பொது நவம்பர் 02,2022 | 09:49 IST
மயிலை கபாலீஸ்வரர், மேல்மலையனுார் அங்காளம்மன், இருக்கன்குடி மாரியம்மன், பொள்ளாச்சி மாசாணியம்மன், நாமக்கல் நரசிம்ம பெருமாள் கோயில்களில் நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறநிலைய அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில், நாள் முழுதும் அன்னதான திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றார். வடபழநி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் ஏற்கனவே இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
வாசகர் கருத்து