"அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி என்பது கருணாநிதியின் கனவு". என்று முக ஸ்டாலின் கூறுகின்றாரே. அந்தக்கனவை எப்போதாவது கருணானிதி பொதுவெளியிலே சொன்னதுண்டா? எழுதியதுண்டா? அப்படி எதையும் பார்த்ததாகவோ கேட்டதாகவோ நினைவில் இல்லை. ஆதாரம் இருந்தால் முதல்வர் வெளியிடலாம். தனிப்பட்ட முறையிலே கனவைத் தனது பிள்ளையிடம் சொல்லியிருக்கலாமே என்றால் அதையேன் அவர் பொதுவெளியிலே வெளியிடவில்லை. தமது கழகம் மத்தியில் ஆட்சியில் கூட்டணியில் இருந்தபோது அதையேன் நிறைவேற்றவில்லை. வேறு யாரோ ஆட்சியில் இருந்தபோது போட்டதிட்டத்தை நிறைவேற்றும் போது அதை நாங்கள் கனவுகண்டோம் என்றால் எப்படி? அதை நனவாக்க நீங்கள் செய்ததுதான் என்ன? அதைப்பேசுங்கள்.
12-ஜன-2022 18:59:36 IST
பாராளுமன்றத்தின் செயல்பாட்டையும் அதன்வழி அரசின் செயல்பாட்டையும் ஜன நாயகவிரோதமான முறையில் அ நாகரீகமாக தடுக்கமுயன்ற 12 எம்பிக்களையும் சஸ்பெண்ட் செய்திருப்பது அவசியமான நடவடிக்கை. அவர்கள் மேலும் இத்தகைய நடவடிக்கைகளைத்தொடர்ந்தாலும் மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டும். அராஜகமாக வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட எம்பிக்கள் காந்தி சிலை முன்னர் அமர்ந்து தர்ணா செய்வது நகைப்பிற்குரியது.
02-டிச-2021 10:56:30 IST
கேதார் நாத் திருக்கோயிலிலே தீபாவளி அன்றி பாரதப்பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோதி அவர்கள் வழிபாடு செய்து அங்கே புனரமைக்கப்பட்ட அத்வைத வேதாந்த ஆச்சாரியாரான ஸ்ரீ சங்கராச்சாரியாரின் சமாதியை திறந்துவைத்து அவரது திருவுருவச்சிலையையும் திறந்து வைத்துள்ளார். மகத்தான செய்தி இது. வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வும் இது.
05-நவ-2021 12:11:31 IST
நீங்களே ஒரு கோயில் கட்டி அங்கே கோயில் கட்டியவர்களையும் சுவாமி சிலை வடித்தவர்களையும் பூசாரிகளாக வைத்துக்கொள்ளலாம். ஏன் சொந்தமா ஒரு வீடு கட்டி அதிலே ஒரு பகுதியில் வீட்டைக்கட்டியக் கொத்தனாரை தங்க வைக்கலாம். ஏற்கனவே உள்ளக்கோயில் எந்த விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்டதோ அவ்விதிகளின் படியே அங்கே பூசை செய்யவேண்டும். அதையெல்லாம் சர்ச் மாதிரி மாற்றமுடியாது. கத்தோலிக்க சர்ச் மாடலில் கோயிலை மாற்றக்கூடாது. ஆமா சிலைவடித்தவரும் கொத்தனாரும் நீங்களும் ஒன்றா வேறா
02-செப்-2021 13:23:33 IST
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப்பெருக்குவது அதன் மூலம் உண்ணத்தகுந்த எண்ணெய் உற்பத்தியைப்பெருக்குவது மிக நல்ல முயற்சி. ஆனால் இதில் நமது உடலுக்கும் கேடுவிளைவிக்கும் எண்ணெய்ப்பனையை இங்கே உற்பத்தி செய்வது நல்லது அல்ல. எண்ணெய்ப்பனை பயிரிடுவதால் காடுகள் அழிக்கப்படும் அபாயம் உண்டு. சமவெளிப்பகுதிகளில் எண்ணெய்ப்பனையை பயிரிடுவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்துவிளைவிக்கலாம். காலம் காலமாக இங்கே விளையும் எள் தென்னை, மணிலா போன்றவற்றினைப் புன்செய் நிலப்பரப்பில் அதிகரிப்பதே நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.
