
13
2022
அரசியல் "ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" தொடர்ந்து விஷத்தை கக்கும் ஆ.ராசா ஹிந்துக்கள் கொதிப்பு
தனி மனித ஒழுக்கத்தையும் பிற மனிதர்களின் உணர்வுகளையும் காலினடியில் வைத்து நசுக்குகின்ற கல்நெஞ்சம் படைத்த கயவனின் பேச்சு போல் உள்ளது.   12:09:09 IST
Rate this:
3 members
0 members
10 members

டிசம்பர்
10
2021
பொது ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டுக்கே... பிபின் ராவத் என்ற மாவீரர்
பாரதத் தாயின் வீர மகன் திரு.பிபின் இராவத் அவர்களின் மறைவிற்கு, இதயம் மிக்க துயரத்துடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.எதிரிகளின் சதியா அல்லது இயற்கையின் விதியா தெரியவில்லை என்றாலும் நம் பாரத மாதா பல வீர அபிமன்யுகளை உருவாக்கிக் கொண்டே இருப்பாள். ஜெய் பாரதம்.   11:42:22 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
13
2021
உலகம் ஜிங்பிங்கின் பதவி நீட்டிப்பை சர்வாதிகாரம் என விமர்சித்த அமெரிக்கா சீனா கடும் கண்டனம்
சீனாவின் நிலத்தையோ நீர் பகுதிகளையோ ஆக்கிரமிக்க உலகில் எந்த நாடும் விரும்பவில்லை.மாறாக கம்யூனிச ஆட்சியின் கீழ் அரசு நடத்தும் சீன அரசு, தீவிரவாதிகள் நிறைந்த பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவின் நிலப்பகுதி, இந்து மகாசமுத்திரப்பகுதி , தென் சீன கடல்பகுதி, தைவான், பூடான், நேபாளம் இதுபோல் உலகில் 18 நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தல்களைக் கொடுத்து உலக அமைதியை கெடுத்துக் கொண்டிருக்கிறது.இதன் மூலம் 3வது உலக யுத்தம் வருவதற்கும் சீனாவே காரணமாக இருக்கிறது.இதற்கு சீன அதிபர் ஜிங்பிங் மட்டுமல்ல , உலகம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்றெண்ணும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் CPC அமைப்பும் சீன மக்களுமே முக்கிய காரணம் ஆகும். ஜிங் பிங்கின் 3 ம் முறை தேர்வு 3 வது உலகப் போரை உண்டுபண்ணும்.அதில் ஏற்படும் அழிவுகளில் சீன தேசத்திற்கு மிகப் பெரிய அழிவு நிச்சயம் உண்டு.   15:29:29 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
28
2021
அரசியல் மோடியின் இடத்திற்கு ராகுல் வர முடியாது பிரசாந்த் கிஷோர்
பிரஷாந் கிஷோர் , தான் செய்யும் அரசியல் வியூக தொழிலில் ஒரு நேர்மையான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.அது தேச நலனை மையமாக வைத்து செயல்பட வேண்டும். பணமே பெரிது என்பதையும் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் மேலுள்ள விருப்பு வெறுப்புக்களையும் தவிர்த்து எல்லாவற்றிற்கும் மேலாக நம் தேசமே பெரிது என்பதை மையமாக வைத்து செயல்பட வேண்டும்.இல்லையேல் தங்களின் வியூகத்தால் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு தாங்களும் ஒரு விதத்தில் பொறுப்பாவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.   13:23:08 IST
Rate this:
0 members
0 members
18 members

