சம்பவம் » லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மே 09,2019 14:30 IST
திருவாரூர் மாவட்டத்தில் லாரிகள் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு, மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற நடைமுறையைக் கண்டித்து, இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர். மாவட்ம் முழுவதும் சுமார் 3200 லாரிகள், இயங்கவில்லை அரவை பணிகளுக்காக லோடுகளை மில் உரிமையாளர்கள் ஏற்றிக் கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, மில் உரிமையாளர்களின் லாரிகளில் அரவைக்கான லோடுகளை ஏற்றும் நடைமுறையை ரத்து செய்யக்கோரி போராட்டம் தொடங்கியுள்ளது.
வாசகர் கருத்து