செய்திச்சுருக்கம் ஏப்ரல் 11,2021 | 19:53 IST
''கொரோனா 2 -வது அலை வீசும் நிலையில் சி.பி.எஸ்.இ. தேர்வு நடத்தும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்'' என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,'' முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்த வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார். ''இன்னும் எத்தனை நாள், இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாடப்போகிறது?'' என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாசகர் கருத்து