19-ஆக-2021 17:01:43 IST
மானிலங்களைப்பிரிப்பதற்கும் தேசப்பிரிவினைக்கும் முடிச்சுப் போடுவது அபத்தமானது. இரண்டும் வேறுவேறானவை. தமிழ் நாட்டிலே கடந்த ஐம்பதாண்டுகளாக நடக்கும் அரசியல் தமிழ் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வட்டாரங்களில் சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. சென்னையை சுற்றியே தமிழக அரசின் வளர்ச்சித்திட்டங்கள் அமைந்துள்ளன. ஒரு சில குடும்பங்களின் நலனுக்காகவே தமிழக அரசியல் இயங்குகின்றது. கொங்கு மண்டப்பகுதியினர் கடுமையாக உழைத்தும் அந்தப் பகுதிக்குத் தேவையான வளர்ச்சித்திட்டங்கள் நீர்பாசணத் திட்டங்கள், இருப்புப்பாதைத்திட்டங்கள், மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கானத் திட்டங்கள் பல கிடப்பிலே போடப்பட்டுள்ளன. இதனை சென்னைமையவாத அரசியல்வாதிகள் திருத்திக் கொள்வார்கள் என்று எங்களுக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. இங்கே பிரிவினைவாதத்தை வளப்பதற்கு வேலைகள் துவங்கியுள்ளன. இவற்றை மாற்றுவதற்கு தமிழகத்தை மூன்று மானிலங்களாகப் பிரித்தல். அவ்வாறு பிறித்தான் பாண்டிய நாடும், சோழ நாடும் கொங்கு நாடும் சிறப்பானதொரு வளர்ச்சியைப்பெறும். கொங்கு நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மாற்றும் பொருளாதார வளர்ச்சி சமச்சீரான முறையிலே வளர்க்கப்படும். எளிதிலே மக்களால் அணுகப்படக்கூடிய எடப்பாடியார் போன்ற முதல்வர்கள் இங்கே நல்லாட்சிவழங்கிட மாதம் மும்மாரி பொழியும். ஜெய்ஹிந்த் ஜெய் கொங்குஸ்தான் வெல்லட்டும் வெல்லட்டும் எமது கொங்கு தனிமாநிலக்கோரிக்கை.
14-ஜூலை-2021 12:31:13 IST
இந்த அல்லோபதி மருந்துகளை உற்பத்தி செய்யும் பெரும் குழுமங்களும் அவற்றின் மரூந்துகளை பரிந்துரை செய்யும் டாக்டர்களும் சித்ததா ஆயுர்வேத மருந்துகளைபற்றி dhava
22-மே-2021 17:18:03 IST
சித்தா என்பதே சமஸ்கிருதப் பெயர்தான். சித்தர்கள் பெயர்கள் பல சமஸ்கிருதத்திலே உள்ளன. அவர்களுக்கு மொழி பேதம் கிடையாது. சித்தா - ஆயுர்வேதம் ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைப் பொதுவானது. சித்த மருத்துவ நூல்கள் தமிழிலேயும் ஆயுர்வேத நூல்கள் வடமொழியிலே உள்ளன. தமிழகம் தவிற பிறமானிலங்களில் ஆயுர்வேதமே உள்ளது.
06-மே-2021 08:35:18 IST
சௌபாக்கியா என்று எழுதவேண்டும். ஓள என்ற உயிரெழுத்தை ஒழித்ததுக்கட்டவேண்டாம். தமிழ் நெடுங்கணக்கில் ஐ, ஒள ஆகியவற்றை அழித்தொழிக்கமுயலும் ஈவெரா வழியினருக்கு துணைபோகவேண்டாம்.
20-ஏப்-2021 17:07:53 IST
அருமையான வரலாற்றை சொன்னவர்கள் அந்த தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் எங்கே தமது வேதாந்த ஞானத்தைப் பரப்பினார்? எங்கே சமாதியானார். அவரது ஸமாதியை எங்கே தரிசிக்கலாம் என்றும் சொல்லியிருந்தால் அவரது திருவருளை திருவாரூரில் பெறலாம் என்று பக்தர்கள் பயன்பெற்றிருப்பார்கள். சிவசிவ
28-நவ-2020 18:46:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.