இந்த கடைகளில் விற்கப்படும் kanche பருப்பு பாக்கெட்டுகளில் பேக் செய்த மற்றும் முடிவு தேதி உள்ளதா என எவ்வளவு பேர் கவனித்திருப்பீர்கள்? முடிவு தேதிக்கு பிறகு எப்படியும் இன்னொரு பையில் அடைத்து விற்கும் வசதி உள்ளதால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை போலும்.
12-ஆக-2023 17:10:50 IST
பல வருடங்களாகவே போரூரில் உள்ள பிரஸ்டிஜ் குடியிருப்பில் பைப் லைன் மூலம் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது போன்று பல இடங்களிலும் இருக்கலாம்.. எனவே சென்னையில் முதன் முறையாக இருக்காது.
02-ஜூலை-2023 08:17:00 IST
கள்ள சாராயம் குடிச்சு செத்தவனுக்கு 10 ஆனால் துரதிஷ்டவசமாக இறந்த மற்றவர்க்கு 5. சூப்பர் டாஸ்மாக்கில் அடுத்தவன் குடியை கெடுத்து, கள்ள சாராயம் வேண்டாம் "நாங்க இருக்கோம்" என்று வளரும் கும்பலுக்கு வாழ்த்துக்கள்.
03-ஜூன்-2023 21:34:33 IST
ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். "தலைவர் வரும்போதும் அவர் அங்கு இருக்கும் போதும்" மட்டும் சிங்காரமாக இருந்தால் போதும். அதனால் சிங்காரமாக ஆக்குவதற்கு ஏதுவாக ஒரு ஒன்றரை நாள் முன்னாள் நீங்கள் இடம் பெயர்ந்து அவர் சென்ற மறு நொடியே திரும்பி வரவும். இதனால் எவருடைய வருமானமும் அதிகம் பாதிக்காது. சச்சரவு எதுவும் இருக்காது.
28-மார்ச்-2023 10:54:02 IST
சென்ற வருடம் ஒரு தமிழ் செய்தி ஒளியலையில் கன(kana) மழை என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். முக பாவம் மற்றும் நடை, உடை, பாவனையில் உள்ள மற்றொரு வேற்று மொழி சொல், (bhavam) தற்பொழுது கேட்பதற்கு ரொம்ப பாவமாக இருந்தது. அல்லது இதுதான் தற்பொழுது உள்ள நடைமுறைத் தமிழா என்று தெரிய வந்தால் நன்றி கூறுவேன்.
17-ஜன-2023 18:26:59 IST
நான் இங்கு யாருக்கும் பாடம் எடுக்க தேவை இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். ஒருமையில் எவரையும் வரைவு செய்யவேண்டாம். இங்கு ஒரு மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக கூறப்படும் பதில் அதே ஒருமையில் உள்ளது. ஒருவருக்கு இந்தி தெரியாது என்று அவர் "வெட்கப்பட்டு" கூற வேண்டுமாம்.
29-டிச-2022 15:27:55 IST
ஆணவத்தின் உச்சி இது போன்ற பதில். ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாற்று நாட்டு பிரஜையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த வேளையில் இவர் CRPF சீருடை அணிந்து வேலை செய்கிறாரோ அந்த வேளையில் அவர் வேலை அடையாளத்தின் அடிப்படையில் மத்திய அரசு தரப்பு ஆகிறார். அந்த அடிப்படையில் ஆங்கிலம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழியாகிறது. மேலும் இந்த நாட்டு பிரஜை கேள்வி கேட்காமல் அந்நியன் கேட்டால் பரவாயில்லை போலும். ஒரு வேளை இந்த பதில் மத்திய அரசு பணியில் இல்லாத வேளையில் சொந்த அடிப்படையில் எழுதி இருந்தால் அதே கேள்வி இவருக்கும் பொருந்தும். அந்த சீருடையில் இருக்க வேண்டிய கண்ணியம் எங்கே போனது ஒருமையில் எழுதும் பொழுது? சித்தார்த் ஆணவம் பிடித்த மனிதராக இருந்தாலும் அவர் இந்த நாட்டு பிரஜை.
அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆணவமான ஒரு கேள்விக்கு இந்த பதில் அதை விட மோசமான ஒன்று. அந்த சீருடையில் இருப்பதால் நாட்டை இவர் கவுரவப்படுத்துவதாக இவர் நினைக்கிறாரோ?
29-டிச-2022 13:03:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.