இந்தியா முழுக்க இருக்கும் ஆளுநர் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வசதிகள் , அங்கே பணிபுரியும் பணியாளர்களின் சம்பளம் , வாடகை , பெட்ரோல் , இதர வசதிகள் இவைகளால் மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாதம் பல கோடிகளில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்களால் தெரிவு செய்யப்படும் நபர்களும் அல்ல. மக்களால் தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்ட கட்சிக்கார்களே இந்த பதவிகளை அனுபவிக்கிறார்கள். கேலிக்கூத்து
14-செப்-2021 06:59:17 IST
இவ்ளோ நாள் சாலைகள் எல்லாம் தரமாக இருந்தது போலவே இங்கே வாசகர்கள் குய்யோ முறையோ என கதறுகிறார்கள் . ஏதோ இவர்கள் எல்லாம் வானத்தில் பறந்தே பயணிப்பது போல. கருத்து தெரிவித்த பலரும் காலாவதியான சுகாசாவடிகளை வைத்து நம்மை சுரண்டும் ஒன்றிய அரசை எதுவுமே பேசாமல் மாநில அரசை குதறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியும் ஒரு பிழைப்பு .
03-செப்-2021 08:49:24 IST
முதலில் எல்லா கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தல்களிலும் புது புது சின்னங்களை ஒதுக்க வேண்டும். அல்லது பதிவு செய்த எல்லா கட்சிகளுமே நிரந்தர சின்னத்தை ஒதுக்க வேண்டும். சதவீத அடிப்படியில் வாக்குகள் பெரும் கட்சிகளுக்கே நிரந்தர சின்னம் என்பதே தேர்தல் ஆணையத்தில் ஏமாற்று வேலை தான். இந்த தவறுக்கு தண்டைக்கப்பட வேண்டியது தேர்தல் ஆணையம் தானே தவிர சிறிய கட்சிகள் அல்ல
31-ஆக-2021 12:10:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.