நிர்வாகச் செலவு, விலைவாசி உயர்வு என்று ஏதாவது ஒரு வகையில் கட்டணங்கள் மற்றும் அகவிலைப்படி உயர்த்தப்படுகின்றன. இதில் நிர்வாகச் செலவு என்பதால் கட்டண உயர்வு என்பது பொது மக்கள் அனைவருக்கும் உள்ளது. ஆனால், விலைவாசி உயர்வால் அகவிலைப்படி அளிப்பது மத்திய, மாநில, பொதுத் துறை, பெரிய பெரிய தொழிற் சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும்தான். அனைவரும் வாக்களித்துத் தான் அரசு அமைகிறது. தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், வேலையற்றவர்கள் போன்ற அனைவரும் GST செலுத்தவேண்டி இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி கிடையாது. அகவிலைப்படி என்பது விலைவாசி உயர்வைப் பொறுத்தது, அரசுத் துறையில் சம்பளம் பெறுவோர்களுக்கு மட்டுமல்ல. அதுமட்டுமல்ல, ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி என்பது சம்பளத்தைப் பொறுத்து இருக்கக்கூடாது. தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள், வேலையற்றவர்கள் போன்ற அனைவருக்கும் அகவிலைப்படி அளிக்க அரசு முன்வரவேண்டும்.
02-ஜன-2022 07:54:54 IST
திருவரங்கத்தில் இந்த மாதத்திலேயே ஏகாதசி முடிந்து விட்டது. மீண்டும் திருப்பதியில் ஒரு ஏகாதசி ஜனவரி 12ம் தேதி. இரண்டு இடத்தில் இருப்பதும் ஒரே பெருமாள் தானே. ஏன் இந்த வேறுபாடு?
29-டிச-2021 06:28:16 IST
இந்த GST என்பது மத்திய, மாநில, அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டா? அப்படியென்றால், அதை அவர்களே காட்டுவார்களா அல்லது அரசே ஏற்றுக் கொள்ளுமா?
27-டிச-2021 07:30:10 IST
சிங்கப்பூரில் இருக்கும் திரு காசிமணி அவர்களுக்கு காவிரி பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் என் போன்றவர்களுக்கு தெரியவைல்லையே எனும் போது வருத்தமாக இருக்கிறது, ஏதோ, தங்களைப் போன்ற அதி மேதைகளால் தமிழ்நாடு உறுப்பட்டால் சரி.
19-டிச-2021 13:09:50 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.