ஆகஸ்ட்
24
2021
உலகம் அமெரிக்க ராணுவத்துக்கு தலிபான் எச்சரிக்கை
தலிபான் தீவிரவாதிகள் இந்த அளவிற்கு பேசுவதற்கு காரணம் பாகிஸ்தான், சீனா நாடுகளின் ஆதரவுகளே காரணம்.தீவிரவாதத்தை களையெடுக்க விரும்பும் அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர்ந்து தலிபான் தீவிரவாதிகளை மட்டுமின்றி பாகிஸ்தான், சீனாவிற்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும்.இல்லையேல் பயோ வைரைஸை உலகெலாம் பரப்பி பல உயிர்களை அழித்த சீன அரசு தீவிரவாத வைரைசையும் உலக நாடுகளுக்கு விரைவில் பரப்பும்.   11:54:08 IST
Rate this:
0 members
0 members
19 members

ஆகஸ்ட்
16
2021
அரசியல் ராஜ்யசபாவில் அமளி எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் வலியுறுத்தல்
நாடாளுமன்ற அவை நடந்து கொண்டிருந்த போது ரவுடிகளைப் போல பெஞ்சு மேல் ஏறி கத்தியது, சுற்றறிக்கைப் பேப்பர்களை கிழித்தெரிந்தது, காவலர்களை கீழே தள்ளியது போன்ற செயல்கள் , நாட்டின் கண்ணியத்தை இந்தியாவில் மட்டுமல்ல உலக அரங்கத்திலும் குறைப்பதற்கு வழிவகுக்கும்.இது 130 கோடி மக்களுக்கும் தலைகுனிவை உண்டு பண்ணும்.உலகமே இந்தியாவின் தலைமையை எதிர்பார்த்து இருக்கின்ற இந்த நேரத்தில் இந்தியாவின் பெருமையை சிறுமைஉடைய சில எம்.பி.களின் செயல் நாடாளுமன்றத் தலைவர் திரு.வெங்கையா நாயுடுவை மட்டுமல்ல நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைவரையும் கனத்த இதயத்துடன் அழ வைக்கிறது.இந்த தவறை செய்தவர்கள் , இனி செய்யலாம் என்று நினைப்பவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாயினும் மீதமுள்ள காலத்திற்கு அவர்களை சஸ்பெண்டு செய்து அதன்பிறகு வரும் காலத்தில் எம்.பி. ஆவதற்குரிய தகுதியை இழக்கும் படி செய்ய வேண்டும். ஜெய்கிந்த்.   11:32:19 IST
Rate this:
0 members
1 members
3 members

ஜூலை
23
2021
அரசியல் 2024ல் பா.ஜ.,வுக்கு எதிராக கூட்டணி மம்தாவின் முயற்சி பலன் அளிக்குமா?
ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்கும் போது சட்டத்தை மதிப்பேன் அனைத்து மக்களும் அமைதியாக வாழ ஆட்சி செய்வேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, அறியணை ஏறியபின் மாற்றுக்கட்சியினரைத் தாக்கி 10 பேருக்கு மேல் இறப்பதற்கு காரணமாக இருந்தவர் மம்தா. இவர் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றால், இவர் வைத்ததுதான் சட்டமாக இருக்கும். இவர் யாரையும் எதுவும் செய்யத் தயங்க மாட்டார்.   10:06:26 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூன்
24
2021
பொது 2 கோடி பெரிதா? 86 லட்சம் பெரிதா? தடுப்பூசி சாதனையில் நடந்தது இதுதான்!
உலகளவில் கொரோனோ தடுப்பூசி திட்டத்தில் இந்தியாவின் நற்பெயரை கெடுப்பதற்கு சில நாடுகள் வேண்டுமென்றே குறைகளை கூறிவரும் நேரத்தில் ,86 இலட்சம் பேருக்கு ஒரே நாளில் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டது என்பது உண்மை அதனால் இந்தியாவை சிறுமைபடுத்துபவர்கள் தங்களை தாங்களே நினைத்து வெட்கி தலை குனிய வேண்டும்.சீனா இன்றளவில் எப்படிப்பட்ட பொய்யையும்(செயலையும்)கூற தயங்குவதில்லை.ஆதலால் இந்தியாவின் ஒரே நாளில் 86 இலட்சம் தடுப்பூசி என்ற செயல் சாதனையே.   10:47:31 IST
Rate this:
3 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X