இது அரதப் பழையதான, பாதி தவறான செய்தி. உண்மை என்னவெனில், அவர்கள் ஒப்பந்தப்படி தீவிரவாதத்திற்கு ஒழிக்க வாங்கிய எஃப் 16 -ஐ இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்திய பின் அமெரிக்க-பாகிஸ்தான் நாடுகள் சந்தித்துப் பேசின. நடந்த தவறை சரிப் படுத்த வேண்டுமெனில், எஃப் 16 விமானத்தை எதற்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம் என அமெரிக்காவின் ஒப்பந்தத்தை திருத்த பாகிஸ்தான் வேண்டியது. மேலும் சில புதிய விமானங்கள் வாங்க முன் வந்தால், ஒப்பந்தத்தைத் திருத்த அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இருதரப்பும் இதற்கு ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் போடப் பட்டு விட்டது. அதாவது, பாகிஸ்தான் இனி எதற்கு வேண்டுமானாலும் எஃப் 16 பயன் படுத்தலாம் (மறைமுகமாக இந்தியாவுக்கு எதிராகவும்). பாகிஸ்தான் தரப்பு புதிய அமெரிக்க தளவாடங்களை வாங்கும். இவை அனைத்தும் தெளிவாக செய்திகளில் வந்துள்ளன.
13-டிச-2019 02:19:05 IST
டேய் வண்டு முருகா, இலங்கை அகதிகளை எண்டா விட்டீங்க? சுப்ரியா சுலே, சிவசேனா, ஒய்.எஸ்.ஆர், பீஜு ஜனதா இவர்கள் எல்லோரும் இதே கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். உங்களுக்குத் தோன்றவில்லையா?
10-டிச-2019 03:48:45 IST
“சபரிமலைத் தீர்ப்புக்கு எதிரான சர்ச்சைகளும் போராட்டங்களும் பெண்களுக்கு எதிரானவை. பெண்களின் உரிமைக்காக கேரளத்தில் நடைபெற்ற போராட்டங்களை எல்லாம் மறந்துவிட்டு, ‘பெண்கள் அசுத்தமானவர்கள்’ என்றும், ‘பெண்கள் என்பவர்கள் பின்னால் நிற்கவேண்டிய வர்கள்’ என்றும் கருத்துகளைப் பரப்புகின்றனர். அதற்கு எதிராகவே ‘வனிதா மதில்’ இயக்கம் நடத்தப்பட்டுள்ளது. இடதுசாரி பெண்கள் அமைப்புகளும், பிற பெண்கள் அமைப்புகளும் பங்கேற்ற இப்போராட்டத்தை, ‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நடத்தும் போராட்டம்’ என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இதில் பங்கேற்ற பெண்களில் 99 சதவிகிதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே. இது கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குமான போராட்டம் அல்ல. பெண்களைப் பின்னோக்கி நகர்த்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டம்.
05-ஜன-2019 14:17:28 IST
அந்தப் பைகளை தரம் பிரிக்காமல் குப்பையில், சாலையில் எறிந்து விடடால் மறு சுழற்சி செய்ய முடியாது. தடை செய்து விடடால் ஏதோ ஓரு பையை எடுத்து செல்ல நேரிடும். துணிப் பை பல நாள்கள் உழைக்கும்.
24-டிச-2018 15:19:21 IST
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பலர், நிறப்பாகுபாட்டினால் கொல்லப் படுவது சர்வ சகஜம். இது என் கற்பனை அல்ல. ஒபாமாவே ஒப்புக் கொள்வது. போலீசே எந்த முகாந்திரமும் இன்றி கைது செய்வது அதிகம். பள்ளிக் குழந்தைகள் சரமாரியாகத் துப்பாகியால் கொல்லப் படுவதும் சகஜம். ராமசாமி இல்லையெனில் எவன் சீரழித்தது?
17-ஜூன்-2018 14:27:45 IST
கருப்பட்டி அய்யா, நான் பிரிட்டனில் பணிபுரிகிறேன். அங்கேயே தனியாக நிறுவனம் ஆரம்பித்து நடத்துகிறேன். நான் முன்பு வேலை செய்த நிறுவனங்களில் நவோதயாவில் பயின்றவர்களை இங்கு பார்த்திருக்கிறேன். அவர்களும் நீங்கள் கூறும் அதே கூற்றைத் தான் சொல்வர். ஆனால், அவர்கள் அனைவரும் கடைநிலை அல்லது நடுநிலையில் இருப்பர். படிப்படியாக உயர்வர்.
சரி, என் பிண்ணனிக்கு வருகிறேன். நான் இந்த நிலைக்கு வரக் காரணம் பள்ளிப் படிப்பில் நன்கு புரிந்து, மதிப்பெண்களைப் பெற்றி எல்லாம் கவலையின்றிப் படித்தது தான். நான் இங்கு முனைவர் பட்டம் பெற்ற போது இதன் அருமையைத் தெரிந்தி கொண்டேன். அது இருக்கட்டும். நான் படித்தது தமிழ் வழிக் கல்வியில், தமிழக பாடத் திட்டத்தில் தான். ஒரு சாதாரணப் பள்ளியில் தான்.
12-ஜூன்-2018 21:03:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.