Advertisement

தமிழக மீனவர்கள் தாக்கிய இலங்கை மீனவர்கள் 6 பேர் காயம்

மாவட்ட செய்திகள் அக்டோபர் 15,2022 | 00:00 IST

Share

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன்.25. இவரது பைபர் படகில் பூவரசன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்.60, தென்னரசன்.30 உள்ளிட்ட 6 மீனவர்கள் 12ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களை தாக்கினர். படகில் இருந்த வலைகள் மற்றும் மீன்களை எடுத்துச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 6 மீனவர்களும் இன்று காலை கரைத் திரும்பினர். அவர்களை உறவினர்கள் பொறையாறு மருத்துவமனையில் சேர்த்தனர். பொறையாறு போலீசார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X