அதிமுகவின் ஆளுமை எடப்பாடி என்பதெல்லாம் சற்று ஓவராகத்தான் உள்ளது. என்ன, காலில் விழுவோரை பார்த்து ரசிப்பதுதான் ஆளுமை என்று எண்ணிவிட்டார் அதனால்தான் சொல்கின்றேன் எடப்பாடி அவர்களுக்கு என்று ஓட்டுவங்கி ஏதுமில்லை. எம் ஜி யாருக்காக அம்மாவுக்காக உள்ள தொண்டர்களில் பலரும் அங்கே இப்போது இல்லை. காசுகொடுத்து கூவச்சொல்லி ஐ டி விங் என்கிற கூட்டத்தை வைத்து தாறுமாறாய் திட்டச்சொல்லி கொடுத்துவிட்டால் கட்சி வளர்ந்துவிடும் என்று நினைத்துவிட்டார் எடப்பாடியார். அண்ணாமலைப்பக்கம் இளைஞர்களின் பார்வை திரும்பிவிட்டது. ஊழலுக்கு எதிராக மக்களின் மனப்போக்கு இப்போது அண்ணாமலை பக்கம்தான். மாற்றம் வேண்டுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனால் அண்ணாமலையின் யோசனை அபாரம்..
26-மார்ச்-2023 10:07:28 IST
எல்லோருக்கும் எதிரிகள் என்று யாராவது ஒருத்தர் வாழ்க்கையில் இருப்பார்கள்..ஆனால் நம்ம பப்பு ராகுலுக்கு எதிரி என்று பார்த்தால் யாருமே இல்லை.அட இதுவே ஒரு புள்ளப்பூச்சி என்று விட்டுவிட்டு போய்விடுவார்கள். உண்மையில் ராகுலுக்கு முதல் எதிரியே அவரது வாய்தான்.. வாயை கட்டுக்குள் வைத்திருந்தால் ஒருவேளை முன்னேறியிருக்கலாம். நாகாக்கவில்லை என்றால்..இப்படித்தான்
25-மார்ச்-2023 07:21:54 IST
காங்கிரஸ்காரர்களுக்கு யோசிக்கும் திறனே இல்லாமல் போயிற்றே. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. இவர்கள் நீதியை எதிர்த்து போராடுகின்றார்களா இல்லை..எவனோ எழுதி கொடுத்ததை டிவிட்டரில் போட்டு லைக்குக்காக செய்கின்றார்களோ? இவர் இத்தாலி பிரஜையா இல்லை இந்திய குடியுரிமை உள்ளவரா? இந்தியாவுக்காக போராடுகின்றாராம். என்ன விலை கொடுக்கவும் தயாராமே..அதுக்குதான் தகுதி நீக்கம் செய்யப்பட்டீர்..உளறலில் உச்சம் தொட்டுவிட்டார். திருவாத்தான்ன்னு ஒரு கிராமத்து பேச்சு வழக்கில் இருக்குது..அதுக்கு பொருத்தமானவர் இவரே..
25-மார்ச்-2023 07:19:00 IST
செய்வதெல்லாம் சட்டத்துக்கு புறம்பாக...பேசுவதெல்லாம் உளறலின் உச்சம்தொடுவதுபோல..இப்படி இருக்கையில் ஒரு சமூகத்தை சார்ந்தோரை கேவலம் பேசியது சரியானதா என்பதை காங்கிரஸ் இன்னமும் உணராமல் ஓட்டுக்காக நடிக்கின்றனர்.
இதைப்போல நமது ஊர்ல ஒரு குறிப்பிட்ட சாதியை அல்லது இனத்தை பற்றி பேசியிருந்தால் இப்போது ராகுலுக்கு அறிக்கை விடுகின்ற புத்திசாலிகள் என்ன செய்திருப்பார்கள். கைது என்றும் அவர் சார்ந்த சொத்துக்களை நொறுக்கி இருப்பார்கள்..உயிருக்கு பயத்தை காட்டி இருப்பார்கள்தானே? அப்படிப்பட்ட வார்த்தை பிரயோகத்தை ராகுல் பேசியதை மறந்து போராட்டம் என்கிற பெயரில் குதிக்கின்றார்கள். சொல்லப்போனால் இன்னமும் கூட ராகுல் மோடி சமூகத்திடம் மன்னிப்பு கேட்காமல் இருப்பதே காங்கிரஸ் செய்கின்ற மிகப்பெரிய தவறுகளில் இதுவே முதன்மையனது. மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்.
