சம்பவம் டிசம்பர் 26,2020 | 17:50 IST
திருச்சி ஜீயபுரம் அருகே அல்லூரில் வசித்து வருபவர் வெங்கடேசன், நேற்று இரவு இரவது வீட்டிற்குள் இரண்டு திருடர்கள் புகுந்தனர். அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் சத்தம் போட்டதில் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி திருடர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது திருடன் ஒருவன் தன் கையில் இருந்த கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினான். ஆத்திரமடைந்த அந்த பகுதி இளைஞர்கள் கத்தியை தட்டி விட்டு, இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் திருடர்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்தனர். விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த தீபு மற்றும் அரவிந்த என்பது தெரியவந்தது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களை பொதுமக்களே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து