பொது » சிண்டிகேட் வங்கியில் ரூ.6 கோடி மோசடி ஆகஸ்ட் 28,2019 19:24 IST
கோவை, பொள்ளாச்சியில் செயல்படும் சிண்டிகேட் வங்கி கிளையில் மே 2014 முதல் ஜூன் 2016 வரை கிளை மேலாளராக இருந்த தன்ராஜ் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த ஆடிட்டர் சுப்பிரமணியன் இருவரும் சேர்ந்து சுமார் 35 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி போலியான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் தயாரித்து, அவற்றின் பேரில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சிண்டிகேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் சிவராமன் அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ போலீசார், தன்ராஜ், சுப்ரமணியன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து