இழிவான சொற்பிரயோகத்திற்காக இன்னமும் வருத்தப்படாமல் அனுதாபம் தேடுகின்றது கேவலமான செயல்தான். ராகுலுக்கு எந்த தகுதியும் கிடையாது கட்சி தலைவராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக அல்லது பிரதமர் வேட்பாளர் என்கிற தகுதியே கிடையாது என்பேன். அவருக்கு தாய்லாந்து போகாமல் மனசு ஒரு நிலையில் இல்லாமல் அலைவது தெரிகின்றது.அரசியலுக்கு தகுதியே இல்லாத நபர் ராகுல்..
25-மார்ச்-2023 07:14:51 IST
நாட்டை காக்கவேண்டிய ராணுவத்தை காங்கிரஸ் அரசாங்கம் சுமார் எண்பத்தைந்து முறை உள்நாட்டு மக்களை அடக்குவதற்கு பயன்படுத்தியதை மக்கள் மறந்திடுவார்கள் என்று எண்ணுவது மடமை. காங்கிரசில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை விசாரிக்க மட்டுமே சி பி ஐ சுயேச்சையாக செயல்பட அனுமதிக்கின்றதே தவிர..காங்கிரஸ் இப்போது நீதிமன்ற நேரத்தையும் வீணடித்து தங்கல் மீதுள்ள சேற்றினை மறைக்க பார்க்கின்றது. பொல்லாத காங்கிரஸ்
24-மார்ச்-2023 13:08:38 IST
நாட்டை காக்கவேண்டிய ராணுவத்தை காங்கிரஸ் அரசாங்கம் சுமார் எண்பத்தைந்து முறை உள்நாட்டு மக்களை அடக்குவதற்கு பயன்படுத்தியதை மக்கள் மறக்கவில்லை என்பதை காங்கிரஸ் உணரவேண்டும். ஒருக்காலும் சி பி ஐயை மோடி அரசாங்கம் தவறாகவோ அல்லது அரசியல் எதிரிகளை அடக்கவோ பயன்படுத்தவே கிடையாது. ஊழலில் திளைத்த வரி ஏய்ப்பு செய்த கனவான் பெருமக்களை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவே சி பி ஐ தனது கடமையை செய்திட இந்த காங்கிரஸ் தடைபோட முயற்சிக்கின்றது. இப்போது நீதிமன்றத்தின் வேலை பளுவையும் சேர்த்து காங்கிரஸ் திசைமாற்ற முயற்சிக்கின்றது. பொல்லாத காங்கிரஸ்
24-மார்ச்-2023 13:01:10 IST
கூட்டணி கட்சியில் பலரும் பல்வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டார்கள்.. பன்னீர் பக்கம் சிலர், சசிகலா பக்கமும் சிலர், தினகரன் பக்கம் சிலர், இன்னும் சிலர் திமுகவுக்கும் சென்றுவிட்டார்கள்.. அண்ணாமலையால் ஈர்க்கப்பட்ட என்போன்ற பலரும் அதிமுகவை விட்டு விலகிவிட்டார். அதன் கோபம் எரிச்சல் எல்லாம் கலந்து முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை குறைத்துவிட்டது. இந்த சமயத்தில் அண்ணாமலை அவர்களின் செயல்பாட்டில் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் ஆர்வம் மிகுந்தோறும்.. அண்ணாமலையின் செயல்பாட்டினை வரவேற்கின்றார்கள். இதுவரை தமிழகத்தில் இவ்வளவு புள்ளிவிவரங்களோடு துணிச்சலாக எந்த அரசியல்வாதியும் பேசியதே கிடையாது என்கிறார்கள் சந்தோசத்தில். அடுத்த முதல்வராக அண்ணாமலையை நிச்சயம் தேர்வு