இதே மாதிரி தான் 2004 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் PF க்காக அரசு தனது பங்களிப்பை அவர்கள் கணக்கில் அதாவது மத்திய அரசின் PF கணக்கில் செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு கால பலன்கள் கிடைப்பதில்லை எனவே அவர்கள் பழைய ஓய்வூதியத்தை திட்டத்தை தொடருமாறும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யுமாறும் போராடுகிறார்கள். வெளித்தோற்றத்துக்கு ஏதோ அரசு ஊழியர்கள் சம்பளம் பத்தவில்லை என்று போராடுவதாக சித்தரிக்கிறார்கள்.
25-பிப்-2021 14:05:47 IST
பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் இரு கட்சிகளிலும் இருக்கிறார்கள். இன்று மக்களை விட இறைசக்தியை நம்புபவர்கள் இரு கட்சியிலும் உள்ளனர். ராகு காலம், எமகண்டம், முஹூர்த்தம் என்று பஞ்சாங்கம் பார்ப்பவர்கள் இரு கட்சியிலும் பெருகிவிட்டனர் . அதனால்தான் மக்களை பற்றி , அவர்களின் தினசரி வாழ்வாதாரத்தை பற்றி, அவர்களை பாதிக்கும் போக்குவரத்து அசௌகரியங்கள் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கூடும் கூட்டம் அனைத்தும் தங்களுக்கு வாக்கு வங்கியாக மாறும் என்ற நினைப்பில் இரு பெரும் கட்சிகளும் இருக்கின்றன. தொலைத்தொடர்பு, காணொளி காட்சி, இணையம் என்று தொழில்நுட்பம் எப்படி எப்படியோ வளர்ந்து விட்டபோதிலும் விருப்ப மனுவை நேரில் சென்றுதான் தரவேண்டுமா ? மக்களை வாட்டி வதக்க வேண்டுமா ?? வோட்டு என்ற ரூபத்தில் மக்கள் தீர்ப்பு எப்படி அமையப்போகிறதோ, அந்த மகேசனுக்கே வெளிச்சம்
25-பிப்-2021 12:58:00 IST
இவை எல்லாம் தேர்தல் நேர ஸ்டண்ட் என்றுதான் சொல்ல வேண்டும். எப்படியும் முதல்வராக ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பு எந்த ஒரு காரணியும் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்ற ஒரு தீவிரமான போராட்ட குணம் . ஆட்சி தனது கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது என்ற தோற்றத்தை வெளிக்காட்டும் யுக்தி. அம்மாவின் பாணியில் திரு எடப்பாடியார் ஓட்டுக்காக , மக்களை தன்வசம் ஈர்க்கும் தலைவராக மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரின் தலைமை பண்பு பாராட்டக்கூடியது. ஆனால் தமிழ்நாட்டின் நிதி நிலைமை, மாணவர்களின் கல்வி தரம் என்று பார்க்கும்போது ஒரு சிறந்த ஆட்சியாளராக , ஆட்சியின் சிறந்த தலைமை நிர்வாகியாக மதிப்பிட முடியாமல் போகிறது.
25-பிப்-2021 12:47:12 IST
இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் நான்கு தேதிகளுக்குள்ளாக தேர்தல் தேடி அறிவிக்கப்பட்டுவிடும். சட்ட சபை தேர்தல் நடப்பதற்கு முழுதாக ஒரு மாதம் தான் இருக்கிறது. அணைத்து கட்சிகளும் பரபரப்பில் இருக்கின்றனர். தேர்தல் சமயம் என்றால் சரளமாக பண புழக்கம் இருக்கும. பணப்பட்டுவாடா, கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு இருநூறு என்றாலும் கூட மக்களுக்கு கொடுக்க ஒரு கட்சி குறைந்த பட்சம் ஐந்து கோடி செலவு பண்ணனும். எல்லா கட்சிகளும் சேர்ந்து என்றால் பத்து முதல் பதினைந்து கோடி என்று வைத்துக்கொண்டாலும் கூட தமிழகத்தில் தோராயமாக நாலாயிரம் கோடி பணம் புழங்கும். இது தவிர போக்குவரத்து, குவார்ட்டர், பிரியாணி , வாகன அணிவகுப்பு, மேடை, தோரணம் என்று பணத்தை தண்ணீராக இறைத்து தேர்தல் விழா நன்றாக நடக்கும். அரசாங்கம் தன்பங்குக்கு வேறு தேர்தலுக்காக செலவு செய்ய போகிறது. இந்த சமயத்தில் ரஜினி எதற்க்காக முக்கிய முடிவு எடுக்க வேண்டும்.? அவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள். கேட்டாலும் ஒன்னும் நடக்காது. அவர் பேசாமல் இருந்தால் மட்டுமே தனது மரியாதையை காப்பாற்ற முடியும். மேல்தட்டு மக்கள் நாலு பேர் வேண்டுமென்றாலும் அவர் பேசுவதை மதித்து கேட்கலாம். அவர் ரசிகர்கள் அரசியல் ரீதியாக மீண்டும் ஏமாற மாட்டார்கள்.
