படித்தது சரி..அதன் பின் என்ன செய்ய போகிறார் என்பது தான் மில்லியன் டாலர்
கேள்வி. Aafganukku போய் ஒன்றும் பயனில்லை. முடக்கி விடுவார்கள். இந்தியாவில் இருந்தால் மத வெறி ஏற்றி. உருப்பட விட மாட்டார்கள். வெளி நாடு போனால் படித்த படிப்பு வீணாகாது. பெயரை நினைவு வைத்த கொள்ள முடியும். எப்போதாவது சாதனை பட்டியலில் வருவாரா என பார்க்கலாம்.
29-மே-2023 20:07:33 IST
60,65 வயசு முடியரத்துக்குள்ளேயே மனுஷனுக்கு தாவு தீருது. இதில் இவருக்கு ஓட்டு போட்டு 150 வயது எதுக்கு வாழனும். வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது என்பார் கண்ணதாசன்..
29-மே-2023 15:05:31 IST
அதிமுக கட்சியில் உள்ளவர்கள் திமுகவின் பிள்ளைகள் தானே.
எந்த ஒரு கொள்கை வேறுபாடும் இரு கட்சியினருக்கும் கிடையாது. மக்கள் நலம் பற்றிய சிந்தனை கிடையாது. கொள்ளை அடிப்பதில் இருவரில் யார் ஆட்சி செய்தாலும் பங்கு உண்டு. ஆனால்
திமுக ரவுடி கட்சி என்றால் அதிமுக அமைதி புறாவா? அவர்கள் வெளிப்படையாக ரவுடி . இவர்கள் இது போன்ற வேலையில் உள்ளடி செய்பவர்கள்..அவ்வளவு தான் வித்தியாசம்.
28-மே-2023 07:11:54 IST
முதலில் எல்லா துறையிலும் இருக்கும் இடை தரகரை ஒழிக்க வேண்டும். திருமணம் பதிவு செய்ய சென்றால் கூட அதிகாரியே விண்ணப்பத்தை broker மூலம் தர சொல்கிறார்.இந்த இடைத்தரகர் யார் என்று பார்த்தால் ஆளும் கட்சியின் அடிபொடிகள். அவர்களின் வருமானத்திற்கு ஒவ்வொரு துறையிலும் இப்படி அராஜகம் செய்கிறார்கள். துறைகளில் இருக்கும் அரசு பணியாளர்கள், அதிகாரிகள் இந்த இடை தரகரை பார்த்து பயப்படுகிறார்கள்
26-மே-2023 11:03:52 IST
இது போன்ற ஏமாற்று பேர்வழிகள் மீது ஏமாறியவர்கள் புகார் கொடுத்தால் காவல் துறை ஏற்க கூடாது. வங்கி, போஸ்ட் office என அரசு உத்திரவாதம் தர கூடிய நிறுவனங்கள் மிக குறைந்த வட்டி தருவதால், அங்கு முதலீடு செய்யாமல், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு பின் ஏமாந்தவுடன் காவல் துறையில் எதற்காக புகார் அளிக்க வேண்டும்? காவல் துறை மிகவும் கஷ்டபட்டு இவர்களின் பணத்தை எதற்காக திரும்ப வாங்கி தர வேண்டும்? அவர்களை கேட்டா
பணம் முதலீடு செய்தார்கள்? இதோ இவ்வளவு எச்சரிக்க செய்கிறார். ஆனாலும் இன்னும் சில காலம் கழித்து இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தோம் ஏமாற்றி விட்டார்கள் என புகார் வரும். அதுவும் கோடி,கோடியாக ஏமாந்தது குறித்து. இது போன்ற புகார்களை காவல் துறை ஏற்கவே கூடாது. தேவை எனில் இதற்கான சட்டம் கூட போடலாம்.
25-மே-2023 06:44:23 IST
வேறு எங்கும் வேதாந்தா குழுமம் இந்த ஆலையை ஆரம்பிக்கவில்லை என்றாலும், வேறு மாநிலங்களில் வேறு தொழிற்சாலை அமைத்து நன்றாக குறைவில்லாமல வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். ஆனால் தூத்துக்குடியில் வேலை பார்த்த தொழிலாளிகள் இப்போது எங்கே வேலை கிடைக்கும் என காத்து தானே உள்ளார்கள். அவர்களால் எங்கு போகமுடியும் வேலை இழந்த அத்தனை பேருக்கும் தற்போது வேலை அவர்களின் இருப்பிடத்தில் கிடைத்து விட்டதா? வேலை உத்திரவாதம் இல்லாமல் வேறு இடம் போக முடியுமா?
23-மே-2023 09:42:48 IST
சுமார் 50 வருடங்களுக்கு முன் அரசு பள்ளியில் கைவேலை வகுப்பு என ஒன்று இருக்கும், PT வகுப்பு இருக்கும் பள்ளியில் நிலப்பரப்பு இருக்கும். அதில் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் சேர்ந்து காய்கறி, பூ தோட்டம் போடுவார்கள். ஒவ்வொரு வகுப்பு பிள்ளைகளும் ஒவ்வொரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்து தண்ணீர் பாய்ச்சுவது என இருப்பார்கள். அரசு adhikaargalin பிள்ளைகளும் அங்குதான் படிப்பார்கள். வேற்றுமை பாராமல் எல்லோரும் சாந்தோஷமாக இந்த வேலையை செய்வார்கள். ( அரசு பள்ளியில் படித்தால் புத்தகம் மாறாது. அடிக்கடி மாறுதலில் செல்லும் அரசு ஊழியர்கள் அரசு பள்ளிகளில் தான் பிள்ளைகளை சேர்ப்பார்கள்)..இந்த திராவிட முட்டாள்களின் ஆட்சி வந்து எல்லாவற்றையும் குட்டிசுவர் ஆக்கி விட்டது.
23-மே-2023 07:31:37 IST
தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை தான். அதே போன்று முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகள் இல்லை. ஆனால் முதலாளிகள் இங்கு சிறிய பிரச்சினை thozhilaaligalaal நேர்ந்தால் தொழிற்சாலையை மூடி விட்டு வேறு மாநிலம் பார்க்க போய் விடுவார்கள். ஆனால் இந்த கம்மிகளின் பேச்சை கேட்டு பிரச்சனை செய்த தொழிலாளிகள் எங்கே போக முடியும்?
Thoothudy strelite விவகாரத்தில் அது தானே நடந்தது சொந்த ஊரை விட்டு அடுத்த ஊருக்கு போவதானாலும் வேலை உத்திரவாதம் இருந்தால் தானே அங்கு போய் வேலை செய்ய முடியும். இங்கு திமுக அல்லது அதிமுக என, அக்கட்களின் மீது ஓட்டுண்ணியாக பயணித்து வரும் இந்த கம்யூனிஸ்டுகள் இப்படி தான் பேசுவார்கள். வீசி எரியும் காசுக்கு கூட்டணி தலைமையை மகிழ்விக்க வேண்டிதான் இப்படி பேசி திரிகிறார்கள். தேசிய கட்சியாக, காங்கிரசிற்கு இணையாக இருந்த தங்களின் கட்சி இப்போது ஒரு மாநில கட்சியிடம் ஒரு சில இடத்திற்கான இப்படி ஜால்ரா அடிக்க வெட்கப்படுவதே இல்லை என்னும் நிலையை துளியெனும் நினைத்தால் இவர்கள் இப்படி பேச துநிவார்களா?
23-மே-2023 07:18:22 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.