செய்யலாம் என்கிற பொதுமக்களின் கருத்தில் கடுப்பான சிலர் தங்களது ஐ டி விங் இல் உள்ள சில குடிகாரர்களை வைத்து சகட்டுமேனிக்கு அண்ணாமலையை என்னென்னமோ சொல்லி விமர்சிக்கின்றார்கள். இதில் கடுப்பானது பொதுமக்கள்தானே தவிர அண்ணாமலை அவர்கள் இந்த சில்லித்தனமாக விமர்சனம் செய்வோரை பொருட்டாகவே மதிக்காமல் தனது இலக்கை நோக்கி சென்று கொண்டுள்ளார். அதனால் அண்ணாமலை சொல்வது இதுக்காகத்தான்.. எப்படியோ கூச்சல் போட்டவர்கள்தான் களைத்து ஓய்ந்துபோய் மூளியாய் முக்காடிட்டு போனார்கள்..அண்ணாமலை அடுத்த முதல்வர் என்பது மக்களின் விருப்பமாக தெரிகின்றது.. வாழ்த்துக்களை முன்னமே சொல்லிவைப்போம்..
23-மார்ச்-2023 14:10:37 IST
சரி..வாதத்துக்கே ஒப்புகொள்வோமே..எடப்பாடி அவர்கள் மறைத்துவிட்டார் என்றே வைத்துக்கொள்வோம்..அப்போதைய எதிர்க்கட்சி தலைவரின் வேலை என்னவோ?சட்டையை கிழித்துக்கொண்டு கவர்னரை பார்க்க நாடகமாடிய ஸ்டாலின் என்ன செய்தார்?
..தமிழில் நாற்பதாயிரம் மாணவர்களுக்கும் மேல் பெயிலு..ஆங்கில தேர்வுக்கு ஐம்பதாயிரம் பேர் வரவே இல்லை..தமிழுக்கென்று ஒரே ஒரு பல்கலை மட்டும்தான் அதுவும் எம்ஜியார் புண்ணியத்தில்..உங்கள் ஆட்சியில் குடியும் போதையும்தானே எங்கு பார்த்தாலும்..வாய் மட்டும் இல்லைன்னா ன்னு கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க..
22-மார்ச்-2023 16:03:39 IST
இந்நேரம் திமுகவின் சட்டப்பிரிவு கோர்ட் படிகளில் ஏறி பலரை முறையாக கவனித்து இந்த ஊழல் பட்டியல் வெளியிட தடை பெற்றிருக்க முயற்சி செய்துகொண்டிருக்கும். பல அமைச்சர்களின் தூக்கம் போயிருக்கும்..இதனை எண்ணி எண்ணி ஸ்டாலினும்த்தூக்கம் தொலைத்திருப்பாரே. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் விரைவில் வெளியிட கூடும். தமிழகத்தின் கடன் சுமார் ஏழு லட்சம் கோடி என்கிற செய்தியை படிக்கும்போது இந்த கழகங்களின் சொத்துப்பட்டியலில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை இருக்க கூடும் என்கிறது கமலாலய வட்டாரங்கள். அந்த அளவுக்கு ஊழல் செய்து பெரிய அளவுக்கு சொத்துக்களை குவித்து வைத்துள்ளனர். கோவில் நகைகளை கணக்கெடுத்தால் அது இன்னும் கூடும் என்கிறது செய்திகள். கோவில் நிலங்களும் அந்த அளவுக்கு கழக கண்மணிகளால் சுருட்டப்பட்டுள்ளது என்பது கூட அதிர்ச்சி தகவலாக இருக்கும். தடை கோராமல் இருக்க மாட்டார்கள் இந்த புனிதர்கள்..பொறுத்திருந்து படிப்போம் பரப்புவோம்..மக்கள் இந்த முறை திருந்தால் போகமாட்டார்கள் என்று உறுதிப்பட நம்புவோம்..
22-மார்ச்-2023 07:04:14 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.