மரியாதைக்குரிய எழுத்தாளர் ஐயா,
இன்றைய வாரமலரில், தங்களது சிறுகதை, ‘அம்மாவும் கை ராட்டையும்’ படித்தேன்.
‘எதிர்பார்ப்பு ஊட்டும் அருமையான இந்த தலைப்புதான் நம் மனதில் தோன்றிவிட்டதே நமக்குத்தான் வாரமலரில் உடனடி வாய்ப்பு இருக்கிறதே எனவே, இதை எழுதாமல் விடக்கூடாது’ என்ற முனைப்புடன் வலிந்து எழுதப்பட்டதாவே காட்சி அளிக்கிறது, இக்கதை இதற்கு, ‘அம்மாவின் மனோதைரியம்’ என்ற தலைப்பு தான் பொருத்தம்.
‘நாகப்பைய்யர் தெருவில்… என்பதில் தொடங்கி, அம்மாவின் மனோதைரியத்தை என்னவென்று சொல்வது?’ என்பதோடு முடித்திருந்தால், நல்ல மதிப்பெண் கிடைத்திருக்கும்
தேவையில்லாத தலையையும், வகை இல்லாத வாலையும் ஒட்ட வைத்த காரணத்தினால், ஒளி குன்றி போய்விட்டது.
இந்த குறைகள் நீங்கிய, தங்களது புதிய சிறுகதை ஒன்றை, விரைவில் வாரமலரில் வாசிக்க ஆசைப்படுகிறேன்
நன்றி
27-ஜன-2020 16:31:30 IST
கோயம்புத்தூரை சேர்ந்த நண்பர் ராஜ் என்பவர், 'எதற்கு இவ்வளவு என்ற கேள்விகள்?' என்று கேட்டுள்ளார்
அவசியமற்ற கேள்விகள் இதில் ஏதுமில்லை. இந்த கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகளை ஒட்டியே, கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இவர் சொல்கிறார்: நான் ஒருமுறை மீட்டருக்கு மேல் கொடுக்க முடியாது என்று சொன்னதற்கு அடிக்க வந்த ஓட்டுநர்களும் உண்டு எழுகின்ற கேள்வி: இவர் ''ஒரு முறையில்' சென்ற 'ஒரு ஆட்டோவை' எததனை ஓட்டுநர் ஓட்டினார்கள்?
21-ஆக-2019 13:18:16 IST
டியர் சார்
18.08.2019 தேதியிட்ட வாரமலரில், இது உங்கள் இடம் பகுதியில் ‘ஆட்டோ ஓட்டும் மாணவர்’ என்ற தலைப்பில் வெளியான கடிதம் படித்தேன்
‘அடிக்கடி முதுகு வலி வரும் ஒரு மனிதன், ஆட்டோவில் பயணித்தால், அதன் குலுக்கல் காரணமாக, வலி மேலும் அதிகரிக்கும்’ என்ற பொது அறிவு கூட இல்லாதவரா ஆட்டோவில் சென்ற, கடைசியில், தாராளமாக கட்டணம் செலுத்திய அந்த நோயாளி நண்பர்?
அந்த நண்பர் எந்த ஊர்?
அந்த ஊரின், எந்த இடத்திலிருந்து, எந்த மருத்துவமனைக்கு, ஆட்டோவில் சென்றார்?
“இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர், என்பது எப்போதும் பயன் தருமா?
‘ஒரு பயணத்திற்கு எவ்வளவு தொகை நியாயமானது’ என்பது, அந்த தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத்தான் தெளிவாக விளங்கும்.
ஆட்டோவில் பயணிக்கும் பலவகையான மனிதர்களுக்கும், இந்த விபரம் தெரிந்திருக்காது. சரியான கட்டணத்தையே, ‘கூடுதல் கட்டணம் இது’ என்று நினைக்கும் மனோபாவமே இங்கு அதிகம். இந்நிலையில், பெட்டியில் போட சொல்வது, ஆட்டோ தொழிலை புதைக்குழியில் தள்ள சொல்வதற்கு சமம்
ஐம்பது ரூபாய் மதிப்புள்ள சவாரிக்கு ஐந்து ரூபாய் பெட்டியில் போடப்பட்டால் என்ன செய்வார், அந்த ஆட்டோ ஓட்டும் மாணவர்?
“தன் படிப்பு செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிடுவார்.” என்று மேல் விபரம் சொன்னராம் அந்த மருத்துவனை காவலாளி.
‘சும்மா அதிருது’ இல்லீங்களா?
‘ஆட்டோ ஓட்டி அந்த அளவுக்கு பெரிய வருமானம் வருகிறது என்றால், அவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்?’ என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இப்படி ஆட்டோவே ஓட்டிக்கொண்டிருந்தால், அவர் தனக்கான மருத்துவ பாடங்களை என்றைக்கு படிப்பார்? பின்னர், நமக்கெல்லாம் என்ன சிகிச்சை அளிப்பார்?
“முரட்டுத்தனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களை பார்த்தும் பழகிப்போன எனக்கு, நண்பர் கூறியதைக் கேட்டதும் வித்தியாகமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கடிதாசிகாரர்.
