மாவட்ட செய்திகள் அக்டோபர் 18,2022 | 00:00 IST
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலைய முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 15ஆம் தேதி 2வது நிலையில் உள்ள 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
வாசகர் கருத்து