மாவட்ட செய்திகள் நவம்பர் 13,2022 | 00:00 IST
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் கோவை எஸ்.என்.ஆர் கலை அரங்கில் நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராணுவ உயர் அதிகாரிகளிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர். இதில் ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கைகளாக முன் வைத்தனர். கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் குமார், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து