Advertisement

பள்ளி செல்லவா பணிக்கு செல்லவா? ஆசிரியர்கள் குழப்பம்

பொது நவம்பர் 18,2022 | 08:15 IST

Share

தீபாவளிக்கு மறுநாள் அளித்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே அறிவித்தபடி குரூப் 1 தேர்வு நாளை நடக்க உள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்களுக்கு கண்காணிப்பாளர் பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் பிளஸ் 1, பிளஸ் 2 க்கு நாளை பருவ இடைத்தேர்வும் நடக்கிறது. இதனால் பள்ளிக்கு வர வேண்டுமா , அல்லது தேர்வு பணிக்கு செல்ல வேண்டுமா என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தெளிவான முன் அறிவிப்பு வெளியிட பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X