மாவட்ட செய்திகள் ஜூலை 04,2022 | 21:14 IST
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, வேலுார், சத்துவாச்சாரியைச் சேர்ந்த வக்கீல் வெங்கடேசன் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் மண்ணெண்ணெயை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து விசாரித்தனர். இவர்களுக்கு சொந்தமாக வேலுார், காந்தி சாலையிலுள்ள, 800 சதுர அடி காலிமனையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். வழக்கு நடந்து வருகிறது. ஆக்கிரமித்தவர்கள் வழக்கை வாபஸ் பெறும்படி, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் இவர்கள் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனுப்பி வைத்தார்.
வாசகர் கருத்து