23-பிப்-2021 15:29:07 IST
காவிரி உபரி நீரை பயன்படுத்துவது என்ற இந்த திட்டத்துக்கு காவிரி நதி நீர் ஆணையத்தின் ஒப்புதல் தேவையா இல்லையா என்பது தீர்பாணையத்தின் பார்வையிலிருந்து பார்க்க வேண்டும். இந்த புதிய திட்டம் மூலம் இரு மாநில அரசுகள் பாதிக்கப்படும் என்று ஒரு நிலை வந்தால் அப்போது உச்ச நீதி மன்றத்தை நாடுவார்கள். வழக்கு போடுவதற்கு முன்பு நதி நீர் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டுமா என்பதும் ஒரு கேள்விக்குறி. தொலைநோக்கு திட்டம் சரி. ஆனால் காவிரி நம் மாநிலத்தில் இல்லையே அதுதான் இங்கு பெரிய பிரச்சினை கர்நாடகாவில் வெள்ளம் வரும் காலங்களில் திறந்து விடப்படும் உபரி நீர் கணக்கை இரு மாநில அரசுகளும் சரியாக பராமரிக்க வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் வெற்றியடையும்.
23-பிப்-2021 12:06:56 IST
மிகவும் சரியாக சொன்னீர்கள். நல்ல பதிவு. கச்சா எண்னை விலை ஏறவில்லை என்று எதை வைத்து ராகுல் காந்தி சொல்கிறார் என்று தெரியவில்லை. உலக நிலவரம் தெரியாமல் உளறுகிறார். நாடளுமன்ற தேர்தல் சமயத்தில் மோடி ஏழைகளில் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பணக்கர்களிடம் தந்து விட்டார் என்றார். இப்போதும் அப்படியே சொல்கிறார்.
23-பிப்-2021 10:38:53 IST
இ .பி.ஸ் மற்றும் ஓ.பி.ஸ் தொண்டர்களை நோக்கி மட்டும்தான் வேண்டுகோள் விடுக்கின்றனர். நீங்கள் தொண்டர் இல்லை என்றால் ஏற்ற வேண்டாம். குற்றவாளியா இல்லையா என்பதை அந்த கட்சி தொண்டர்கள் முடிவு செய்து கொண்டு விளக்கு ஏற்றுவாத வேண்டாமா என்பதையும் முடிவு செய்துகொள்வார்கள். உங்களை ஏற்ற சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
23-பிப்-2021 10:25:59 IST
சீக்கிரம் தேர்தலை முடித்துவிடுங்கள். அடுத்த ஆட்சியிலாவது நம் தமிழகத்தின் பிரச்சினைகள் சரியாக வேண்டும். பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
22-பிப்-2021 15:22:03 IST
இறை நம்பிக்கை உள்ளவர் எம்.ஜி. ஆர் . அவரைவிட ஜெ. இறை நம்பிக்கை மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த இருவரின்பால் நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே அண்ணா தி.மு.கவின் உண்மை தொண்டர்கள். அவர்களின் விசுவாசம் இந்த கட்சியை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தொண்டர்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த இரு தலைவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுக்கின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ இவர்களுக்காக தொண்டர்கள் அந்த நம்பிக்கையை நிறைவேற்றுவார்கள். கொடுத்து கொடுத்து சிவந்த கைகளை கொண்ட எம்.ஜி.ஆரின் ஆசிகளோடு எதிரிகளையும் துரோகிகளையும் புறம்தள்ளி கட்சியை பலப்படுத்துவார்கள்.
22-பிப்-2021 15:16:42 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.