பொது மே 21,2022 | 22:50 IST
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற ஒரு காரை மறித்தனர். சசிராம், இஸ்மாயில், முகமது, ரசீத், ஜாகித் என்ற 5 பேர் காரில் இருந்தனர். அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் காரை சோதனை செய்தனர். உலோகத்தால் ஆன 2 சாமி சிலைகளை கைப்பற்றினர். விருதுநகரை சேர்ந்த சாந்தா என்பவரிடம் இருந்து சிலைகளை வாங்கிக்கொண்டு கர்நாடகாவுக்கு கடத்திச் செல்வது தெரிந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு சிலை 5 கிலோ எடை கொண்ட கிருஷ்ணர் சிலை. மற்றொன்று 7 தலை நாகத்துடன் கூடிய விநாயகர் சிலை. அதன் எடை 3 கிலோ
வாசகர் கருத்து