அரசியல் ஜனவரி 20,2021 | 19:14 IST
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அடைக்கப்பட்டுள்ளளார். தண்டனைக்காலம் முடிந்து 27ம்தேதி அவர் விடுதலையாக உள்ளார். அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலில் மாற்றம் வருமா?? அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் இருந்ததால் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவசர அவசரமாக பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் தகவலும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து