அரசியல் பிப்ரவரி 24,2021 | 22:41 IST
தடை செய்யப்பட்ட குட்காவை, சட்டசபைக்குள் எடுத்து சென்றதாக, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக் குழு, 'நோட்டீஸ்' அனுப்பியது. நோட்டீசை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதியாக இருந்த சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. 'உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறுகள் இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, சட்டசபை செயலர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து, ஸ்டாலின் உள்ளிட்ட, 19 எம்.எல்.ஏ.,க்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
வாசகர் கருத்து