‘மருத்துவம் படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டினால் தான் இந்த உயர்குணங்கள் வரும்’ என்ற கருத்தை விதைக்கிறாரா?
மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும் கொண்ட லட்சகணக்கான நம்முடைய ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவரை கூட தம் வாழ்நாளில் இந்த மாலா உத்ஸ் சந்திக்கவே இல்லையா?
மருத்துவம் பயிலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை மனதார பாராட்டினேன் என்று முடிக்கிறார்.
என்று? எங்கு? என்பதையும் சொல்லாமல் மறைக்கிறார்.
மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு நல்ல உயரதிகாரி, திரு உத்தண்டராமன் அவர்கள்.
மாலா உத்தண்டராமன் என்ற புனைப்பெயரில் இவர் எழுதுவார் என்பது தெரியும்
‘மாலா உத்ஸ்’ என்ற இன்னொரு புது புனைப்பெயரில் இது உங்கள் இடம் பகுதியில் விட்ட கதையை நம்பமுடியவில்லை நன்றி என்றென்றும் அன்புடன், இராதாராமன், நெய்வேலி
19-ஆக-2019 13:11:39 IST
டியர் சார்
21.07.2019 தேதியிட்ட வாரமலரில், பூபதி பெரியசாமி எழுதிய 'தாயாய் அவள்' சிறுகதை படித்தேன்.
இதில் வேகமும் இல்லை விவேகமும் இல்லை விறுவிறுப்பும் இல்லை
நன்றி
என்றென்றும் அன்புடன்,
இராதா ராமன், நெய்வேலி
22-ஜூலை-2019 12:20:56 IST
14.07.2019 தேதியிட்ட வாரமலரில், நடுத்தெரு நாராயணன். ‘திண்ணை’பகுதியில்,அளித்த, முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜர் பற்றிய நினைவலைகள், கண்ணில் நீரலையையே ஏற்படுத்திவிட்டது இது போன்ற இனிய, எளிய, மனிதர்கள் இனிமேல் கனவில் மட்டும் தானா?
நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி.
15-ஜூலை-2019 19:51:12 IST
14.07.2019 தேதியிட்ட வாரமலரில், 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில், சகுந்தலா கோபிநாத் அளித்துள்ள ஆலோசனை அசத்தல் ரகம்
அதிலும், 'வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும் இன்னொரு கதவு திறக்காவிட்டால், ஆவேசமாக தட்டி, திறக்க வை' என்ற வரிகள் ஊக்கத்தின் உச்சம்
'சங்கட பெண்ணாய் இருந்தது போதும் இனி சாதனை பெண்ணாய் உயர்ந்து நில் என் தங்க மகளே' என்ற வரிகள் பொன்னால் பொறிக்கப்பட்டவை
நன்றி
என்றென்றும் அன்புடன்,
இராதா ராமன், நெய்வேலி
15-ஜூலை-2019 19:46:26 IST
07.07.2019 தேதியிட்ட வாரமலரில் வெளியான, ‘விஞ்ஞானியாக விரும்பும் ஏழை மாணவியின் கனவு’ என்னும் கட்டுரை, வாரமலர் இதழுக்கு பெருமை சேர்க்கின்றது
இப்போது, உக்கிரைனில் இருக்கும் உதயகீர்த்திகா, இக்கட்டுரையின் மூலமாக, போதுமான பொருளாதார உதவி கிடைத்து, படிப்பில், அடுத்த உயரத்திற்கு செல்லப்போவது மட்டுமின்றி, விண்வெளி வீராங்கனையாக உலா வரப்போவதும் உறுதி
இவ்வாறான தொண்டு மூலம், தினமலர் - வாரமலர் மக்கள் மனதில், ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரையை எழுதிய கட்டுரையாளர், திரு எல். முருக ராஜ் அவர்களையும், வெளியிட்ட பொ. ஆ,, (இது அண்ணன் அந்துமணி அவர்களின் பாணி) அவர்களையும் பாராட்டுகின்றேன்.
நன்றி
என்றென்றும் அன்புடன்,
இராதா ராமன், நெய்வேலி
08-ஜூலை-2019 11:53:59 IST
டியர் சார்
26.05.2019 தேதியிட்ட வாரமலரில் பிரசுரமாகியுள்ள, படுதலம் சுகுமாரன் எழுதிய 'அப்பாவும் பணமும்' சிறுகதையும்,
கே. ஆனந்தன் எழுதிய 'தனிக்குடுத்தனம்' சிறுகதையும் யதார்த்தமாக, நன்றாக இருந்தன.
'நடைமுறைக்கு சாத்தியமான சம்பவங்கள் நிறைந்த கதைகளை மட்டுமே, பாரபட்சம் பாராமல், பிரசுரத்திற்கு இனி மேல் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்' …..என்னும் தீர்மானத்தை, பொறுப்பாசிரியர் உடனடியாக மேற்கொள்வார் என்றால், இனிமேல், ஒவ்வொரு வாரமும் நல்ல கதைகள் மட்டுமே, நம் வாரமலரில் பிரசுரமாகும் என்பது எனது தாழ்மையான கருத்து.
நன்றி
என்றென்றும் அன்புடன்,
இராதா ராமன், நெய்வேலி.
28-மே-2019 09:52:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.