மாவட்ட செய்திகள் மார்ச் 20,2022 | 14:27 IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் தேர்தல் நடந்தது. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி ஆகியோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. ஐகோர்ட்டில் விசாரணை நடந்த நிலையில் , வாக்குகளை எண்ணலாம் என கோர்ட் உத்தரவிட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள், சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பின் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. விஷால் அணி முன்னிலையில் உள்ளது
வாசகர் கருத்து